Try GOLD - Free
நீட் தேர்வு விவகாரம்: முதல்வர்-எதிர்க்கட்சித் தலைவர் கடும் விவாதம்
Dinamani Chennai
|January 11, 2025
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இடையே பேரவையில் வெள்ளிக்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.
-
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியது: 4 ஆண்டுகளாகச் செய்தது தான் ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக எதுவும் இல்லை. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. நீட் தேர்வு 4 ஆண்டுகளாக நடந்துள்ளது. நீட் தேர்வில் தமிழகம் விதிவிலக்கு பெறுமா என்று மக்கள் கேட்கின்றனர் என்றார்.
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு கூறியது: திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்தோம். 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ராகுல் காந்தியும் கூறினார். ஆனால், 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வரவில்லை. நீங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது, நீட் தேர்வை ரத்து செய்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. இப்போதும் சொல்கிறேன். நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சிப்போம்.
எடப்பாடி பழனிசாமி: 2010-இல் நீட் தேர்வு வருவதற்கான அறிவிப்பாணை வந்தது. அப்போது மத்தியில் எந்த ஆட்சி (காங்கிரஸ்) இருந்து என்பது அனைவருக்கும் தெரியும். அந்தக் கூட்டணியில் திமுகவும் இடம் பெற்றிருந்தது. மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை இணையமைச்சராக இருந்தவர் திமுகவை சேர்ந்த காந்திச்செல்வன்.
This story is from the January 11, 2025 edition of Dinamani Chennai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber?Sign In
MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai
சருமநோயைப் போக்கும் சர்வேஸ்வரன்
நதிக்கரை நாகரிகம் தழைத்தோங்கியது, கௌதம முனிவர் காசித்தல சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டது, பாண்டிய மன்னனின் சருமநோய் சாபம் நீங்கப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்டது திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 22, 2026

Dinamani Chennai
ஃபால்டா தொகுதி மறுதேர்தலில் 86.11 சதவீத வாக்குப்பதிவு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற மறுதேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 86.11 சதவீத வாக்குகள் பதிவாகின.
1 min
May 22, 2026
Dinamani Chennai
இந்தியாவில் மின் நுகர்வு புதிய உச்சம்!
ஒரே வாரத்தில் 3-ஆவது முறை
1 min
May 22, 2026
Dinamani Chennai
கால் இழந்த சிறுமியின் சிகிச்சைக்கு முதல்வர் உதவ வேண்டும்
டிடிவி தினகரன்
1 min
May 22, 2026
Dinamani Chennai
மேற்கு வங்கம் மதரஸாக்களில் வந்தே மாதரம் கட்டாயம்: எதிர்க்கட்சிகள் கண்டனம்
மேற்கு வங்கத்தில் உள்ள மதரஸாக்களில் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கிய மாநில அரசின் உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
1 min
May 22, 2026
Dinamani Chennai
சமூக ஊடகங்களில் வைரலான 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'
எக்ஸ் வலைதள பக்கம் முடக்கம்
1 min
May 22, 2026

Dinamani Chennai
இந்தியாவின் வெளிநாட்டு முதலீடுகள் ஏப்ரலில் இரு மடங்கு அதிகரிப்பு
இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு, கடந்த ஏப்ரலில் அதற்கு முந்தைய மாதத்தைக் காட்டிலும் இருமடங்காக அதிகரித்து, 336.9 கோடி டாலரை எட்டியுள்ளது.
1 min
May 22, 2026

Dinamani Chennai
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்
சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அமல்ராஜ் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
May 22, 2026

Dinamani Chennai
மின் கட்டணம் உயர்த்தப்படாது
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
1 min
May 22, 2026

Dinamani Chennai
மு.க. ஸ்டாலின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: மறு விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழக சட்டப்பேரவைக்கு 2011- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மு.க. ஸ்டாலின் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நிறைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வழக்கை விடுவித்து, மறுவிசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
May 22, 2026
Translate
Change font size

