Try GOLD - Free

வழிகாட்டும் தமிழகம்

Dinakaran Nagercoil

|

May 19, 2025

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநரின் அதிகார வரம்புகள் தெளிவாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளன. ஆளுநர் ஒரு மாநிலத்தின் நிர்வாக தலைவராக இருந்தாலும், அவர் அதிகார வரம்புகளுக்கு உட்பட்டே செயல்பட்டாக வேண்டும். ஆனால் ஒன் றியத்தில் பாஜ ஆட்சிக்காலம் தொடங்கிய நாளில் இருந்தே ஆளுநர்கள் பலர் அதிகப்பிரசங்கித்தனமா கவே செயல்பட்டு வருகின்றனர். அதிலும் தமிழ்நாட் டுக்கு வருகிற ஆளுநர்கள் 'தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்' என்ற போக்கில் செயல்படுகின்றனர்.

அதிலும் தற்போதைய ஆளுநரான ஆர்.என்.ரவி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிராகவும், அதன் மக்கள் நலத்திட்டங்களுக்கு எதிராகவும் அப்பட்டமாக செயல்பட்டு வருகிறார். ஒன்றிய அரசின் ஊதுகுழலாகவும், சனாதனத்தின் பாதுகாவலராகவும் தன்னை காட்டிக் கொள்வதில் அவருக்கு தற்பெருமை வேறு. அடங்காத காளையாய் திகழ்ந்த அவருக்கு, சுப்ரீம் கோர்ட் படியேறி தமிழக அரசு இப்போது மூக்கணாங்கயிறை கட்டியுள்ளது.

இந்தியாவின் இறையாண்மையை காப்பதிலும், மாநில உரிமையை கட்டிக் காப்பதிலும், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் தமிழகம் ஒரு வழிகாட்டியாய் திகழ்கிறது. சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு, வருங்காலத்தில் வாலாட்ட நினைக்கும் ஆளுநர்களுக்கும் கூட நெத் தியடியாகும். இந்த தீர்ப்பை சுட்டிக்காட்டியே மற்ற மாநிலங்களும் தங்கள் உரிமைகளை காக்க போராடும்.

MORE STORIES FROM Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நிச்சயதார்த்தத்தை உறுதி செய்த மோதிரம்

இந்திய அளவில் புகழ்பெற்ற நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா. நீண்ட நாள் காதலர்களான அவர்கள், சமீபத்தில் ரகசிய நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியானது. மேலும், வரும் பிப்ரவரி மாதம் அவர்களின் திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.

time to read

1 min

October 13, 2025

Dinakaran Nagercoil

தமிழகத்தில் விற்றுத் தீர்ந்த வெள்ளி கட்டிகள்

தங்கத்திற்கு மாற்றாக முதலீடு அதிகரிப்பு எதிரொலி

time to read

1 mins

October 13, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரையில் இருந்து தொடங்கிய நயினார் பிரசாரத்தை புறக்கணித்த எடப்பாடி

பாஜ தேசியத் தலைவர்களும் பங்கேற்கவில்லை

time to read

1 mins

October 13, 2025

Dinakaran Nagercoil

கட்டண கொள்ளை

பண்டிகை காலங்கள் வந்துவிட்டாலே பலருக்கும் பயணங்கள் கசப்பாகிவிடும். அதிலும் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் வேலையின் நிமித்தம் குடியிருப்போர், தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப படும் பாடு சொல்லி மாளாது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பெருநகரங்களில் வசிப்போர், தங்கள் சொந்த ஊருக்கு செல்லவும், பண்டிகை முடிந்த பின்னர் மீண்டும் நகரத்திற்கு திரும்பவும் பயணம் அடிப்படையில் பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. இரு மாதங்களுக்கு முன்பே தயார் நிலையில் இருந்தாலும், ரயில்களை பொறுத்த வரை தீபாவளி பண்டிகைக்கு டிக்கெட் முன்பதிவு 5 நிமிடங்களில் முடிந்து விடுகிறது.

time to read

1 min

October 13, 2025

Dinakaran Nagercoil

விபத்தால் பேச முடியாமல் சிரமப்பட்டேன்

சாய் துர்கா தேஜ் உருக்கம்

time to read

1 min

October 13, 2025

Dinakaran Nagercoil

ஆந்திராவில் கள்ளத்துக்கு முற்றுப்புள்ளி போலி மதுபானங்களை கண்டறிய விரைவில் புதிய செயலி அறிமுகம்

ஆந்திர மாநிலத்தில் சமீபகாலமாக கலப்பட மதுபான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மூலக்கலச்செருவு போலி மதுபான விவகாரம் ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வார்த்தைப் போருக்கு வழிவகுத்துள்ளது. போலி மதுபான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியான தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் ஜனார்தன் ராவை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும், இப்பிரச்னையை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனக்கு சாதகமாக மாற்றி வருகிறது.

time to read

1 min

October 13, 2025

Dinakaran Nagercoil

காட்டாளன் பர்ஸ்ட் லுக் வெளியீடு

கியூப்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ஷெரீப் முஹம்மது தயாரித்து வரும் ஆக்ஷன் திரில்லர் படம், 'காட்டாளன்'. இதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதில் ஆண்டனி வர்கீஸின் மிரட்டல் தோற்றம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. பான் இந்தியா அளவில் ஹிட்டான ஆக்ஷன் திரில்லரான ‘மார்கோ' படத்துக்கு பிறகு 'காட்டாளன்' படத்தை ஷெரீப் முஹம்மது தயாரிக்கிறார். பால் ஜார்ஜ் இயக்குகிறார்.

time to read

1 min

October 13, 2025

Dinakaran Nagercoil

ஐ.சி.யூ.வில்., அனுமதிக்கப்படவே இல்லை மருத்துவமனையில் ராமதாசை பார்க்காமல் சென்றவர் அன்புமணி

பாமகவை தொலைத்துவிட்டு, தொலைத்து விடுவேன் என கூறுகிறார் பதற்றத்தை உருவாக்குகிறார் அருள் எம்எல்ஏ சரமாரி குற்றச்சாட்டு

time to read

1 mins

October 13, 2025

Dinakaran Nagercoil

மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர் கைது

மேற்குவங்கத்தில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time to read

1 min

October 13, 2025

Dinakaran Nagercoil

அமெரிக்கா 100% வரி விதித்தால் கடும் நடவடிக்கை: சீனா எச்சரிக்கை

அரிய வகை தாதுக்கள், லிதியம் பேட்டரிகளை கொண்டு சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அந்த நாடு விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக சீனா மீதான இறக்குமதி வரி கூடுதலாக 100 சதவீதம் விதிக்கப்படும். இது வரும் நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

time to read

1 min

October 13, 2025

Translate

Share

-
+

Change font size