Try GOLD - Free

மலிவு விலையில் வாங்கப்படும் ரஷ்ய கச்சா எண்ணெயால் கொள்ளை லாபம் யாருக்கு?

Dinakaran Nagercoil

|

July 08, 2025

என்ன தான் மிரட்டினாலும், என்ன தான் கெஞ்சினாலும் உக்ரைன் மீதான போரை நிறுத்த மறுக்கிறார் ரஷ்ய அதிபர் புடின். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நீடிக்கும் இந்தப் போரை நிறுத்த முடியாமல் தவிக்கிறார் டிரம்ப். உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவி செய்தன. செய்து வருகின்றன. அதனால் சமாளிக்கிறது. ஆனால் ரஷ்யா எப்படி சமாளிக்கிறது? அந்த வியூகத்தில் யோசித்து இப்போது இந்தியாவுக்கு 500 சதவீத வரி விதிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். உக்ரைன்-ரஷ்யா போருக்கும் இந்தியாவுக்கு 500 சதவீத வரியை அமெரிக்கா விதிப்பதற்கும் என்ன தொடர்பு என்று பார்த்தால்தான் தெரியும் ரஷ்யா-இந்தியா இடையிலான கச்சா எண்ணெய் இறக்குமதி வர்த்தகம்.

மலிவு விலையில் வாங்கப்படும் ரஷ்ய கச்சா எண்ணெயால் கொள்ளை லாபம் யாருக்கு?

உக்ரைன் போருக்கு முன்னர் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்து வருவாய் பார்த்தது ரஷ்யா. ஆனால் உக்ரைனைத் தாக்கியதால் ஒரே நாளில் ரஷ்யாவுடனான அனைத்து வர்த்தகங்களையும் நிறுத்திவிட்டன ஐரோப்பிய யூனியன் நாடுகள். தவித்துப்போன ரஷ்யா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் தருவதாகக் கூறிப்பார்த்தும் யாரும் சீண்டவில்லை. இந்த நிலையில்தான் இந்தியாவும், சீனாவும் மிகவும் தைரியமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவெடுத்தன. குறிப்பாக 2022-க்குப் பிறகு, இந்தியா ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. 2025 மே மாதத்தில் மட்டும் இந்தியா ரஷ்யாவிலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 19.6 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது. இது கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவு என்கிறது வர்த்தகப் பிரிவு. இந்த இறக்குமதி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுவும் பேரல் 75 டாலர் என்ற குறைந்த விலையில். இதேபோல் சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இப்போது இந்தியா, சீனாவுக்கு ரஷ்யாவின் கச்சா எண்ணெய்தான் மிகப்பெரிய பலம். அதேபோல் உக்ரைனுக்கு எதிரான 3 ஆண்டுகாலப் போரில் எந்தவிதப் பொருளாதார நெருக்கடியும் இல்லாமல் ரஷ்யா கடந்து செல்வதற்கும் இந்த வர்த்தகந்தான் காரணம்.

இதை அறிந்தும் விடுவாரா டிரம்ப்? அதனால் தான் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 விழுக்காடு வரி விதிப்பது குறித்து அமெரிக்காவில் விவாதம் நடக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள ரஷ்யத் தடைகள் சட்ட மசோதா 2025 அமல்படுத்தப்பட்டால், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் அல்லது யுரேனியம் வாங்கும் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 500 விழுக்காடு வரி விதிக்கப்படும். இது இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகள் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.

MORE STORIES FROM Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழகத்தில் 16ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் மாலை இரவில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தீபாவளி நாளில் பெய்யும் மழை நிலவரம் குறித்து அடுத்த வாரம் தெரிவிக்கப்படும்.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

விஜய் தாமதமாக வந்ததே காரணம்...

முதல் பக்க தொடர்ச்சி

time to read

3 mins

October 11, 2025

Dinakaran Nagercoil

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவி இந்தியர்கள் உட்பட 50 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை

ஈரா னின் எண்ணெய் ஏற்றும திக்கு உதவிய இந்திய நிறு வனங்கள் மற்றும் நபர்கள் உட்பட 50 பேருக்கு எதி ராக அமெரிக்கா பொரு ளாதார தடைகளை விதித் துள்ளது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த நிறு வனங்கள், தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் கருவூலத்துறை இந்த தடை களை அறிவித்துள்ளன.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது

நெல்லித்தோப்பில் தொழுகை நடத்தலாம் மூன்றாவது நீதிபதி பரபரப்பு தீர்ப்பு

time to read

1 mins

October 11, 2025

Dinakaran Nagercoil

மாவட்ட வாரியாக 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு

தமிழ்நாடு முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

time to read

1 mins

October 11, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குடும்ப தகராறில் மனைவி வேறொருவருடன் ஓட்டம் 3 குழந்தைகளை கழுத்தறுத்து கொடூரமாக கொன்ற தந்தை

தஞ்சாவூர் அருகே பயங்கரம்

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

ஜெயஸ்வால் சத வெடி

வெ.இ.யுடன் 2வது டெஸ்ட்

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

பீகார் தேர்தல் 2 ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜினாமா

பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்த நிலையில் 2 ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்

வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

சிக்கலில் சிக்கிய நடிகரை வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சி நடப்பது பற்றி சொல்கிறார் wiki யானந்தா

சிக்கலில் மாட்டிய நடிகரை வைத்து இலைக்கட்சியும், மலராத கட்சியும் அரசியல் லாபம் தேடும் முயற்சியில் தீவிரம் காட்டி வர்றாங்களாமே.. என்றார் பீட்டர் மாமா.

time to read

1 min

October 11, 2025

Translate

Share

-
+

Change font size