Try GOLD - Free

பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்...

Dinamani Cuddalore

|

October 29, 2025

இந்தக் காலத்தில் திமுகவின் பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.

- முனைவர் கோ.விசுவநாதன்

அப்போதெல்லாம் திமுகவின் பொதுக் கூட்டம் இரண்டு வகையாக இருக்கும். சாதாரண பொதுக்கூட்டம், சிறப்புப் பொதுக்கூட்டம் என்று வகைப்படுத்தப்படும். சிறப்பு பொதுக்கூட்டத்துக்கு அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் போன்ற பெரிய தலைவர்கள் அழைக்கப்படுவார்கள். சிறப்புக் கூட்டத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படும். ஆண்களுக்கு ஒரு ரூபாய்; பெண்களுக்கு எட்டணா. அந்தக் காலத்தில் பெண்களையும் அரசியல் கூட்டங்களுக்கு அழைக்கும் அளவுக்கு திராவிட கட்சிகளின் மேடைப்பேச்சு இருந்தது. அவர்கள் பெண்களுக்காகவும் பேசினார்கள். தினந்தோறும் அண்ணாவும் மூத்த தலைவர்களும் ஏதாவது பொதுக்கூட்டங்களில் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள்.

இப்போது பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றால் பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டும். அவர்கள் உட்காருவதற்கு இருக்கைகள், விளம்பர விளக்குகள், இதுதவிர கூட்டத்துக்கு வருபவர்களுக்கு உணவு மற்றும் இதர வசதிகளை கூட்டத்தை நடத்துபவர் செய்துதர வேண்டும். இதேபோல், கூட்டத்துக்கு வருபவர்களுக்கு வாகன வசதியும் செய்து தரவேண்டும். அந்தக் காலத்தில் நாங்கள் இந்த வசதி எல்லாம் செய்து தரவில்லை. அப்போது, கூட்டத்துக்கு வந்தவர்கள் தானாக வந்தவர்கள்தான். பொதுக்கூட்டத்துக்கு வருபவர்கள் தரையில்தான் உட்காருவார்கள்.

அண்ணா கட்சி நிகழ்ச்சிக்குச் செல்லும் போதெல்லாம் மாவட்டச் செயலாளர் முதல் கிளைக் கழகச் செயலாளர் வரை எல்லோர் பெயரும் சொல்லி 'அவர்களே' என்று அழைத்து அதன்பின்தான் தமது உரையைத் தொடங்குவார். இதனால், அந்தக் கட்சித் தொண்டர்களுக்கு உள்ளூரில் மதிப்பு மரியாதை கூடியது. சில பெயர் விடுபட்டுப் போனால் தமது உரையின் நடுவில் அவர்கள் பெயரை மறக்காமல் குறிப்பிடுவார். அண்ணாவின் இந்த அரசியல்பாணி பின்னாளில் எல்லா கட்சியினராலும் பின்பற்றப்பட்டது. அது இன்றுவரை தொடர்கிறது.

கட்சித் தொண்டர்களை 'தம்பிகளே' என்றுதான் அழைப்பார் அண்ணா. கட்சியில் குடும்ப பாசத்தை புகுத்திய புதுமையாளர் அண்ணா. அதன் பிறகு கருணாநிதி 'உடன்பிறப்பே' என்று அழைத்தார். எம்ஜிஆர் 'என் ரத்தத்தின் ரத்தமே' என்று அழைத்தார். இவையெல்லாம் தொண்டர்களிடையே இடைவெளி இல்லா நெருக்கத்தை அதிகரித்தது.

MORE STORIES FROM Dinamani Cuddalore

Dinamani Cuddalore

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

November 03, 2025

Dinamani Cuddalore

வாரிசுகளின் கடமை

அரசு ஊழியர்கள் பெற்றோரைப் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

time to read

2 mins

November 03, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

சமன்செய்து சீர்தூக்கும் கோல்!

தமிழர்களின் பண்பாட்டையும் தொன்மையையும் விளக்கும் எத்தனையோ விதமான பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில மறைந்து போயின; பல நமக்கு மறந்து போயின. அவ்வாறு மறந்து விட்டாலும் அல்லது இழந்து விட்டாலும் நம் நெஞ்சை விட்டு அவை இன்னும் அகலவில்லை.

time to read

3 mins

November 03, 2025

Dinamani Cuddalore

அன்புள்ள ஆசிரியருக்கு...

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.

time to read

1 min

November 03, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Cuddalore

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Cuddalore

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Cuddalore

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size