Try GOLD - Free
கிண்டியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
DINACHEITHI - DHARMAPURI
|June 06, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.6.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், சென்னை, கிண்டியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு கடல்சார் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக 1.75 கோடி ரூபாய் செலவில் 14 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்களை திறந்து வைத்து, தனுஷ்கோடியில் பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம் அறிவிக்கை பற்றிய குறும்படத்தையும் பார்வையிட்டார்.
-
மேலும், 1400 வனக் காவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வனக் காவலர்கள், நீர் நிலைப்பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்கள் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார்.
மனிதகுலம் சந்தித்துவரும் பெரும் சவாலாக தற்போது காலநிலை மாற்றம் உள்ளது. அதனை எதிர்கொள்ள இவ்வரசு பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் ஆகிய இயக்கங்களை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருவதோடு, இயற்கைப் பாதுகாப்பினையும் வளங்குன்றா வளர்ச்சியையும் தொடர்ந்து வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பயன்பாட்டை ஒழித்திட உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதுடன், தமிழ்நாட்டின் பாரம்பரியமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பை பயன்பாட்டை மீட்டெடுக்கும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை "திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
அத்துடன் தமிழ்நாடு மீன் வலை முன்னெடுப்பின் கீழ், சென்னை காசிமேட்டில் நிறுவப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்வலை சேகரிப்பு மையம் மூலம் கைவிடப்பட்ட மீன் வலைகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுவதால் கடலில் நெகிழி மாசுபாடு குறைந்து, கடல் பல்லுயிரியம் பாதுகாக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பேணிக் காத்திட இவ்வரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டுதல்
சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் அடிக்கல் நாட்டப்பட்டது.
இம் மையத்திற்கான கட்டடம் சுற்றுச்சூழலுக்கு சாதகமான மற்றும் இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய பசுமை கட்டடமாக உருவாக்கப்படும். இக்கட்டடத்தின் மொத்த நிலப்பரப்பு 16,555 சதுர அடி மற்றும் மொத்த கட்டுமானப் பரப்பளவு 46,823 சதுர அடி ஆகும்.
This story is from the June 06, 2025 edition of DINACHEITHI - DHARMAPURI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
தொழிலாளர் ஆணையரகம் மற்றும் சார்நிலை அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
November 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
திமுக கூட்டணி கட்சிகள் 11-ந் தேதி போராட்டம்: அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் நடக்கிறது
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு:
1 mins
November 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
பீகார் சட்டசபைக்கு இன்று முதல்கட்ட தேர்தல்: 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பீகாரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7 கோடியே 42 லட்சம். இவர்களில் ஆண்கள் 3 கோடியே 92 லட்சம். பெண்கள் 3 கோடியே 50 லட்சம் ஆவர். மொத்தம் 90 ஆயிரத்து 712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
1 min
November 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு “ஆன்லைன்” மூலம் மட்டும் விண்ணப்பம்
அரசாணை வெளியீடு
1 mins
November 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது
1 mins
November 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரியானாவில் மக்களின் தீர்ப்பை திருடிய பாஜக - மு.க.ஸ்டாலின் தாக்கு
வாக்கு திருட்டு தொடர்பாக புதிய தகவல்களை நேற்று வெளியிடுவதாக ராகுல் காந்தி அறிவித்து இருந்தார். அதன்படி டெல்லியில், உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த வாக்கு திருட்டு மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரியானா தேர்தலில் முறைகேடு நடைபெற்றது. காங்கிரசின் வெற்றியை பாஜகவின் வெற்றியாக மாற்றம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டது. அரியானாவில் 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டு இருக்கிறது. 5.21 லட்சம் ஓட்டுகள் போலி. 93,174 ஓட்டுகள் போலியான முகவரிகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த மால் அரியானாவில் ஓட்டு போட்டுள்ளார். அவரது பெயர் எப்படி சேர்க்கப்பட்டது. வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பொய் சொல்கிறது. நாடு முழுவதும் வாக்கு திருட்டு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது என்றார். இந்தநிலையில், அரியானாவில் வாக்கு திருட்டு குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட சான்றுகள் அதிர்ச்சி அளிக்கிறது என்று முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அண்மைக்காலமாக பா.ஜ.க. பெற்று வரும் தேர்தல் வெற்றிகளின் உண்மைத்தன்மை குறித்து மீண்டுமொரு முறை பெரும் ஐயம் எழுகிறது.
1 min
November 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் வீடு வீடாக சென்று தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
தி.மு.க.வில் இணைந்தார், மனோஜ் பாண்டியன்
1 mins
November 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையம், தருமபுரி சிப்காட் தொழிற்பூங்கா கட்டுமானப் பணிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
2 mins
November 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்
சுப்ரீம் கோர்ட்டில் திமுக மனு தாக்கல்
1 min
November 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 35மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
November 04, 2025
Translate
Change font size
