Try GOLD - Free

அங்கீகாரம் மறுக்கப்பட்ட காமெடியன்

Dinakaran Nagercoil

|

September 21, 2025

தமிழ் சினிமா உலகில் அதிகம் கொண்டாடப்படும் நடிகர்கள் என்றால் அது, கதாநாயகர்கள், கதாநாயகிகள் மட்டும்தான். இதுவரை குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களை தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடவில்லை, அவர்களின் நடிப்பை அங்கீகரிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் காமெடி நடிகர்கள் என்றாலும் நாகேஷ், மனோரமா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, வடிவேலு, சந்தானம் என இன்றைக்கு வரை குறிப்பிட்ட சிலரது திறமையை மட்டுமே தமிழ் சினிமா ரசிகர்கள் அங்கீகரித்துள்ளார்கள். ஆனால் பெரிய அளவில் சினிமா இயக்குனர்களால் அங்கீகரிக்க மறுக்கப்பட்ட காமெடி நடிகர்களில் ஒருவர் ஓமகுச்சி நரசிம்மன் பற்றிய தொகுப்பு இது.

ஒல்லியான உடல், தனித்துவமான உடல்மொழி, காதோரம் உள்ள நரைத்த முடி என பார்த்தாலே நகைச்சுவை உணர்வை வரவழைக்கும் தோற்றத்தை உடையவர் நரசிம்மன். இவரது தோற்றத்தினாலேயே ‘ஓமக்குச்சி' நரசிம்மன் என்ற பெயர் பெற்றார் அவர்.

1936ம் ஆண்டு திருச்சியை பூர்வீகமாக கொண்ட பெற்றோருக்கு கும்பகோணத்தில் பிறந்தவர் தான் நரசிம்மன். கோயில் நகரத்தில் பிறந்த இவர் படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதன்பேரில் கும்பகோணம் அரசு பள்ளியில் தனது பள்ளி கல்வியை தொடங்கினார். வகுப்பில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். படிப்பில் படு கெட்டியாகவும், நடிப்பில் படு சுட்டியாகவும் வளர்ந்து வந்த நரசிம்மன் சிறுவயதிலிருந்தே கலையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் பள்ளியில் நடக்கும் அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பரிசு வென்று தனது கலை தாகத்தை தீர்த்துக்கொண்டார்.

மேடை நாடகம், கலை நிகழ்ச்சிகள் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய நரசிம்மன் சினிமா வாய்ப்பும் தேடி அலைந்தார். நாடகங்களில் குணச்சித்திர வேடம் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார். அப்படி அவர் நடித்த ஒரு நாடகத்தை பார்க்க வந்த ஜெமினி ஸ்டுடியோஸ் குழுவினர், நரசிம்மனின் நடிப்பு திறமையை பார்த்து அவரை தங்களது அடுத்த படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டனர்.

அதன்படி 1953ம் ஆண்டு ஜெமினி ஸ்டுடியோஸ் மிக பிரமாண்டமாக தயாரித்து கொத்தமங்கலம் சுப்பு இயக்கத்தில் கே.பி. சுந்தராம்பாள் நடித்து வெளியான 'அகத்தியர்' படம் மூலம் முதன்முதலில் திரையில் தோன்றினார் நரசிம்மன். பெற்றோரின் அனுமதியுடன் தனது 16 வயதில் நடிப்பு பயணத்தை தொடங்கினார் நரசிம்மன். அதன்பிறகு சிறு சிறு வேடங்களில் பல படங்களில் நடித்து வந்தார். அதே நேரத்தில் படிப்பில் மிக கெட்டிக்காரரான அவர் அதையும் விட்டுவிடவில்லை. பள்ளி படிப்பை முடித்த பிறகு தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.

MORE STORIES FROM Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தலித் என்பதால் டிஜிபி டார்ச்சர் செய்ததே என் கணவர் தற்கொலைக்கு காரணம்

அரியானா ஏடிஜிபியின் ஐஏஎஸ் மனைவி பரபரப்பு புகார்

time to read

1 min

October 10, 2025

Dinakaran Nagercoil

தமிழக மீனவர்கள் 47 பேர் துப்பாக்கி முனையில் கைது

5 விசைப்படகுகள் பறிமுதல்

time to read

1 min

October 10, 2025

Dinakaran Nagercoil

சனிக்கிழமை நாயகனின் டபுள் கேம் அரசியலில் நிஜ நடிகர்

சினிமாவில் வீர வசனம் பேசி அதிரடி காட்டி ரசிகர்களை கவரும் நடிகர்களில் ஒரு சிலர், நிஜ வாழ்க்கையில் ரீல் ஹீரோவாகத்தான் இருக்கின்றனர். ரீல்ஸ்க் காக வீடியோ போடுப வர்கள் கூட நிஜ வாழ்க் கையில் ஹீரோவாக மாறிவிடுகின்றனர். ஆனால், எங்களுக்கு ரோல் மாடல் என கூறி ஹீரோவாக கொண்டா டப்படும் டாப் சினிமா நடிகரின் ஒரு பேச்சு தான் இப்போது வைரலாகி விமர்சனத் துக்கு உள்ளாகி உள்ளது.

time to read

3 mins

October 10, 2025

Dinakaran Nagercoil

இறுதிக்கட்டத்தை எட்டிய போர் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் -ஹமாஸ் ஒப்புதல்

இஸ்ரேல் காசா போர் தொடங்கி கடந்த செவ்வாய்க்கிழமையுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த நீடித்த போரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்களும் பலியாகி விட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து, கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர் முயற்சிகளை எடுத்து வந்தன. இதன்ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றை அறிவித்திருந்தார்.

time to read

1 min

October 10, 2025

Dinakaran Nagercoil

சாதிவாரி கணக்கெடுப்பு

கர்நாடக மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் புதியதாக மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. 2015ம் ஆண்டு சித்தராமையா முதல்வராக பதவியேற்ற போது சாதிவாரி கணக்கெடுப்பு ரூ.160 கோடி செலவில் நடத்தப்பட்டது. மேலும் அதன் இறுதி அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையை அமல்படுத்த பாஜ, மஜத கட்சிகள் உள்பட காங்கிரஸ் தலைவர்களே சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜ ஆட்சி அமைந்த பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி 2023ம் ஆண்டு அமைந்தது. அதன் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த அவர் முயற்சி மேற்கொண்டார். ஆனால் கணக்கெடுப்பு நடத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் தற்போது நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கும். எனவே அந்த அறிக்கையை கைவிட வேண்டும் என்று பாஜ தலைவர்கள் வலியுறுத்தினர்.

time to read

1 min

October 10, 2025

Dinakaran Nagercoil

காலணி வீசப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தேன்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

time to read

1 min

October 10, 2025

Dinakaran Nagercoil

தென் பெண்ணையாறு நீர் பங்கீடு ஒன்றிய அரசு பிரமாணப்பத்திரம்

தென் பெண்ணை ஆறு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஒன்றிய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

time to read

1 min

October 10, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

புன்னகையை மட்டும் காட்டிட்டு ஆதரவாளர்களை தவிக்க விடும் பலாப்பழக்காரர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிர்வாகிகள் கண்டுகொள்ளாததால் இலைக்கட்சி மாஜி கடும் அப்செட்டில் இருக்கிறாராமே..\" எனக் கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

time to read

2 mins

October 10, 2025

Dinakaran Nagercoil

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கன்னியாகுமரி இளைஞர் கைது

time to read

1 min

October 10, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஹிஜாப் அணிந்த தீபிகாவுக்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு

ஹிஜாப் அணிந்து நடித்த தீபிகா படுகோனேவை இந்துத்துவ அமைப்புகள் கடுமையாக விமர்சனம் செய்ததால் சமூக வலைத்தளத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

October 10, 2025

Translate

Share

-
+

Change font size