يحاول ذهب - حر
ஐஐடிகள் ராஜேஸ்வரி களின் ராஜ்ஜியம் ஆக வேண்டும்...
June 10, 2025
|DINACHEITHI - KOVAI
சிங்கத்தின் குகைக்குள் புகுந்து அதன் பிடரியைப் பிடித்து உலுக்குவது என்பது செயற்கரிய செயல். கல்வியே ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. ஆங்கிலேயர் தயவில் அதை இப்பிரிவினர் அடைந்தபோது, மேலாதிக்க சாதியினருக்கு அது எட்டிக்காயாகக் கசந்தது. ஒடுக்கப்பட்டு ஓர் கல்வியில் உயர்வதைத் தடுக்க எத்தனையோ தடைக் கற்களை அவ்வப்போது போட்டு வைத்தார்கள். சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்று கூட விதி இருந்தது.
-
அதுமட்டுமின்றி, பிற பிரிவினர் எளிதில் நுழைய முடியாதவாறு ஐஐடி உள்ளிட்ட பொறியியல் நிறுவனங்களையும், எய்ம்ஸ் போன்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களையும் அமைத்துக் கொண்டு, அதிலே குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் கோலோச்சிக் கொண்டிருந்தனர்.
திராவிட இயக்க தன்னெழுச்சியால் தடைகள் யாவும் நொறுக்கப்பட்டன. மருத்துவம், பொறியியல், சட்டப் படிப்பில் பார்ப்பனர் அல்லாத பிரிவினர் எளிதாக நுழைந்தனர். ஆனாலும், பழங்குடியினர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. குறிப்பாக, ஐஐடியில் அவர்கள் நுழைவு அத்திப்பூத்தாற்போலவே நிகழ்ந்தது.
இச்சூழலில், சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, புற்றுநோயால் தந்தையை இழந்த நிலையிலும், போலித் தொழில் செய்த தாய், தமையனின் உதவியோடு ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில், பழங்குடியினர் பிரிவில் இந்திய அளவில் 417-ஆவது இடம் பிடித்து ஐஐடியில் சேர்வதற்குத் தகுதி பெற்றுள்ளார்.
எட்டாம் வகுப்பு வரை தனியார்ப் பள்ளியில் படித்த ராஜேஸ்வரி, குடும்பச் சூழல் காரணமாக 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கருமந்துறை கிராமத்தில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். பத்தாம் வகுப்பில் 500-க்கு 438 மதிப்பெண்களும், பன்னிரண்டாம் வகுப்பில் 600-க்கு 521 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
هذه القصة من طبعة June 10, 2025 من DINACHEITHI - KOVAI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
வி.சி.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
1 min
May 25, 2026
DINACHEITHI - KOVAI
கடும் வெயிலால் பொதுமக்கள் தவிப்பு: சென்னையில் மேலும் 2 நாட்கள் வெப்ப அலை நீடிக்கும்
கோடை காலத்தில் சென்னையில் ஏற்பட்ட காலமாற்றத்தால் வங்க கடலில் இருந்து ஈரப்பதம் கொண்ட வடகிழக்கு கடல் காற்று வீசியதால் நேற்று வெப்பம் தணிந்து இருந்தது.
1 min
May 25, 2026
DINACHEITHI - KOVAI
உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக இந்தியா மாறும்: ராஜ்நாத் சிங் பேச்சு
மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையும், தனியார் துறையின் புதிய கண்டுபிடிப்புகளும் ஒன்றாக இணையும்போது, நாடு புதிய உச்சங்களை தொடும் என ராஜ்நாத் சிங் கூறினார்.
1 min
May 25, 2026
DINACHEITHI - KOVAI
ஆப்பிரிக்க பயணத்தை தவிர்த்து விடுங்கள்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஆப்பிரிக்க நாடுகளான உகாண்டா, காங்கோ, சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், எபோலா வைரஸ் பரவலாக பரவி வருகிறது.
1 min
May 25, 2026
DINACHEITHI - KOVAI
முதல் அமைச்சர் விஜய் உறுதி
கோவையில் 10 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்படும் என்று, முதல் அமைச்சர் விஜய் உறுதியாக கூறி இருக்கிறார்.
1 mins
May 24, 2026
DINACHEITHI - KOVAI
‘மாஸ்டர் பிளான்’ உடன் டெல்லி செல்ல தயாராகும் முதல்-அமைச்சர் விஜய்
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இது தொடர்பான விசாரணைக்காக கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19-ந் தேதிகளில் டெல்லி சி.பி.ஐ. முன்பு த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார்.
1 min
May 24, 2026
DINACHEITHI - KOVAI
பெட்ரோல், டீசல்: 10 நாட்களில் 3-வது முறையாக விலை உயர்ந்தது
ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி விலை உயர்வு நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
May 24, 2026
DINACHEITHI - KOVAI
கோவை சிறுமி கொலை: தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம்
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு நோட்டீசு
1 min
May 24, 2026
DINACHEITHI - KOVAI
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: புதுக்கோட்டை முதலிடம்
2025 - 26 ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
1 min
May 21, 2026
DINACHEITHI - KOVAI
காங்கிரஸ் அமைச்சர்கள் உட்பட புதிய மந்திரிகள் பதவி ஏற்கிறார்கள்
முதல் அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. காங்கிரஸ் அமைச்சர்கள் இருவரும் பதவி ஏற்கிறார்கள் . புதிய அமைச்சர்களுக்கு ஆளுனர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
1 min
May 21, 2026
Translate
Change font size

