Try GOLD - Free
காவிரி படுகை குறுவை சாகுபடிக்கு ...
DINACHEITHI - MADURAI
|June 17, 2025
1-ம் பக்கம் தொடர்ச்சி
-
பெஸ்ட்-ஆக ஏற்பாடு செய்திருக்கிறார்! நம்முடைய கோவி. செழியன் அவர்களை பற்றி சொல்லவேண்டும் என்றால், சட்டக் கல்லூரி மாணவராக கழக மேடைகளில் தன்னுடைய பயணத்தை தொடங்கி, தன்னுடைய உழைப்பால் கொள்கைப் பற்றால், தொண்டாற்றும் உள்ளத்தால் உழைத்து இன்றைக்கு, அமைச்சராக உயர்ந்து நிற்கிறார்! அவர் இன்னும் சிறப்படைய என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்!
அதேபோல், மாவட்ட ஆட்சியர் திருமதி பிரியங்கா பங்கஜம் ஐ . ஏ. எஸ் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள் ! கஷ்டப்பட்டு படித்து முன்னேறி, இன்று சிறப்பாக செயல்படும் மாவட்ட ஆட்சியர்களில் ஒருவராக தன்னுடைய பெயருக்கு பின்னால், தன் அம்மாவின் பெயரை சேர்த்து, அவரையும் பெருமைப்படுத்துபவராக இருக்கிறார்! மாவட்ட ஆட்சியருக்கும் அவருக்கு துணை நிற்கும் மாவட்ட அரசு அலுவலர்களுக்கும் எனது பாராட்டுகள்! வாழ்த்துகள்!
நேற்று, தஞ்சையில் பழைய பேருந்து நிலையத்தின் அருகில், தலைவர் கலைஞரின் சிலையைத் திறந்து வைத்தேன்! ஏன் என்றால், தஞ்சையையும் தலைவர் கலைஞரையும் பிரித்து பார்க்க முடியாது! ஒருங்கிணைந்த தஞ்சையின் மண்ணின் மைந்தன் அவர்! காவிரி வளர்த்த தமிழினத் தலைவர் அவர்! மாமன்னர் இராசராசனுக்கு சிலை அமைத்தவர் அவர்! பெரியகோயிலின் ஆயிரமாண்டு விழாவை நடத்தியவர் அவர்! பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தது முதல், இறுதியில் காவேரி மருத்துவமனையில் உயிர் பிரியும்வரை காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைக்காக குரல்கொடுத்தவர்! போராடியவர்! பிரதமர் வி.பி. சிங் மூலம், காவிரி நடுவர் மன்றமும் காவிரி ஆணையமும் அமையக் காரணமானவர்! இடைக்காலத் தீர்ப்பை பெற்றுத் தந்தவர் ! இறுதித் தீர்ப்பையும் பெற்றவர்!
பெருமையோடு சொல்கிறேன் ... காவிரியில், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது தலைவர் கலைஞர் அவர்களும், திராவிட முன்னேற்றக் கழகமும்தான்! அந்த வரிசையில்தான், தலைவர் கலைஞரின் தலைமைத் தொண்டனான நானும், டெல்டாகாரன் என்ற உணர்வோடு இன்றைக்கு இங்கு வந்திருக்கிறேன்!
This story is from the June 17, 2025 edition of DINACHEITHI - MADURAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெயில் சேவை பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்க திட்டம்
போரூர்- வடபழனி இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது
1 min
January 12, 2026
DINACHEITHI - MADURAI
இலங்கையில் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமல் தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவை தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
2 mins
January 12, 2026
DINACHEITHI - MADURAI
பாராளுமன்றம் ஜன 28-ந் தேதி கூடுகிறது
பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்
1 min
January 10, 2026
DINACHEITHI - MADURAI
வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 10, 2026
DINACHEITHI - MADURAI
மதுரையில் 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்
கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற திட்டம்
1 min
January 10, 2026
DINACHEITHI - MADURAI
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
1 min
January 09, 2026
DINACHEITHI - MADURAI
“உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற புதிய திட்டத்தை மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
50 ஆயிரம் தன்னார்வலர்கள் வீடு-வீடாக சென்று தகவல்களை சேகரிக்கிறார்கள்
1 mins
January 09, 2026
DINACHEITHI - MADURAI
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 09, 2026
DINACHEITHI - MADURAI
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் ரொக்கம்
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்
1 mins
January 09, 2026
DINACHEITHI - MADURAI
மக்கள் தி.மு.க. பக்கம் இருக்கிறார்கள்
அமித்ஷாவா? அவதூறு ஷாவா? திண்டுக்கல் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி
1 min
January 08, 2026
Translate
Change font size
