Prøve GULL - Gratis

அங்கீகாரம் மறுக்கப்பட்ட காமெடியன்

Dinakaran Nagercoil

|

September 21, 2025

தமிழ் சினிமா உலகில் அதிகம் கொண்டாடப்படும் நடிகர்கள் என்றால் அது, கதாநாயகர்கள், கதாநாயகிகள் மட்டும்தான். இதுவரை குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களை தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடவில்லை, அவர்களின் நடிப்பை அங்கீகரிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் காமெடி நடிகர்கள் என்றாலும் நாகேஷ், மனோரமா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, வடிவேலு, சந்தானம் என இன்றைக்கு வரை குறிப்பிட்ட சிலரது திறமையை மட்டுமே தமிழ் சினிமா ரசிகர்கள் அங்கீகரித்துள்ளார்கள். ஆனால் பெரிய அளவில் சினிமா இயக்குனர்களால் அங்கீகரிக்க மறுக்கப்பட்ட காமெடி நடிகர்களில் ஒருவர் ஓமகுச்சி நரசிம்மன் பற்றிய தொகுப்பு இது.

ஒல்லியான உடல், தனித்துவமான உடல்மொழி, காதோரம் உள்ள நரைத்த முடி என பார்த்தாலே நகைச்சுவை உணர்வை வரவழைக்கும் தோற்றத்தை உடையவர் நரசிம்மன். இவரது தோற்றத்தினாலேயே ‘ஓமக்குச்சி' நரசிம்மன் என்ற பெயர் பெற்றார் அவர்.

1936ம் ஆண்டு திருச்சியை பூர்வீகமாக கொண்ட பெற்றோருக்கு கும்பகோணத்தில் பிறந்தவர் தான் நரசிம்மன். கோயில் நகரத்தில் பிறந்த இவர் படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதன்பேரில் கும்பகோணம் அரசு பள்ளியில் தனது பள்ளி கல்வியை தொடங்கினார். வகுப்பில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். படிப்பில் படு கெட்டியாகவும், நடிப்பில் படு சுட்டியாகவும் வளர்ந்து வந்த நரசிம்மன் சிறுவயதிலிருந்தே கலையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் பள்ளியில் நடக்கும் அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பரிசு வென்று தனது கலை தாகத்தை தீர்த்துக்கொண்டார்.

மேடை நாடகம், கலை நிகழ்ச்சிகள் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய நரசிம்மன் சினிமா வாய்ப்பும் தேடி அலைந்தார். நாடகங்களில் குணச்சித்திர வேடம் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார். அப்படி அவர் நடித்த ஒரு நாடகத்தை பார்க்க வந்த ஜெமினி ஸ்டுடியோஸ் குழுவினர், நரசிம்மனின் நடிப்பு திறமையை பார்த்து அவரை தங்களது அடுத்த படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டனர்.

அதன்படி 1953ம் ஆண்டு ஜெமினி ஸ்டுடியோஸ் மிக பிரமாண்டமாக தயாரித்து கொத்தமங்கலம் சுப்பு இயக்கத்தில் கே.பி. சுந்தராம்பாள் நடித்து வெளியான 'அகத்தியர்' படம் மூலம் முதன்முதலில் திரையில் தோன்றினார் நரசிம்மன். பெற்றோரின் அனுமதியுடன் தனது 16 வயதில் நடிப்பு பயணத்தை தொடங்கினார் நரசிம்மன். அதன்பிறகு சிறு சிறு வேடங்களில் பல படங்களில் நடித்து வந்தார். அதே நேரத்தில் படிப்பில் மிக கெட்டிக்காரரான அவர் அதையும் விட்டுவிடவில்லை. பள்ளி படிப்பை முடித்த பிறகு தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.

FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சீமான், நடிகை விஜயலட்சுமி நிபந்தனையற்ற மன்னிப்பு

உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

விஜய் கூட்டத்தில் 41 பேர் மரணம் எஸ்.ஐ.டி. விசாரணையில் நம்பிக்கை உள்ளது

கரூரில் நடந்த 41 பேர் மரணம் தொடர்பாக எஸ்.ஐ.டி. குழு விசாரணையில் நம்பிக்கை உள்ளது என்று அன்புமணி கூறினார்.

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

காசா இனப் படுகொலையை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

தெருக்கள், சாலை, நீர்நிலை, கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறை

குடியிருப்பு தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் மற்றும் வருவாய் கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குதல் மற்றும் மறுபெயரிடுதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 mins

October 09, 2025

Dinakaran Nagercoil

சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி

அணையில் இருந்து அதிக நீர் திறந்ததால் பாதிப்பு

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

ஆந்திராவில் கோர சம்பவம் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பலி

ஆந்திராவில் நேற்று ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வேதியியல் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகள் அறிவிப்பு

உலோக-கரிம கட்டமைப்பு உருவாக்கத்திற்காக, வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

முதல்வர் அறிவித்தபடி முதற்கட்டமாக 23 பேருக்கு ரூ.15.50 லட்சம் நிவாரணம்

விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

ரூ.19,650 கோடி செலவில் அமைக்கப்பட நவிமும்பை விமான நிலையம் திறப்பு

பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிரான மனு நாளை விசாரணை

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சிபிஐ விசாரணை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.

time to read

1 min

October 09, 2025

Translate

Share

-
+

Change font size