試す - 無料

2,290 மீனவ பயனாளிகளுக்கு 10 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

DINACHEITHI - MADURAI

|

May 29, 2025

மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை சார்பில் ரூ.596.13 கோடிசெலவில் 13 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பாக்வளைகுடா பகுதி மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான சிறப்புத் திட்டங்களையும், மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் “அலைகள்” திட்டத்தையும் தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளிபெருமக்களுக்குரூ.10.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் -மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.05.2025) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம், திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 272 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவொற்றியூர் புதிய சூரை மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட 426 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை என 13 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் மற்றும் ரோச்மா நகர் மீனவ கிராமங்களில் மொத்தம் 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின் மூலம் மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் அலைகள் திட்டத்தை தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளி பெருமக்களுக்கு 10 கோடியே 67 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மீன்வளத்தை பாதுகாத்தல், நிலைக்கத்தக்க மீன்பிடிப்பு, மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல், மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மீன்பிடி தடைகாலங்களில் மீனவர்களுக்கு நிதியுதவி, மீன்பிடி படகுகளுக்கு வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் வழங்குதல், பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்குதல், புதிய சூரை மீன்பிடி தூண்டில் மற்றும் செவுள் வலை விசைப்படகுகளை வாங்கிட மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை மீனவ மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

திருவொற்றியூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய சூரை மீன்பிடி துறைமுகம் சென்னை மாவட்டம், திருவொற்றியூரில் 272 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சூரை மீன்பிடி துறைமுகத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

DINACHEITHI - MADURAI からのその他のストーリー

DINACHEITHI - MADURAI

ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மோன்தா புயலாக மாறியது. இது திங்கட்கிழமை ஆந்திராவில் கரையை கடந்தது.

time to read

1 min

November 01, 2025

DINACHEITHI - MADURAI

16 வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆன செஸ் வீரர் இளம்பரிதிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு

சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் ஏ.ஆர். இளம்பரிதி. இவர் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த பிஜெல்ஜினா ஓபன் செஸ் தொடரில் விளையாடினார். இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

time to read

1 min

November 01, 2025

DINACHEITHI - MADURAI

சென்னை மறைமலை நகரில் ரூ. 3,250 கோடி முதலீட்டில் புதிய வாகன என்ஜின் தொழிற்சாலை

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

time to read

1 mins

November 01, 2025

DINACHEITHI - MADURAI

போர்டு நிறுவனம்: தங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைய பதிவு

முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உலகில் போர், பொருளாதார நெருக்கடிகள் என எண்ணற்ற அரசியல் நிலையற்ற சூழல்கள் நிலவி வந்தாலும், முதலமைச்சரின் அமெரிக்க பயணம் போர்டு தொழிற்சாலையை மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த உலகளாவிய நிறுவனத்தின் மூலம் கூடுதல் முதலீடுகளும், வேலைவாய்ப்பும் கிடைக்க இருக்கிறது என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார். இந்தநிலையில், முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம் என முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவில், ஃபோர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இஞ்சின் உற்பத்தி அலகைத் தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது. மிக நீண்ட, நம்பிக்கை கொண்ட உறவினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளது. இந்த முக்கிய முதலீட்டினால் 600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் உதிரி பாகச் சூழலும் வலுவடையும்.

time to read

1 min

November 01, 2025

DINACHEITHI - MADURAI

பிரதமர் மோடிக்கு, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்

\"பொறுப்பான பதவிக்குரிய மாண்பை இழந்து விட வேண்டாம். தமிழர்கள் மீதான வன்மத்தை அரசியலுக்கு பயன் படுத்தாதீர்கள்\" என பிரதமர் மோடிக்கு , முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

time to read

1 min

November 01, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.

time to read

1 mins

October 31, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மதுரையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி. ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை, திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் முதன்முறையாகநேற்று பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

time to read

1 min

October 31, 2025

DINACHEITHI - MADURAI

கண்ணியம், ஒற்றுமை, சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்றவர் முத்துராமலிங்கத்தேவர்

பிரதமர் மோடி புகழாரம்

time to read

1 min

October 31, 2025

DINACHEITHI - MADURAI

தி.மு.க. கடும் எதிர்ப்பு

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடர்பாக தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை

time to read

1 min

October 30, 2025

DINACHEITHI - MADURAI

தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடர்பாக

time to read

1 min

October 30, 2025

Translate

Share

-
+

Change font size