Try GOLD - Free
காத்து வாக்குல 2 கல்யாணம் தில்லாலங்கடி நர்சின் லீலைகள்
Dinakaran Nagercoil
|May 12, 2025
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (26). கொத்தனார். இவரது மனைவி அபிஷா (22). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. அபிஷாவின் சொந்த ஊர் குலசேகரம் அருகே உள்ள தும்பகோடு. திருமணத்துக்கு பின் அஜித்குமார் தனது மனைவி அபிஷாவின் வீட்டில் வசித்து வந்தார். அபிஷா அருமனை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி நர்சாக பணியாற்றினார். கடந்த 2ம் தேதி விடுமுறை முடிந்து வேலைக்கு சென்ற அபிஷா, அதன் பின்னர் அஜித்குமாரை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் தனது மனைவி எங்கே என்று அஜித்குமார் தேடி வந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அபிஷா வேறொரு வாலிபரை 2வதாக திருமணம் செய்த வீடியோக்கள் வெளியானது.
-
இதையடுத்து, தனது மனைவியை மீட்டு தருமாறு அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்து கதறினார்.
இன்ஸ்டாகிராமில் பழக்கம்
அபிஷாவை 2வதாக மணம் முடித்த வாலிபர் போலீசாரிடம் கூறுகையில், 'இரு ஆண்டுகளுக்கு முன், இன்ஸ்டாகிராம் மூலம் தான் எனக்கு அபிஷா அறிமுகம் ஆனார். முதலில் நண்பர்களாக இருந்தோம். அவளிடம் எனக்கு பெண் தேடும் படலம் நடப்பதாக கூறினேன். அப்போது அவர் எனக்கும் வீட்டில் மாப்பிள்ளை தேடுகிறார்கள். எனவே, நண்பர்களாக இருக்கும் நாம், இல்லறத்தில் இணைந்து விடுவோம் என்றார். எங்கள் வீட்டில் இந்த திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டார்கள். உனது வீட்டில் மட்டும் சம்மதம் வாங்கி, திருமணம் செய்வோம். பின்னர் எனது வீட்டுக்கு செல்வோம் என கூறினார். இதையடுத்து நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்' என்றார்.
This story is from the May 12, 2025 edition of Dinakaran Nagercoil.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
அமெரிக்கா-கனடா எல்லையில் ரூ.62 கோடி கோகெய்னுடன் இந்திய வம்சாவளி கைது
அமெரிக்கா - கனடா எல்லையில் ரூ.62 கோடி போதைப்பொருளுடன் இந்திய வம்சாவளி டிரைவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min
October 30, 2025
Dinakaran Nagercoil
குஜராத் கடற்கரையில் அத்துமீறி ரீல்ஸ் எடுக்க பென்ஸ் காரை கடலில் இறக்கியவர் கைது
ரீல்ஸ் எடுப்பதற்காக குஜராத் கடலில் பென்ஸ் காரை இறக்கியவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலில் சிக்கிய காரை கிரேன் மூலம் மீட்டனர்.
1 min
October 30, 2025
Dinakaran Nagercoil
மனைவியை சந்தேகிப்பது குடும்ப வாழ்க்கையை நரகமாக்கும்
நர்சுக்கு விவாகரத்து வழங்கி கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு
1 min
October 30, 2025
Dinakaran Nagercoil
போர் நிறுத்தத்தை மீறி காசாவில் இஸ்ரேல் குண்டுமழை குழந்தைகள் உட்பட 104 பேர் பலி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சியால், கடந்த 10ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆனால், இந்த ஒப்பந்தம் தொடக்கம் முதலே முழுமையாகப் பின்பற்றப்படவில்லை. இந்நிலையில், தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகர் அருகே இஸ்ரேல் படையினர் மீது ஹமாஸ் அமைப்பினர் நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் அதிகாரி குற்றம் சாட்டியிருந்தார். மேலும் போரின் தொடக்கத்தில் மீட்கப்பட்ட பணய கைதியின் சில உடல் பாகங்களை ஹமாஸ் ஒப்படைத்ததை அடுத்து இஸ்ரேல் ராணுவம் காசாவில் இருந்து வெளியேறியது.
1 min
October 30, 2025
Dinakaran Nagercoil
கிழக்கு லடாக் நிலவரம் குறித்து இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை
கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள நிலவரம் குறித்து இந்தியா- சீனா இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக சீனா தெரிவித்துள்ளது.
1 min
October 30, 2025
Dinakaran Nagercoil
சென்னையில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த புதுச்சேரி அரசு ஒப்பந்ததாரர் குத்திக்கொலை
போட்டு கொடுத்த தோழி ; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கணவன்
1 mins
October 30, 2025
Dinakaran Nagercoil
தமிழில் படம் இயக்கும் மலையாள நடிகை ஷாலின் ஜோயா
மலையாள நடிகையும், தமிழில் ‘கண்ணகி' என்ற படத்தில் நடித்தவரும், டி.வி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவருமான ஷாலின் ஜோயா தமிழில் படம் இயக்குகிறார். மலையாளத்தில் அவர் இயக்கிய 'தி ஃபேமிலி ஆக்ட்' என்ற படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த நிலையில், தற்போது ஆர்.கே இண்டர்நேஷனல் சார்பில் கே.எஸ். ராமகிருஷ்ணா தயாரிக்கும் 18வது படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். 'நக்கலைட்ஸ்' அருண் ஜோடியாக பிரிகிடா சகா நடிக்கிறார்.
1 min
October 30, 2025
Dinakaran Nagercoil
8 மணி நேரம்தான் நடிப்பேன்
ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'தி கேர்ள்ஃ பிரண்ட்’ திரைப்படம் நவம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
1 min
October 30, 2025
Dinakaran Nagercoil
ஹீரோ இல்லேன்னா வில்லன்
அறிமுக இயக்குநர் த. ஜெயவேல் இயக்கும் படம், 'ராம் அப்துல்லா ஆண்டனி'. மூன்று மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் பூவையார் ஹீரோவாக நடிக்கிறார். அஜய் அர்னால்ட், அர்ஜூன் ஆகியோர் மற்ற மாணவர்களாக நடிக்கின்றனர். \"மாணவர்களுக்கும் போலீஸ் துறைக்குமான ஆடுபுலி ஆட்டமாக விரியும் கதை இது. இதில் மிரட்டலான தோற்றத்தில், ஆர்வமிக்க கான்ஸ்டபிளாக நடித்திருக்கிறார் சவுந்தரராஜா. அவருடைய கதாபாத்திரம் பெரிதும் பேசப்படும்\" என்கிறது படக்குழு. இப்படம் இன்று தியேட்டர்களில் ரிலீசாகிறது.
1 min
October 30, 2025
Dinakaran Nagercoil
டிரைவர் இல்லாத காரில் பயணித்த சாமியார்
பெங்களூருவில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஓட்டுநர் இல்லாத காரில் சாமியார் ஒருவர் பயணம் செய்த காணொலி சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
1 min
October 30, 2025
Translate
Change font size

