Try GOLD - Free
சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்!
Nakkheeran
|July 12-15, 2025
2022-ல், மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்துக்கு, தி.மு.க. கவுன் சிலர்களும், கட்சியினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து, மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் சூழலில், அமைச்சர் நேரு தலையிட்டு பஞ்சாயத்து செய்தது குறித்து நம் நக்கீரனில் எழுதியிருக்கிறோம்.
தொடர்ந்து, கட்டடங்களுக்கு பிளான் அப்ரூவல் கொடுப்பதிலும், கான்ட்ராக்டர்களிடமும் கட்டாய வசூல் செய்கிறாரென்ற குற்றச்சாட்டும் பொன்வசந்த் மீது எழுந்தது. மேலும், அமைச்சர் மூர்த்தியை ஒருமையில் பேசிய ஆடியோ விவகாரமும் எழுந்த சூழலில், அவரை கட்சியிலிருந்தே தூக்கியது மதுரை தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் வீடுகள், கட்டடங்களுக்கு சொத்து வரியை குறைவாக நிர்ணயம் செய்து, 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்ததில், மதுரை மாநகராட்சியின் ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், 3வது மண்டலத்தின் தலைவரான பாண்டிசெல்வியின் பி.ஏ. தனசேகரன், உதவி வருவாய் அலுவலர் குமரன், கணினி ஆபரேட்டர் சதீஷ், உதவி ஆணையரின் உதவியாளர் கார்த்திகேயன், புரோக்கர்கள் உசேன், ராஜேஷ் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சியின் மண்டலத் தலைவர்கள் அனைவரும் உடனே ராஜினாமா செய்ய வேண்டுமென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு போட, தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த 200 கோடி ஊழலின் பின்னணி என்னவென்று விசாரணையில் இறங்கினோம்.
தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் நம்மிடம், "யார் செய்தாலும் தவறு, தவறுதான். அது நம் கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயரை உண்டாக்கும் என்று, தனது கட்சியினரை தமிழக முதல்வரே எச்சரித்தது இதுவரை நடக்காத ஒன்று. முதல்வர் சாட்டையை கையில் எடுத்திருக்கிறார். சரியான முடிவுதான்.
2023-ல் அப்போதைய மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார், அனைத்து வரிவசூல் பில் கலெக்டர்களையும் வரவழைத்து ரிவியூ மீட்டிங் நடத்தினார். அப்போது ஒவ்வொரு மண்டலமாக பிரித்து ஆய்வு செய்யும்போது 3வது மண்டலத்தில் வரி வசூல் மிகக்குறைவாக வருவதைக் குறிப்பிட்டு, அம்மண்டல பில் கலெக்டரிடம் கேட்க, அவர் எல்லாவற்றையும் போட்டுடைத்தார்.This story is from the July 12-15, 2025 edition of Nakkheeran.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Nakkheeran
Nakkheeran
காக்கி சட்டையின் காமச் சேட்டை!
குமுறும் பெண்கள்!
3 mins
November 19-21, 2025
Nakkheeran
தி.மு.க. அமைச்சர்களை குறிவைக்கும் டெல்லி!
“ஹலோ தலைவரே, நாடே எதிர்பார்த்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள், இப்போது இந்திய அரசியலையே புரட்டிப் போட்டுவருகிறது.”
5 mins
November 19-21, 2025
Nakkheeran
கைவிட்ட காங்கிரஸ்! நட்டாற்றில் விஜய்!
\"ஜென் சி கிட்ஸ், உங்கள் வாக்கு உங்கள் அசல் சக்தி.
3 mins
November 19-21, 2025
Nakkheeran
காணாமல் போன அ.தி.மு.க.!
புதுச்சேரியில் தத்தளிக்கும் ர.ர.க்கள்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
தலைமறைவான சில்மிச டாக்டர்!
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மாஜி டீன் ராதா கிருஷ்ணன், தனது மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் நிலையில் அந்த மருத்துவர் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், பெண் நோயாளி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கும் விவரம் வெளியாகி குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
November 19-21, 2025
Nakkheeran
கைதி எண் 9658
ஈழமும் கம்யூனிஸ்ட் அரசியலும்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
விவசாய நிலங்களில் சிப்காட்! கொந்தளிக்கும் கடலூர் விவசாயிகள்!
கடலூர் அருகே சிப்காட் வளாகம் கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கியது.
2 mins
November 19-21, 2025
Nakkheeran
பிணையக் கைதிகளான பெண காவலர்கள்!
தமிழகத்தில் வே.பிரபாகரனுக்கு இராணுவப் பயிற்சி: 1990-க்கு முந்தைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டுக்கு தங்குதடை யின்றி வந்துசென்றனர்.
3 mins
November 19-21, 2025
Nakkheeran
கூட்டணி ஆட்சி! தகர்ந்தது காங்கிர்ஸ் கனவு!
அதிர்ச்சியில் விஜய்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றத்தில் யாருக்கு சீட்டு?
மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து மிகவும் பிரசித்திபெற்றது திருப்பரங்குன்றம் முருகன் கோயில். திருப்பரங்குன்றம் தொகுதியில் முக்குலத்தோர் அதிகம்.
2 mins
November 19-21, 2025
Translate
Change font size
