Denemek ALTIN - Özgür
ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்
Dinakaran Nagercoil
|June 23, 2025
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பல ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் இயந்திர மீன் பிடி படகுகளில் பணியாற்றுவதற்காக ஈரான், குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர்.
-
கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களான தூத்தூர், இனயம், குறும்பனை, குளச்சல், முட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த உவரி, கூட்டப்புளி, இடிந்தகரை, கூத்தன்குழி, மைக்கேல் நகர், ஜார்ஜ் நகரைச் சேர்ந்த மீனவர்கள் இத்தொழிலில் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.
ஈரானில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள், 'ஸ்பான்சர்ஸ்' எனப்படும் வெளிநாட்டு முதலாளிகளுக்கு கீழ் பணியாற்றுகின்றனர். இவர்கள் 7 முதல் 10 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்கின்றனர். ஒவ்வொரு முறையும் ஆழ்கடலில் மீன் பிடித்துவிட்டு திரும்பியவுடன் அவர்களுக்கு உடனே ஊதியம் வழங்கப்படுகிறது. பிற வளைகுடா நாடுகளில் 6 முதல் 8 வாரங்களுக்கு ஒருமுறைதான் ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே அதனை விட சிறந்ததாக ஈரான் இருப்பதால் மீனவர்கள், ஈரானை மீன்பிடி தொழிலுக்கு சிறந்த இடமாக கருதுகின்றனர்.
இருப்பினும், சில மீனவர்கள் மோசமான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். முதலாளிகளால் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவது. பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படுவது, உடல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் ஊதியமின்மை போன்ற பிரச்னைகள் அவ்வப்போது எழுந்து வருகிறது. ஈரானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளான ஜீரோ, கிஷ் தீவு, அசலுயே, லாவா தீவு, கம்கு, ஸ்டாரக் ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்களை மையமாக கொண்டு தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்கின்றனர்.
தற்போது ஈரானில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்ததால், ஈரானில் மீன்பிடி தொழில் செய்யும் குமரி மாவட்ட மீனவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ளன. கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை பாதுகாப்பாக மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உவரியைச் சேர்ந்த 36 மீனவர்கள் ஈரானில் சிக்கியுள்ளதாகவும், அவர்களின் குடும்பங்கள் தமிழக அரசின் உதவியை நாடியுள்ளனர்.
Bu hikaye Dinakaran Nagercoil dergisinin June 23, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinakaran Nagercoil'den DAHA FAZLA HİKAYE
Dinakaran Nagercoil
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நிச்சயதார்த்தத்தை உறுதி செய்த மோதிரம்
இந்திய அளவில் புகழ்பெற்ற நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா. நீண்ட நாள் காதலர்களான அவர்கள், சமீபத்தில் ரகசிய நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியானது. மேலும், வரும் பிப்ரவரி மாதம் அவர்களின் திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.
1 min
October 13, 2025
Dinakaran Nagercoil
தமிழகத்தில் விற்றுத் தீர்ந்த வெள்ளி கட்டிகள்
தங்கத்திற்கு மாற்றாக முதலீடு அதிகரிப்பு எதிரொலி
1 mins
October 13, 2025

Dinakaran Nagercoil
சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரையில் இருந்து தொடங்கிய நயினார் பிரசாரத்தை புறக்கணித்த எடப்பாடி
பாஜ தேசியத் தலைவர்களும் பங்கேற்கவில்லை
1 mins
October 13, 2025
Dinakaran Nagercoil
கட்டண கொள்ளை
பண்டிகை காலங்கள் வந்துவிட்டாலே பலருக்கும் பயணங்கள் கசப்பாகிவிடும். அதிலும் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் வேலையின் நிமித்தம் குடியிருப்போர், தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப படும் பாடு சொல்லி மாளாது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பெருநகரங்களில் வசிப்போர், தங்கள் சொந்த ஊருக்கு செல்லவும், பண்டிகை முடிந்த பின்னர் மீண்டும் நகரத்திற்கு திரும்பவும் பயணம் அடிப்படையில் பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. இரு மாதங்களுக்கு முன்பே தயார் நிலையில் இருந்தாலும், ரயில்களை பொறுத்த வரை தீபாவளி பண்டிகைக்கு டிக்கெட் முன்பதிவு 5 நிமிடங்களில் முடிந்து விடுகிறது.
1 min
October 13, 2025
Dinakaran Nagercoil
விபத்தால் பேச முடியாமல் சிரமப்பட்டேன்
சாய் துர்கா தேஜ் உருக்கம்
1 min
October 13, 2025
Dinakaran Nagercoil
ஆந்திராவில் கள்ளத்துக்கு முற்றுப்புள்ளி போலி மதுபானங்களை கண்டறிய விரைவில் புதிய செயலி அறிமுகம்
ஆந்திர மாநிலத்தில் சமீபகாலமாக கலப்பட மதுபான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மூலக்கலச்செருவு போலி மதுபான விவகாரம் ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வார்த்தைப் போருக்கு வழிவகுத்துள்ளது. போலி மதுபான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியான தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் ஜனார்தன் ராவை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும், இப்பிரச்னையை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனக்கு சாதகமாக மாற்றி வருகிறது.
1 min
October 13, 2025
Dinakaran Nagercoil
காட்டாளன் பர்ஸ்ட் லுக் வெளியீடு
கியூப்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ஷெரீப் முஹம்மது தயாரித்து வரும் ஆக்ஷன் திரில்லர் படம், 'காட்டாளன்'. இதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதில் ஆண்டனி வர்கீஸின் மிரட்டல் தோற்றம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. பான் இந்தியா அளவில் ஹிட்டான ஆக்ஷன் திரில்லரான ‘மார்கோ' படத்துக்கு பிறகு 'காட்டாளன்' படத்தை ஷெரீப் முஹம்மது தயாரிக்கிறார். பால் ஜார்ஜ் இயக்குகிறார்.
1 min
October 13, 2025
Dinakaran Nagercoil
ஐ.சி.யூ.வில்., அனுமதிக்கப்படவே இல்லை மருத்துவமனையில் ராமதாசை பார்க்காமல் சென்றவர் அன்புமணி
பாமகவை தொலைத்துவிட்டு, தொலைத்து விடுவேன் என கூறுகிறார் பதற்றத்தை உருவாக்குகிறார் அருள் எம்எல்ஏ சரமாரி குற்றச்சாட்டு
1 mins
October 13, 2025
Dinakaran Nagercoil
மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர் கைது
மேற்குவங்கத்தில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
October 13, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்கா 100% வரி விதித்தால் கடும் நடவடிக்கை: சீனா எச்சரிக்கை
அரிய வகை தாதுக்கள், லிதியம் பேட்டரிகளை கொண்டு சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அந்த நாடு விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக சீனா மீதான இறக்குமதி வரி கூடுதலாக 100 சதவீதம் விதிக்கப்படும். இது வரும் நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
1 min
October 13, 2025
Translate
Change font size