Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

கர்நாடகத்தில் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிடவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை

Dinamani Cuddalore

|

June 20, 2025

உச்சநீதிமன்றம் உத்தரவு

- நமது சிறப்பு நிருபர்

நமது சிறப்பு நிருபர் புது தில்லி, ஜூன் 19: கர்நாடகத்தில் ‘தக் லைஃப்’ படத்தைத் திரையரங்குகளில் வெளியிடவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

‘ஒருவரின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக, திரைப்படம், நகைச்சுவை அல்லது ஸ்டாண்ட்-அப் காமெடி போன்றவற்றை நிறுத்த முடியாது. அவற்றை சட்டப்படி எதிர்கொள்ள வழிமுறைகள் உள்ளன’ என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் படத்தை கர்நாடகத்தில் திரையிட எதிர்ப்பு வலுப்பது தொடர்பாக எம். மகேஷ் ரெட்டி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அதன் விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஏ. வேலன், கன்னட சாகித்திய பரிஷத் அமைப்பின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சஞ்சய் நூலி, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஆகியவற்றின் வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

MORE STORIES FROM Dinamani Cuddalore

Dinamani Cuddalore

பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்...

இந்தக் காலத்தில் திமுகவின் பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.

time to read

3 mins

October 29, 2025

Dinamani Cuddalore

தில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பேருந்தில் தீ

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 3இல் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஷட்டில் பேருந்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீப்பிடித்ததாக ஐஜிஐ காவல் சரக துணை ஆணையர் விசித்ரா வீர் தெரிவித்தார்.

time to read

1 min

October 29, 2025

Dinamani Cuddalore

புஷ்கர் கால்நடை கண்காட்சி: ரூ.15 கோடி குதிரை, ரூ.23 கோடி எருமை கவனம் ஈர்ப்பு!

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றான ராஜஸ்தானின் புஷ்கர் கால்நடை கண்காட்சியில், ரூ. 15 கோடி மதிப்பிலான குதிரை, ரூ. 23 கோடி மதிப்புகொண்ட எருமை மற்றும் வெறும் 16 அங்குல உயரமே உள்ள பசு ஆகியவை விற்பனைக்கு வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

time to read

1 min

October 29, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: 20 பேர் இந்திய அணி பங்கேற்பு

வரும் நவம்பர் மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸில் 20 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது என பிஎஃப்ஐ தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

October 29, 2025

Dinamani Cuddalore

தமிழக ஆட்சி அகற்றப்படுவது உறுதி

தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், ஆட்சியிலிருந்து திமுக அரசு அகற்றப்படுவது உறுதி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

October 29, 2025

Dinamani Cuddalore

லாப நோக்க விற்பனையால் சரிந்த பங்குச் சந்தை

லாப நோக்க விற்பனை மற்றும் ஆசிய சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிவுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

October 29, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

அரையிறுதி: இன்று சந்திக்கும் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து

குவாஹாட்டி, அக். 28: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள், புதன்கிழமை (அக். 29) மோதுகின்றன.

time to read

1 min

October 29, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் பல லட்சம் பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க திங்கள்கிழமை மாலை கோயில் கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

time to read

1 mins

October 28, 2025

Dinamani Cuddalore

30 நிமிட இடைவெளியில் போர் விமானம், ஹெலிகாப்டரை இழந்தது அமெரிக்கா

அமெரிக்காவின் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானந்தாங்கிக் கப்பலில் இருந்த ஒரு போர் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும், வெறும் 30 நிமிஷ இடைவெளியில் தனித்தனியாக விபத்துக்குள்ளாகி தென் சீன கடல் பகுதியில் விழுந்தன.

time to read

1 min

October 28, 2025

Dinamani Cuddalore

மகிழ்ச்சியைக் கூட்டும் மனநலன்!

நரம்பியல் ஆய்வுகள் நம்மில் நான்கு பேரில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றன. உடல் நலத்தைப் போலவே மனநலன் குறித்தும் பேச வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது. உலக அளவில் நம்மில் 8 பேரில் ஒருவர்தான் நல்ல மனநலனுடன் வாழ்வதாகக் கூறப்படுகிறது.

time to read

2 mins

October 28, 2025

Translate

Share

-
+

Change font size