Denemek ALTIN - Özgür

ஆவணியின் அவதார தரிசனம்... கிருஷ்ணர்- விநாயகர்!

Penmani

|

August 2025

அருள் தழுவும் ஆயிரம் நாமங்களைக் கொண்டு அகிலத்தைக் காக்க எடுத்த புண்ணிய அவதாரம் ஸ்ரீகிருஷ்ண அவதாரம்!

- - மாலதி சுந்தரராஜன்

ஆவணியின் அவதார தரிசனம்... கிருஷ்ணர்- விநாயகர்!

சக்ரத்தை எடுப்பது ஒரு கணம், தருமம் பாரில் தழைத்தல் மறுகணம் என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப, தர்மத்தை நிலைநாட்ட எடுத்த அற்புத அவதாரம் கிருஷ்ண அவதாரம்! மக்களின் நல்லரசனாய், கீதையை உலகுக்கே உபதேசித்த நல்லாசானாய், நட்பிற்கு இலக்கணமான நல்ல நண்பனாய், அடியார்களுக்கு உதவும் சேவகனாய், இடம், பொருள், ஏவல் அறிந்த சிறந்த மந்திரியாய், பண்பிலே தெய்வமாய் பரிமளிக்கும் அவதார நாயகன் கிருஷ்ணன்!

ஆவணி மாதம் அஷ்டமித் திதியில், ரோகிணி நட்சத்திரத்தில், நடு நிசியில் இருண்ட சிறைச் சாலையில், தேவகி நந்தனாக, ஞான ஒளியாக சங்கு சக்ரதாரியாக, அவதரித்தார் கிருஷ்ண பகவான்! ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர, அந்தகாரமான அந்த இரவில் கொட்டும் மழையில், பெருக்கெடுத்து ஓடும் ஆற்று வெள்ளத்தைக் கடந்து யசோதைக்கு மகனாய்ப் போய்ச் சேர்ந்தார்! நந்தகோபன்குமாரனாக, யசோதையின் இளம் சிங்கமாக கோகுலத்தில் எல்லோரும் விரும்பும் விஷமக்காரக்கண்ணனாக வளர்ந்து

வந்தார்பரந்தாமன்! கண்ணனின் குறும்பு விளையாட்டுகளில் இன்றும் மனதை பறி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்! ஸ்ரீ ராம அவதாரத்தில், மனிதனாக வாழ்ந்து காட்டினார் விஷ்ணு பகவான்; ஆனால் கிருஷ்ண அவதாரத்தில் மனித தெய்வமாக வாழ்ந்து காட்டினார்! கோவிந்தனை, கண்ணனை,பரமாத்ம சொரூபமாகவே கண்டு மகிழ்கிறோம்! விலங்கினம் முதல் தேவர் இனம் வரை அவன் பாதார விந்தங்களில் சரணடைந்தோர்க்கு சஞ்சலம் இல்லை! கஜேந்திரனின் ஆதிமூலமே என்ற நிர்கதியான அலறலைக் கேட்ட பரந்தாமன், பறந்தோடி வந்து தன் சக்ராயுதத்தால் கஜேந்திரனின் காலை பிடித்த முதலையை வதம் செய்து யானையை காப்பாற்றிய சுவையான நிகழ்வு நாம் அனைவரும் அறிந்ததே! வாரணம் அழைக்க வந்த காரணன் என்ற சிறப்பு அடைமொழியுடன் போற்றுகிறார் வேதாந்த தேசிகர்! இது வெறும் கதையல்ல! சரணாகதி தத்துவத்தின் பெருமையை விளக்கும் உயர்ந்த நிகழ்வு கஜேந்திர மோட்சம்!

Penmani

Bu hikaye Penmani dergisinin August 2025 baskısından alınmıştır.

Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.

Zaten abone misiniz?

Penmani'den DAHA FAZLA HİKAYE

Penmani

Penmani

ஆதி காலம் முதல் நவீன காலம் வரை பூட்டு சாவிகளுக்கான கண்காட்சி!

பாதுகாப்பு தொடர்பான எண்ணம் மனிதனின் மனதில் தோன்றிய நாளிலிருந்து பூட்டுக்கான தேவையும் தொடங்கிவிட்டது.

time to read

1 min

August 2025

Penmani

Penmani

விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகள்!

ஆங்கில மாதமான ஆகஸ்ட் மாதம் பிறந்துவிட்டாலே ஆடி ஆவணி மாதங்களில் அனைத்து பண்டிகைளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நம்மை இன்பத்தில் ஆழ்த்தும்.

time to read

4 mins

August 2025

Penmani

வாழ்வை சீர்படுத்துவது எண்ணங்களே!

பிறந்ததன் பயனை வாழ்வு சொல்ல வேண்டுமெனில், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பது நம் எண்ணங்கள் தான்.

time to read

1 min

August 2025

Penmani

Penmani

எங்கள் வீட்டில் ஒருவராக வாழும் இசை!

சங்கீதத்தை மூச்சாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவரும், பிரபல நடனக்கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவரும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வருபவரும், Finance Management- ல் மேற்படிப்பு படித்தவரும், சங்கீதத்துடன் வயலினையும் கற்று, இரண்டையும் திறமையாக கையாண்டு வருபவருமாகிய இசைக் கலைஞர் திருமதி அம்ரிதா முரளி பெண்மணிக்காக அளித்த பேட்டி:

time to read

4 mins

August 2025

Penmani

Penmani

அரபிக் கடலின் ராணி கொச்சி!

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுகிற கேரள நாட்டிற்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் போய் வரலாம் என்று நினைக்கிற எத்தனையோ ஆயிரம் பேர்களில் ஒருத்தி நான். இன்னும் கூட இவர்கள் சாதிகளை தங்கள் பெயருக்கு பின்னால் சுமந்து கொண்டிருக்கிறார்கள் தான் என்றாலும் இயற்கை அள்ளிக் கொடுத்திருக்கிற பேரழகை இன்னும் கட்டி காத்து வருகிறார்கள் என்பதால் அந்த வகையில் பாராட்டுக்குரியவர்கள் தான்.

time to read

3 mins

August 2025

Penmani

Penmani

குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோரின் கையில்...

மனித வாழ்வின் மிக ஆரோக்கியமான வயதான பதின் பருவத்தில் இருப்பவர்கள் பல காரணங்களால் விபரீதமான முடிவுகளை நாடுகிறார்கள். சிறிய தோல்வியும் அவர்களை நிலைகுலைய வைக்கிறது.

time to read

1 mins

August 2025

Penmani

Penmani

கருணை நிறைந்த கிழங்கு!

கருணை கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனிஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் உள்ளன.

time to read

1 mins

August 2025

Penmani

Penmani

சம்யுக்கையின் வேம்புலி.!

கூந்தலை கொண்டையாய் போட்டுக் கொண்டே 'அம்மா காபி' என்று குரல் கொடுத்த சம்யுக்தாவின் கவனம் வாசற்புறச் சந்தடியில் சென்றது.

time to read

4 mins

August 2025

Penmani

Penmani

தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான எழுத்தாளர் நகுலன்!

தமிழ் இலக்கியப் பெருங்கடலில் நீந்தி இன்பம் தோய்க்க விரும்புவோர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய எழுத்தாளர் நகுலன்.

time to read

2 mins

August 2025

Penmani

Penmani

விநாயகருக்கான லட்டு ரூ. 30 லட்சத்துக்கு ஏலம்!

தெலங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஐதராபாதில் ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யும் உற்சவம் பதினோரு நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.

time to read

2 mins

August 2025

Translate

Share

-
+

Change font size