Try GOLD - Free
கிண்டியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
DINACHEITHI - MADURAI
|June 06, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.6.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், சென்னை, கிண்டியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு கடல்சார் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக 1.75 கோடி ரூபாய் செலவில் 14 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்களை திறந்து வைத்து, தனுஷ்கோடியில் பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம் அறிவிக்கை பற்றிய குறும்படத்தையும் பார்வையிட்டார்.
-
மேலும், 1400 வனக் காவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வனக் காவலர்கள், நீர் நிலைப்பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்கள் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார்.
மனிதகுலம் சந்தித்துவரும் பெரும் சவாலாக தற்போது காலநிலை மாற்றம் உள்ளது. அதனை எதிர்கொள்ள இவ்வரசு பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் ஆகிய இயக்கங்களை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருவதோடு, இயற்கைப் பாதுகாப்பினையும் வளங்குன்றா வளர்ச்சியையும் தொடர்ந்து வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பயன்பாட்டை ஒழித்திட உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதுடன், தமிழ்நாட்டின் பாரம்பரியமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பை பயன்பாட்டை மீட்டெடுக்கும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை "திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
அத்துடன் தமிழ்நாடு மீன் வலை முன்னெடுப்பின் கீழ், சென்னை காசிமேட்டில் நிறுவப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்வலை சேகரிப்பு மையம் மூலம் கைவிடப்பட்ட மீன் வலைகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுவதால் கடலில் நெகிழி மாசுபாடு குறைந்து, கடல் பல்லுயிரியம் பாதுகாக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பேணிக் காத்திட இவ்வரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டுதல்
சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் அடிக்கல் நாட்டப்பட்டது.
இம் மையத்திற்கான கட்டடம் சுற்றுச்சூழலுக்கு சாதகமான மற்றும் இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய பசுமை கட்டடமாக உருவாக்கப்படும். இக்கட்டடத்தின் மொத்த நிலப்பரப்பு 16,555 சதுர அடி மற்றும் மொத்த கட்டுமானப் பரப்பளவு 46,823 சதுர அடி ஆகும்.
This story is from the June 06, 2025 edition of DINACHEITHI - MADURAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
தொழில்அதிபர் அதானிக்கு எல்.ஐ.சி.யின் ரூ. 33 ஆயிரம் கோடி வழங்கப்பட்டதா?
அமெரிக்க பத்திரிகை செய்தியால் பரபரப்பு
1 mins
October 26, 2025
DINACHEITHI - MADURAI
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 28-ந் தேதி கோவில்பட்டி வருகிறார்
29-ந் தேதி தென்காசியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
1 min
October 26, 2025
DINACHEITHI - MADURAI
சென்னையில் கடல் சீற்றம்: சீனிவாசபுரம் பகுதியில் மீனவர் வீடுகள் சேதம்
சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன. சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. 2 ஆள் உயரத்துக்கு பலத்த சத்தத்துடன் ராட்சத அலைகள் எழும்பி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
1 min
October 26, 2025
DINACHEITHI - MADURAI
அமெரிக்கா பொருளாதார தடை; ரஷியா ஒரு போதும் அடிபணியாது: புதின் ஆவேசம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தான் பதவி ஏற்ற பிறகு ரஷியாவுடன் உறவுகளை மேம்படுத்த முயன்றார். அந்நாட்டு அதிபர் புதினுடன் தொலைபேசியிலும் பேசி - நட்பை வளர்த்தார். மேலும் உக்ரைனுடன் ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தும் முயற்சியிலும் டிரம்ப் ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சி எந்தவித பலனும் அளிக்கவில்லை.
1 min
October 25, 2025
DINACHEITHI - MADURAI
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 27-ந் தேதி புயலாக மாறுகிறது
இதன் இலக்கு தமிழகமா? ஆந்திராவா?
1 mins
October 25, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம் அடுத்த வாரம் தொடக்கம்
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
October 25, 2025
DINACHEITHI - MADURAI
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது
1 min
October 24, 2025
DINACHEITHI - MADURAI
கரூர் நெரிசல் சம்பவ விசாரணையை மேற்பார்வையிட 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்
மத்திய அரசு அறிவிப்பு
1 min
October 24, 2025
DINACHEITHI - MADURAI
தொடர்ந்து 5-வது நாளாக 120 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்தாண்டில் 7-வது முறையாக கடந்த 20-ந்தேதி மதியம் நிரம்பியது. இதையடுத்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையில் கடந்த 4 நாட்களாக நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
1 min
October 24, 2025
DINACHEITHI - MADURAI
சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கு. பொன்னுசாமி காலமானார்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்: உதயநிதி நேரில் மரியாதை
1 min
October 24, 2025
Translate
Change font size

