Try GOLD - Free
ஐஐடிகள் ராஜேஸ்வரி களின் ராஜ்ஜியம் ஆக வேண்டும்...
DINACHEITHI - KOVAI
|June 10, 2025
சிங்கத்தின் குகைக்குள் புகுந்து அதன் பிடரியைப் பிடித்து உலுக்குவது என்பது செயற்கரிய செயல். கல்வியே ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. ஆங்கிலேயர் தயவில் அதை இப்பிரிவினர் அடைந்தபோது, மேலாதிக்க சாதியினருக்கு அது எட்டிக்காயாகக் கசந்தது. ஒடுக்கப்பட்டு ஓர் கல்வியில் உயர்வதைத் தடுக்க எத்தனையோ தடைக் கற்களை அவ்வப்போது போட்டு வைத்தார்கள். சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்று கூட விதி இருந்தது.
-
அதுமட்டுமின்றி, பிற பிரிவினர் எளிதில் நுழைய முடியாதவாறு ஐஐடி உள்ளிட்ட பொறியியல் நிறுவனங்களையும், எய்ம்ஸ் போன்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களையும் அமைத்துக் கொண்டு, அதிலே குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் கோலோச்சிக் கொண்டிருந்தனர்.
திராவிட இயக்க தன்னெழுச்சியால் தடைகள் யாவும் நொறுக்கப்பட்டன. மருத்துவம், பொறியியல், சட்டப் படிப்பில் பார்ப்பனர் அல்லாத பிரிவினர் எளிதாக நுழைந்தனர். ஆனாலும், பழங்குடியினர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. குறிப்பாக, ஐஐடியில் அவர்கள் நுழைவு அத்திப்பூத்தாற்போலவே நிகழ்ந்தது.
இச்சூழலில், சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, புற்றுநோயால் தந்தையை இழந்த நிலையிலும், போலித் தொழில் செய்த தாய், தமையனின் உதவியோடு ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில், பழங்குடியினர் பிரிவில் இந்திய அளவில் 417-ஆவது இடம் பிடித்து ஐஐடியில் சேர்வதற்குத் தகுதி பெற்றுள்ளார்.
எட்டாம் வகுப்பு வரை தனியார்ப் பள்ளியில் படித்த ராஜேஸ்வரி, குடும்பச் சூழல் காரணமாக 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கருமந்துறை கிராமத்தில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். பத்தாம் வகுப்பில் 500-க்கு 438 மதிப்பெண்களும், பன்னிரண்டாம் வகுப்பில் 600-க்கு 521 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
This story is from the June 10, 2025 edition of DINACHEITHI - KOVAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
மோசடிகளை தடுப்பதே நோக்கம்
இந்தியா முழுவதும் 2 கோடி பெயர்கள் நீக்கம்
1 min
November 27, 2025
DINACHEITHI - KOVAI
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பேட்டி
டிச.4-ந்தேதிவரை விண்ணப்பங்கள் கொடுக்கலாம். எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு கூடுதல் அவகாசம் இல்லை. என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா நேற்று தெரிவித்தார்.
1 min
November 25, 2025
DINACHEITHI - KOVAI
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவியேற்றார், சூர்யகாந்த்
ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்
1 min
November 25, 2025
DINACHEITHI - KOVAI
பேருந்து விபத்தில் 8 பேர் பலி: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
தென்காசியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
1 min
November 25, 2025
DINACHEITHI - KOVAI
ஜி 20 உறுப்பு நாடுகள் மாநாடு : தலைவர்களை சந்தித்தார், பிரதமர் மோடி
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் என 42 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
1 min
November 24, 2025
DINACHEITHI - KOVAI
தென் கிழக்கு வங்க கடலில் 26-ந் தேதி புயல் உருவாகிறது
“தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்” என வானிலை நிலையம் அறிவிப்பு
1 mins
November 24, 2025
DINACHEITHI - KOVAI
“தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்” என வானிலை நிலையம் அறிவிப்பு
தென் கிழக்கு வங்க கடலில் 26-ந் தேதி புயல் உருவாகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும், என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min
November 24, 2025
DINACHEITHI - KOVAI
கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரது இரங்கல் செய்தி வருமாறு :-
1 min
November 23, 2025
DINACHEITHI - KOVAI
துபாய் விமான கண்காட்சியில் பங்கேற்ற தேஜஸ் போர் விமானம் எரிந்து கீழே விழுந்தது
துபாயில் பல்வேறு நாடுகளின் விமானங்கள் பங்கேற்கும் விமானக் கண்காட்சி கடந்த நவ. 17 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் இறுதி நாளான இன்று (நவ. 21) சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் பெருமைமிகு தேஜஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கி பின்னர் தீப்பிடித்து எரிந்தது. துபை விமான நிலையம் அருகே உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.10 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
November 22, 2025
DINACHEITHI - KOVAI
சென்னை உயர்நீதிமன்றத்தில் ரோடுஷோ பற்றிய வரைவு வழிகாட்டு விதிமுறைகள்
தமிழ்நாடு அரசு தாக்கல்
1 min
November 22, 2025
Translate
Change font size

