Denemek ALTIN - Özgür

பசுமைப் புரட்சியை நோக்கி

Tamil Mirror

|

July 18, 2025

1965இல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மக்களின் நலன்களின் மேல் அக்கறை செலுத்தவில்லை. வேலையின்மை பாரிய பிரச்சினையாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் வேலையின்மையைப் பல ஆய்வாளர்கள் பெரும்பாலும் 1940களின் பிற்பகுதியில் ஏற்பட்ட மக்கள்தொகை அதிகரிப்பின் காரணமாகவே இப்பிரச்சினை 1960களின் நடுப்பகுதியில் உருவெடுத்தது என்று கூறினார்கள். அதையே அரசாங்கமும் சொன்னது.

- தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ

ஆனால், உண்மை என்னவென்றால், மக்கள்தொகை அழுத்தம் வேலையின்மைக்கு ஒரு முதன்மைக் காரணம் அல்ல. அதிக மக்கள்தொகை அழுத்தம் உள்ள நாடுகள் அனைவருக்கும் சில வேலைகளை எவ்வாறு வழங்குவது என்பதைக் கற்றுக்கொள்கின்றன. ஆனால், இலங்கையின் ஆட்சியாளர்கள் அதைக் கற்றுக் கொள்ளவில்லை.

இலங்கையின் வேலையின்மை நிலைமைக்கான உண்மையான விளக்கம், 1960களின் பொருளாதார தேக்கநிலை காரணமாக ஏற்பட்ட நெருக்கடியே, ஏனெனில் தவறான பொருளாதாரக் கொள்கைகள் பொருளாதார வளர்ச்சிக்கு மூலதனத்தை (உள்ளூர் அல்லது வெளிநாட்டு) மட்டுமே சார்ந்திருந்தன. விவசாயம், நிலம் போன்றவற்றிலும் ஒரு சிலரின் செழிப்பு மூலம் பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகளில்; அரசாங்கம் ஈடுபட்டது. கிராமப்புற வறுமையை ஆளும் வர்க்கங்கள் அலட்சியம் செய்தன.

பழைமையான முறைகளைப் பயன்படுத்தி குத்தகை நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்வது தொடர்ந்து நடந்தது. கிராமப்புற மக்கள்தொகைக்கும் பயிர்செய்யப்பட்ட பரப்பிற்கும் இடையிலான விகிதம் 1946இல் 1.34 ஆக இருந்தது, 1962இல் 1.81 ஆகவும், 1969இல் 2.02 ஆகவும் அதிகரித்தது. கிராமப்புற வாழ்க்கையின் கட்டமைப்பு அதன் கடுமையான வறுமை, பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளுடன் படித்த இளைஞர்களுக்கு நேர்மறையான கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

அடிப்படையில், படித்த இளைஞர்களை நகர்ப்புற வேலையற்றவர்களாக மாற்றுவதற்கு விவசாயத்தை மாற்றத் தவறியதே காரணமாகும். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் (1965-70) ‘நில இராணுவம்' என்று அழைக்கப்பட்டதை உருவாக்குவதன் மூலம் வேலையின்மை பிரச்சினையை சமாளிக்க முயன்றது. இது மீண்டும் சாதாரண மக்களின் பிரச்சினைகளுடன் எந்த தொடர்பும் இல்லாத ஆட்சியாளர்களின் கற்பனைகளிலிருந்து உருவான சாதனங்களில் ஒன்றாகும். இந்தத் திட்டத்தைப் பிரதமர் டட்லி சேனாநாயக்க முன்மொழிந்தார்.

Tamil Mirror'den DAHA FAZLA HİKAYE

Tamil Mirror

தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்

76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்

முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்

இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.

time to read

2 mins

September 23, 2025

Tamil Mirror

புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்

அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி

உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்

தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்

‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size