Versuchen GOLD - Frei
சென்றது போகுக; தீவினை அகலுக!
Penmani
|August 2025
இனிய தோழர்! நலம்தானே? கடந்த மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் நடைபெற்ற சம்பவங்கள் ஏற்கனவே நொந்து களைத்துப் போன பாமரனை மேலும் மேலும் நிலை குலைய வைத்திருக்கின்றன.

தமிழ்நாட்டின் காவல் துறை சித்திர வதைகள் மற்றும் மரணங்கள். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்து வது குறித்து உச்ச நீதிமன்றம் பலப் பல வழக்குகளில் தெளிவுபடுத்தி இருக்கிறது. ஆனாலும் தொடர்ந்து காவல் மரணங்கள் ஏற்பட்டபடியே இருக்கின்றன. சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் நடந்திருக்கும் அஜித்குமார் கொலை தமிழ்நாட்டு மக்களை அதிர வைத்திருக்கிறது. அதிலும் இந்த படுகொலையை நிகழ்த்தியவர்கள் தமிழக காவல்துறை ஆட்கள் என்பது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
விசாரணையின் போது யாரையாவது கொலை செய்யும் அதிகாரத்தை காவல்துறைக்கு யாரும் வழங்கவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையை பரிசீலனை செய்த நீதிமன்றம் இதை படுகொலையிலும் மோசமான படுகொலை என்று கூறியது. உடம்பில் எந்த இடத்தையும் விட்டு வைக்காமல் மொத்தம் 64 காயங்கள் இருந்ததாக கூறும் இந்த அறிக்கை மோசமான வழக்குகளை தினம் தினம் சந்திக்கும் நீதிமன்றத்தையே அதிரவிட்டிருக்கிறது என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. இப்போது திமுக, அதற்கு முன்னால் அதிமுக என்று இரண்டு ஆட்சி காலத்திலும் சேர்த்து 25 பேர் காவல்துறையால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கிறார்கள். எப்போதுமே இராணுவமும் போலீசும் அரசாங்கத்தின் படைகள் தான். மன்னன் சொன்னால் போய் போர் புரிபவை தான். ஆனால் இது ராஜாக்களின் காலமா என்ன? உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. காவல்துறை உங்கள் நண்பன் என்று பெரிய பெரிய விளம்பரங்கள் மூலம் மக்களை நெருங்க விரும்பும் அரசுகள் என்றுதானே இவர்கள் காட்டிக் கொள்கிறார்கள்?
Diese Geschichte stammt aus der August 2025-Ausgabe von Penmani.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Penmani

Penmani
ஆதி காலம் முதல் நவீன காலம் வரை பூட்டு சாவிகளுக்கான கண்காட்சி!
பாதுகாப்பு தொடர்பான எண்ணம் மனிதனின் மனதில் தோன்றிய நாளிலிருந்து பூட்டுக்கான தேவையும் தொடங்கிவிட்டது.
1 min
August 2025

Penmani
விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகள்!
ஆங்கில மாதமான ஆகஸ்ட் மாதம் பிறந்துவிட்டாலே ஆடி ஆவணி மாதங்களில் அனைத்து பண்டிகைளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நம்மை இன்பத்தில் ஆழ்த்தும்.
4 mins
August 2025
Penmani
வாழ்வை சீர்படுத்துவது எண்ணங்களே!
பிறந்ததன் பயனை வாழ்வு சொல்ல வேண்டுமெனில், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பது நம் எண்ணங்கள் தான்.
1 min
August 2025

Penmani
எங்கள் வீட்டில் ஒருவராக வாழும் இசை!
சங்கீதத்தை மூச்சாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவரும், பிரபல நடனக்கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவரும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வருபவரும், Finance Management- ல் மேற்படிப்பு படித்தவரும், சங்கீதத்துடன் வயலினையும் கற்று, இரண்டையும் திறமையாக கையாண்டு வருபவருமாகிய இசைக் கலைஞர் திருமதி அம்ரிதா முரளி பெண்மணிக்காக அளித்த பேட்டி:
4 mins
August 2025

Penmani
அரபிக் கடலின் ராணி கொச்சி!
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுகிற கேரள நாட்டிற்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் போய் வரலாம் என்று நினைக்கிற எத்தனையோ ஆயிரம் பேர்களில் ஒருத்தி நான். இன்னும் கூட இவர்கள் சாதிகளை தங்கள் பெயருக்கு பின்னால் சுமந்து கொண்டிருக்கிறார்கள் தான் என்றாலும் இயற்கை அள்ளிக் கொடுத்திருக்கிற பேரழகை இன்னும் கட்டி காத்து வருகிறார்கள் என்பதால் அந்த வகையில் பாராட்டுக்குரியவர்கள் தான்.
3 mins
August 2025

Penmani
குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோரின் கையில்...
மனித வாழ்வின் மிக ஆரோக்கியமான வயதான பதின் பருவத்தில் இருப்பவர்கள் பல காரணங்களால் விபரீதமான முடிவுகளை நாடுகிறார்கள். சிறிய தோல்வியும் அவர்களை நிலைகுலைய வைக்கிறது.
1 mins
August 2025

Penmani
கருணை நிறைந்த கிழங்கு!
கருணை கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனிஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் உள்ளன.
1 mins
August 2025

Penmani
சம்யுக்கையின் வேம்புலி.!
கூந்தலை கொண்டையாய் போட்டுக் கொண்டே 'அம்மா காபி' என்று குரல் கொடுத்த சம்யுக்தாவின் கவனம் வாசற்புறச் சந்தடியில் சென்றது.
4 mins
August 2025

Penmani
தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான எழுத்தாளர் நகுலன்!
தமிழ் இலக்கியப் பெருங்கடலில் நீந்தி இன்பம் தோய்க்க விரும்புவோர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய எழுத்தாளர் நகுலன்.
2 mins
August 2025

Penmani
விநாயகருக்கான லட்டு ரூ. 30 லட்சத்துக்கு ஏலம்!
தெலங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஐதராபாதில் ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யும் உற்சவம் பதினோரு நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.
2 mins
August 2025
Translate
Change font size