Try GOLD - Free
கல்வியில் வேண்டாமே கருத்து வேறுபாடு!
Dinamani Dharmapuri
|May 28, 2025
என்னை (கட்டுரையாளர்) பொருத்தவரை உயர் கல்வி யாருடைய பொறுப்பு? மத்திய அரசா?, மாநில அரசா? என்ற கேள்வி எழுமானால் இருவருக்குமே சமமான பொறுப்பு என்றுதான் என் பதில் இருக்கும். இந்த விஷயத்தில் மத்திய-மாநில அரசுகள் அரசியல் அதிகாரப் போட்டியைத் தவிர்த்து நாட்டு நலன், மாநில நலன் என்று யோசிக்க வேண்டும்.
-
நீதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தற்போது உலகின் நான்காவது பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது என்று பெருமையாகப் பேசினார். மாநிலத்தின் வளர்ச்சி, அதன்மூலம் நாட்டின் வளர்ச்சி என்று சில அறிவுரைகளையும் வழங்கினார் பிரதமர். 2047-ஆம் ஆண்டுக் குள் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக்கப்படும் என்றும் சொன்னார்.
பிரதமரின் பொருளாதார வல்லரசு மற்றும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சிபெற்ற நாடாக உருவாக வேண்டும் என்ற இந்த இலக்கை அடைய உயர் கல்வி மிகமிக அவசியம். இதை மத்திய, மாநில அரசுகள் முதலில் புரிந்துகொண்டு உயர் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் இந்த இலக்கு சாத்தியம்.
குறிப்பாக, இந்தியாவில் அதுவும் தென்னிந்தியாவில் இன்னும் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டுமானால், தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்கள் உயர் கல்வி தரவரிசையில் போட்டிபோட்டுக்கொண்டு முன்னேறுகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களில் படித்த பல மாணவர்கள் உலகம் முழுவதும் முக்கிய பதவிகளில் அமர்ந்து அந்தப் பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்விக்கும் கிடைத்த அங்கீகாரம் இது என்று பெருமையாகப் பேசுகிறார்கள்.
நாம் வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய இதெல்லாம் போதாது. 1976-இல் அவசரகால சட்டத்தின்போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு கொண்டுவரும் அரசியல் சட்டத்தைத் திருத்தினார். இந்த சட்டம் மாநிலங்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது என்பதுதான் உண்மை. இதன் விளைவு, மத்திய மாநில அரசுகள் கல்விக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யமுடியாமல் செய்துவிட்டது.
This story is from the May 28, 2025 edition of Dinamani Dharmapuri.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
மாற்றத்துக்கான தொடக்கம் இந்த வெற்றி
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர்
2 mins
November 04, 2025
Dinamani Dharmapuri
ஜாதி ஆதிக்கத்தில் பிகார் தேர்தல் அரசியல்!
பிகார் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஆகியவற்றில் ஜாதிய ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
2 mins
November 04, 2025
Dinamani Dharmapuri
படித்தால் மட்டும் போதுமா?
அண்மைக்காலமாக உயர் கல்வியில் சேர்க்கை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது பள்ளிக் கல்வி, உயர் கல்வியில் மாணவிகள் சேர்க்கையானது பெருமை கொள்ளும் வகையில் உள்ளது. ஒட்டுமொத்த அளவில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
2 mins
November 04, 2025
 Dinamani Dharmapuri
மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டி
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற எஸ்ஆர்எம் ஐஎஸ்டி சேர்மன் கோப்பை பள்ளிகள் இடையிலான மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டிகளில் தஞ்சாவூர், ஆத்தூர், திருநெல்வேலி அணிகள் பட்டம் வென்றன.
1 min
November 04, 2025
 Dinamani Dharmapuri
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
435 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர்
1 mins
November 04, 2025
Dinamani Dharmapuri
அன்புள்ள ஆசிரியருக்கு...
சட்டம் இல்லை
1 min
November 04, 2025
Dinamani Dharmapuri
பயிற்சியாளர் நெகிழ்ச்சி..
சாம்பியன் கோப்பை வென்ற உணர்ச்சிப் பெருக்கில் இருந்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர், மரியாதை மற்றும் மகிழ்ச்சி நிமித்தமாக ஒருவரின் கால்களை பிடித்த தருணம் பெரிதும் கவனம் ஈர்த்தது. அவர் அமோல் மஜூம்தார். இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர்.
1 min
November 04, 2025
Dinamani Dharmapuri
வாரிசுகளின் கடமை
அரசு ஊழியர்கள் பெற்றோரைப் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
2 mins
November 03, 2025
Dinamani Dharmapuri
திவ்யா தேஷ்முக் வெளியேறினார் 2-ஆவது சுற்றில் பிரணவ், கார்த்திக்
ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் நடப்பு மகளிர் உலகக் கோப்பை சாம்பியனான இந்தியாவின் திவ்யா தேஷ்முக், முதல் சுற்று தோல்வியுடன் வெளியேறினார்.
1 min
November 03, 2025
Dinamani Dharmapuri
வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக வழக்கு
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
1 mins
November 03, 2025
Translate
Change font size
