Try GOLD - Free
தரமான கல்வி... வளமான வாழ்வு!
Dinamani Cuddalore
|April 19, 2025
பள்ளிக் கல்விதான் ஒரு மாணவரின் ஆளுமையை நிர்ணயிக்கும். தற்போதைய நினைவாற்றல் அடிப்படையில் கற்பித்தல் முறையானது, மாணவனது சிந்திக்கும் திறனை வளர்க்காது. சுய சிந்தனையோடு ஒரு பொருண்மையை அலசி ஆராயும் அறிவாற்றல் கொண்டிருப்பது இன்றைய நவீன உலகத்தில் வெற்றி பெற இன்றியமையாததாகும்.
கற்றோருக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பது கல்விக்கு சமுதாயம் கொடுக்கும் அங்கீகாரம். பிள்ளைப் பிராயத்தில் சரியான வகையில் கல்வி புகட்டப்பட வேண்டும். இது பெற்றோரின் கடமை மட்டுமல்ல, சமுதாயத்தின் ஒட்டுமொத்த பொறுப்புமாகும். அரசாங்கம் எல்லாவகையிலும் இளைய சமுதாயத்துக்கு தரமான கல்வி கிடைப்பதற்கு உரிய கட்டமைப்பு, ஆசிரியர் நியமனம், மற்ற நிர்வாக அமைப்புகள் ஆகியவை நிறைவேற உரிய தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சுதந்திர இந்தியாவில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து நமது தேசத் தலைவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 1948-49 இல் அமைத்த கமிஷன் உயர் கல்வியை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து பரிந்துரை அளித்தது. 1952-53 இல் டாக்டர் லக்ஷ்மணசாமி முதலியார் தலைமையில் இடைநிலைக் கல்வி பிரச்னைகள் ஆராயப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
1968-ஆம் ஆண்டு கல்விக்கான திட்டம் முதலில் கொள்கை அளவில் வகுக்கப்பட்டது. அதன்படி, தேசிய வளர்ச்சி, தேசிய ஒருங்கிணைப்பு, ஒற்றுமை முக்கிய இலக்காக வைக்கப்பட்டது. 1990 இல் எல்லாருக்குமான கல்வி என்ற முழக்கம் உலகெங்கிலும் பரவியது. அதன் விளைவாக, 2002 ஆம் ஆண்டு கல்வி அடிப்படை உரிமையாக 86-ஆவது அரசியல் சாசன திருத்தம் மூலம் 21 ஆ பிரிவு சேர்க்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டு 6 வயதிலிருந்து 14 வயது வரை கட்டாய இலவசக் கல்வி உறுதி செய்யப்பட்டது.
ஐ.நா.சபை 2015-ஆம் ஆண்டு நாடுகள் அடைய வேண்டிய வளர்ச்சிக்கான இலக்குகளை அறிவித்தது. தரமான கல்வி அளிப்பது, பாரபட்சமற்ற உயர் கல்வி ஆகியவை அதன் முக்கியமான இலக்குகள். இதன் பின்னணியில்தான் டாக்டர் கஸ்தூரிரங்கன், மேனாள் இஸ்ரோ சேர்மன் தலைமையில் மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையைத் தயாரிக்க ஜூன் 2017 ஆம் ஆண்டு குழு அமைத்தது.
This story is from the April 19, 2025 edition of Dinamani Cuddalore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Cuddalore
Dinamani Cuddalore
‘தன்னலமற்ற சேவை-ஒழுக்கம்’: ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு புகழாரம்
தன்னலமற்ற சேவை, ஒழுக்கம், தியாகம் ஆகியவை ஆர்எஸ்எஸ் அமைப்பின் பலமாகும்; ஒவ்வொரு ஆர்எஸ்எஸ் தொண்டருக்கும் எப்போதும் தேசமே முதன்மையானது என்று புகழாரம் சூட்டினார் பிரதமர் மோடி.
1 min
September 29, 2025
Dinamani Cuddalore
சத்தீஸ்கர்: பெண் உள்பட 3 நக்ஸல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரின் கான்கேர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் 1 பெண் நக்ஸல் உள்பட 3 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களைப் பற்றி தகவல் அளித்தால் ரூ.14 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
1 min
September 29, 2025

Dinamani Cuddalore
அமெரிக்காவால் இந்திய-ரஷிய நட்புறவு பாதிக்கப்படாது
வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ்
1 min
September 29, 2025
Dinamani Cuddalore
சுதேசி மூலமே சுயசார்பை எட்ட முடியும்: பிரதமர் மோடி
'சுதேசிக்கு ஆதரவளிப்பதன் மூலமே நாம் சுயசார்பை எட்ட முடியும்' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
September 29, 2025
Dinamani Cuddalore
அனுஷ்காவுக்கு 2-ஆவது தங்கம்
ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை 2 பதக்கங்கள் கிடைத்தன.
1 min
September 29, 2025
Dinamani Cuddalore
திருமலை பிரம்மோற்சவ கருடசேவை: திரளானோர் தரிசனம்
திருப்பதி, செப்.28: திருமலையில், ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின், 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி சேவை சாதித்தார். இரவு நடைபெற்ற கருடசேவையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
1 min
September 29, 2025

Dinamani Cuddalore
வாக்குகளைக் கவர நிறைவேற்ற முடியாத இலவசத் திட்டங்கள் அறிவிப்பு
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு
1 min
September 29, 2025
Dinamani Cuddalore
லடாக் வன்முறை: லேயில் 5-ஆவது நாளாக ஊரடங்கு நீட்டிப்பு
வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
1 min
September 29, 2025

Dinamani Cuddalore
மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி. ராஜா, மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார்.
1 min
September 29, 2025

Dinamani Cuddalore
உலக பயங்கரவாத மையம் பாகிஸ்தான்
ஐ.நா.வில் ஜெய்சங்கர் தாக்கு
1 mins
September 29, 2025
Translate
Change font size