Try GOLD - Free

இரு கட்டங்களாக பிகார் தேர்தல்

Dinamani Cuddalore

|

October 07, 2025

நவ. 6, 11-இல் வாக்குப் பதிவு; நவ. 14-இல் முடிவுகள் அறிவிப்பு

இரு கட்டங்களாக பிகார் தேர்தல்

பிகார் சட்டப்பேரவைக்கு வரும் நவ. 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவ. 14-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதுகுறித்த அறிவிப்பை தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது:

243 தொகுதிகளைக் கொண்ட பிகார் பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். நவ. 6-ஆம் தேதி நடைபெறும் முதல் கட்டத்தில் 121 தொகுதிகளுக்கும், நவ. 11-ஆம் தேதி இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறும்.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவ. 14-ஆம் தேதி எண்ணப்படும். ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறைகளும் நவ. 16-ஆம் தேதி நிறைவு செய்யப்பட்டுவிடும்.

வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் கடைசி சுற்றுக்கு முந்தைய சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

MORE STORIES FROM Dinamani Cuddalore

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

October 11, 2025

Dinamani Cuddalore

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் பலியிடத் தடை

உயர்நீதிமன்றம் உத்தரவு

time to read

1 mins

October 11, 2025

Dinamani Cuddalore

மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்

மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

time to read

1 min

October 10, 2025

Dinamani Cuddalore

மருந்து ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்

கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் உரிய ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனக் கூறி மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

time to read

1 min

October 10, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

பள்ளிகொண்டா ரங்கநாதர்!

தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.

time to read

1 mins

October 10, 2025

Dinamani Cuddalore

கேரள பேரவையில் அமளியில் ஈடுபட்ட 3 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகளில் தங்க முலாம் பூசப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் தலைமை அவைக் காவலர் காயமடைந்ததையடுத்து, 3 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

time to read

1 min

October 10, 2025

Dinamani Cuddalore

பாராகிளைடர் தாக்குதல்: மியான்மர் ராணுவம் ஒப்புதல்

மியான்மரில் பௌத்த திருவிழாவின்போது பாராகிளைடர் மூலம் தாக்குதல் நடத்தியதை மியான்மர் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.

time to read

1 min

October 10, 2025

Dinamani Cuddalore

நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!

நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.

time to read

2 mins

October 10, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

விமானப் படையின் திறனை உலகுக்கு வெளிப்படுத்திய 'ஆபரேஷன் சிந்துார்'

'மிகக் குறைந்த நாள்களில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைக்கு போர் விமானங்களின் சக்தியை திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா விமானப்படை நிரூபித்துள்ளது' என்று விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்தார்.

time to read

1 min

October 09, 2025

Dinamani Cuddalore

சபலென்கா, கெளஃபி வெற்றி

சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

October 09, 2025

Translate

Share

-
+

Change font size