Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

2,290 மீனவ பயனாளிகளுக்கு 10 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

DINACHEITHI - MADURAI

|

May 29, 2025

மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை சார்பில் ரூ.596.13 கோடிசெலவில் 13 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பாக்வளைகுடா பகுதி மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான சிறப்புத் திட்டங்களையும், மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் “அலைகள்” திட்டத்தையும் தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளிபெருமக்களுக்குரூ.10.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் -மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.05.2025) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம், திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 272 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவொற்றியூர் புதிய சூரை மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட 426 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை என 13 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் மற்றும் ரோச்மா நகர் மீனவ கிராமங்களில் மொத்தம் 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின் மூலம் மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் அலைகள் திட்டத்தை தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளி பெருமக்களுக்கு 10 கோடியே 67 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மீன்வளத்தை பாதுகாத்தல், நிலைக்கத்தக்க மீன்பிடிப்பு, மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல், மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மீன்பிடி தடைகாலங்களில் மீனவர்களுக்கு நிதியுதவி, மீன்பிடி படகுகளுக்கு வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் வழங்குதல், பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்குதல், புதிய சூரை மீன்பிடி தூண்டில் மற்றும் செவுள் வலை விசைப்படகுகளை வாங்கிட மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை மீனவ மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

திருவொற்றியூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய சூரை மீன்பிடி துறைமுகம் சென்னை மாவட்டம், திருவொற்றியூரில் 272 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சூரை மீன்பிடி துறைமுகத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

MORE STORIES FROM DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டசபை கடந்த 20-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

time to read

1 min

January 25, 2026

DINACHEITHI - MADURAI

சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நாளை தேசிய கொடியை ஆளுனர் ஆர்.என். ரவி ஏற்றுகிறார்

60 நாட்கள் டிரோன்கள் பறக்கத் தடை

time to read

1 min

January 25, 2026

DINACHEITHI - MADURAI

துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி அறிவித்துள்ளதை உடனடியாக கைவிட வேண்டும்

பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

January 25, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஓபிஎஸ் ஆதரவாளரான மாநிலங்களவை எம்.பி. தர்மர் அதிமுகவில் இணைந்தார்

பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த எம். பி. தர்மர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

time to read

1 min

January 25, 2026

DINACHEITHI - MADURAI

சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சத்துணவு, தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

time to read

1 mins

January 25, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

3 மடங்கு அதிக நிதி கொடுத்து இருக்கிறோம் தமிழகம் வளர ஆட்சி மாற்றம் தேவை

மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

time to read

1 mins

January 24, 2026

DINACHEITHI - MADURAI

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மகாத்மா காந்தி பெயரில் தொடர வேண்டும்

சட்டசபையில் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது

time to read

2 mins

January 24, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தவெகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

time to read

1 min

January 22, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

டெஸ்மா, எஸ்மா சட்டங்களை பயன்படுத்த வில்லை 23 ஆண்டுகால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்து இருக்கிறோம் ஆசிரியர்கள் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்

time to read

1 mins

January 22, 2026

DINACHEITHI - MADURAI

ஆசிரியர்கள் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்

டெஸ்மா, எஸ்மா சட்டங்களை பயன்படுத்த வில்லை 23 ஆண்டுகால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்து இருக்கிறோம்

time to read

1 min

January 22, 2026

Translate

Share

-
+

Change font size