Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

கிண்டியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

DINACHEITHI - DHARMAPURI

|

June 06, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.6.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், சென்னை, கிண்டியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு கடல்சார் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக 1.75 கோடி ரூபாய் செலவில் 14 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்களை திறந்து வைத்து, தனுஷ்கோடியில் பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம் அறிவிக்கை பற்றிய குறும்படத்தையும் பார்வையிட்டார்.

கிண்டியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

மேலும், 1400 வனக் காவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வனக் காவலர்கள், நீர் நிலைப்பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்கள் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார்.

மனிதகுலம் சந்தித்துவரும் பெரும் சவாலாக தற்போது காலநிலை மாற்றம் உள்ளது. அதனை எதிர்கொள்ள இவ்வரசு பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் ஆகிய இயக்கங்களை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருவதோடு, இயற்கைப் பாதுகாப்பினையும் வளங்குன்றா வளர்ச்சியையும் தொடர்ந்து வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பயன்பாட்டை ஒழித்திட உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதுடன், தமிழ்நாட்டின் பாரம்பரியமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பை பயன்பாட்டை மீட்டெடுக்கும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை "திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

அத்துடன் தமிழ்நாடு மீன் வலை முன்னெடுப்பின் கீழ், சென்னை காசிமேட்டில் நிறுவப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்வலை சேகரிப்பு மையம் மூலம் கைவிடப்பட்ட மீன் வலைகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுவதால் கடலில் நெகிழி மாசுபாடு குறைந்து, கடல் பல்லுயிரியம் பாதுகாக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பேணிக் காத்திட இவ்வரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டுதல்

சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் அடிக்கல் நாட்டப்பட்டது.

இம் மையத்திற்கான கட்டடம் சுற்றுச்சூழலுக்கு சாதகமான மற்றும் இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய பசுமை கட்டடமாக உருவாக்கப்படும். இக்கட்டடத்தின் மொத்த நிலப்பரப்பு 16,555 சதுர அடி மற்றும் மொத்த கட்டுமானப் பரப்பளவு 46,823 சதுர அடி ஆகும்.

DINACHEITHI - DHARMAPURI'den DAHA FAZLA HİKAYE

DINACHEITHI - DHARMAPURI

“தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்” என வானிலை நிலையம் அறிவிப்பு

தென் கிழக்கு வங்க கடலில் 26-ந் தேதி புயல் உருவாகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும், என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 min

November 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஜி 20 உறுப்பு நாடுகள் மாநாடு : தலைவர்களை சந்தித்தார், பிரதமர் மோடி

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் என 42 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

time to read

1 min

November 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

தென் கிழக்கு வங்க கடலில் 26-ந் தேதி புயல் உருவாகிறது

“தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்” என வானிலை நிலையம் அறிவிப்பு

time to read

1 mins

November 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரது இரங்கல் செய்தி வருமாறு :-

time to read

1 min

November 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

துபாய் விமான கண்காட்சியில் பங்கேற்ற தேஜஸ் போர் விமானம் எரிந்து கீழே விழுந்தது

துபாயில் பல்வேறு நாடுகளின் விமானங்கள் பங்கேற்கும் விமானக் கண்காட்சி கடந்த நவ. 17 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் இறுதி நாளான இன்று (நவ. 21) சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் பெருமைமிகு தேஜஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கி பின்னர் தீப்பிடித்து எரிந்தது. துபை விமான நிலையம் அருகே உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.10 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

November 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

சென்னை உயர்நீதிமன்றத்தில் ரோடுஷோ பற்றிய வரைவு வழிகாட்டு விதிமுறைகள்

தமிழ்நாடு அரசு தாக்கல்

time to read

1 min

November 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

பீகார் முதல் மந்திரியாக நிதிஷ் குமார் பதவியேற்றார்

பிரதமர் மோடி, அமித்ஷா விழாவில் பங்கேற்பு

time to read

1 min

November 21, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழகத்தில் இன்று முதல் பலத்த மழை பெய்யும்: வானிலை நிலையம் அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை யொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

time to read

1 min

November 21, 2025

DINACHEITHI - DHARMAPURI

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - மேலும் 4 பேர் கைது

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

time to read

1 min

November 21, 2025

DINACHEITHI - DHARMAPURI

பி.எம்.கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 18 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி விடுவித்தார்

புதுடெல்லி,நவ.20சொந்தமாக விவசாய நிலம் பிஎம் கிசான் நிதி வைத்துள்ள விவசாயக் திட்டத்தை மத்திய அரசு குடும்பங்களுக்கு உதவித் 2019ம் ஆண்டு தொடங்கியது. தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டப்படி, 4 மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000/- விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இணைந்த விவசாயிகளுக்கு இதுவரை 20 தவணைகளாக வங்கி கணக்கு மூலம் பணம் வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

November 20, 2025

Translate

Share

-
+

Change font size