Denemek ALTIN - Özgür
அறிவறிந்த மக்கட்பேறு
Dinamani Kanchipuram
|June 03, 2025
இல்லறவியலில் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம் ஆகிய அதிகாரங்களின் வரிசையில் மக்கட்பேற்றினைப் போற்றுகிற திருவள்ளுவர், அதன் பெருமை கருதி வாழ்க்கைத் துணைநலத்தின் நிறைவுக் குறட்பாவிலேயே மனைமாட்சியின் மங்கலமாகத் திகழ்பவள் மனைவி எனில், நல்லணியாக விளங்குவது நன்மக்கட்பேறு என்று முன்மொழிகிறார்.
உலகத்தில் பல்லுயிரும் இன்புற்று வாழ்வதற்கு இயற்கை வகை செய்து தந்திருக்கிறது. ஆதலால் அவை தத்தம் இயல்புகளோடு இயற்கைக்கு முரணாகாத வண்ணம் வாழ்க்கையை நிறைவு செய்கின்றன. இறப்புக்கும் பிறப்புக்குமான இடைவெளியில் எல்லா உயிரும் தனக்கான மரபு வழியைத் தொடர்கின்றன. ஏனைய உயிர்களின் மரபுத் தொடர்ச்சிக்கு இனப்பெருக்கம் என்று பெயர். அதாவது, தன்னுடைய இனத்தைப் பெருக்கிக் கொள்வது என்று அதற்குப் பொருள். ஆனால், மனிதன் மேற்கொள்கிற மரபுத் தொடர்ச்சிக்குப் பேறு என்று பெயர். இதனை 'மக்கட்பேறு' என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிறப்பித்துக் கூறுகிறார்.
பெறுதல் என்பதும் பெருக்குதல் என்பதும் இயல்பாகத் தன் முயற்சியால் தோன்றக் கூடிய ஏனைய உயிர்ச்செயலின் விளைவு. ஆனால், பேறு என்பது அவ்வாறன்று. மானுட முயற்சியோடு இயற்கையின் அதற்கு மேலான ஆற்றலின் வெளிப்பாடாகப் பெறப்படுவதே பேறு.
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பெற வேண்டிய பேறுகள் பலவுண்டு. அவற்றைத் தொகுத்துப் பதினாறு என்று வகைப்படுத்துகிற தமிழ் மரபு மக்கட்பேற்றினை நடுவில் நிறுத்துகிறது. ஆனால், திருவள்ளுவர் மற்ற பேறுகளை விடவும் முதன்மையானது மக்கட்பேறு என்று குறிப்பிடுவதுடன், அந்தப் பேற்றினை 'அறிவறிந்த மக்கட்பேறு' என்று பண்புசுட்டி முன்னிலைப்படுத்துகிறார். அதிலும் 'அறிவறியும் மக்கட்பேறு' என்று குறிப்பிடாமல் 'அறிவறிந்த மக்கட்பேறு' என்று குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு.
இல்லறவியலில் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம் ஆகிய அதிகாரங்களின் வரிசையில் மக்கட்பேற்றினைப் போற்றுகிற திருவள்ளுவர், அதன் பெருமை கருதி வாழ்க்கைத் துணைநலத்தின் நிறைவுக் குறட்பாவிலேயே மனைமாட்சியின் மங்கலமாகத் திகழ்பவள் மனைவி எனில், நல்லணியாக விளங்குவது நன்மக்கட்பேறு என்று முன்மொழிகிறார். தோன்றின் புகழொடு தோன்றுதலைத் தானே தன் திருக்குறளில் மக்கட்பேற்றின் சிறப்பினை உணர்த்துவதற்கு வள்ளுவர் பயன்கொண்டிருக்கிறார்.
ஏனெனில், கணவனும் மனைவியுமாக இல்லறம் நடத்தும் எல்லாருக்கும் மக்கட்பேறு எளிமையாக வாய்த்து விடுகிறது. ஆனால், 'அறிவறிந்த மக்கட்பேறு' என்பது அத்தனை எளிதாகக் கிடைத்து விடுகிற பேறு இல்லை என்பது அவர்தம் கருத்து. இது சங்க காலத்திலிருந்தே தொடர்ந்திருக்கிறது.
Bu hikaye Dinamani Kanchipuram dergisinin June 03, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Kanchipuram'den DAHA FAZLA HİKAYE
Dinamani Kanchipuram
திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...
ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை முப்பதும் மார்கழித் திங்களில் தப்பாமல் ஓதுதற்கு உரியன.
2 mins
January 11, 2026
Dinamani Kanchipuram
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்
அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
1 mins
January 11, 2026
Dinamani Kanchipuram
மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை
இலக்கியம் நிரந்தரமான உண்மையைப் பேசும்போது வெற்றி பெறுகிறது.
1 mins
January 11, 2026
Dinamani Kanchipuram
தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,03,200-க்கு விற்பனையானது.
1 min
January 11, 2026
Dinamani Kanchipuram
பாகிஸ்தான்- அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி
அமெரிக்காவுடன் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு ராணுவப் பயிற்சியை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Kanchipuram
அசர வைக்கும் மரச் சிற்பங்கள்!
தமிழ்நாட்டின் பாரம்பரியமான கலைப் படைப்புகளில் ஒவ்வொரு தயாரிப்புக் கும் ஒவ்வொரு ஊர் பெயர் பெற்றுள்ளது.
2 mins
January 11, 2026
Dinamani Kanchipuram
கடலுக்குச் சென்ற மீனவர்கள் 4 பேர் மாயம்
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கரை திரும்பவில்லை.
1 min
January 11, 2026
Dinamani Kanchipuram
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாவளிப் பெண்!
பயங்கரவாதத்துக்கு எதிராக, ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க உதவிய இந்திய வம்சாவளிப் பெண் கல்யாணி ராமதுர்கம், ஃபோர்ப்ஸ் 'முப்பது வயதுக்குள்பட்ட 30 பிரபலங்கள்' பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
1 min
January 11, 2026
Dinamani Kanchipuram
போராட்டக்காரர்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Kanchipuram
தேசிய குத்துச்சண்டை: சர்வீசஸ் சாம்பியன்
ஆதித்ய பிரதாப் 60-65 கிலோ பிரிவில் 3-2 என ஹிமாசலின் அபினாஷை வீழ்த்தி தங்கம் வென்றார்.
1 min
January 11, 2026
Translate
Change font size
