Essayer OR - Gratuit
ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்
Dinakaran Nagercoil
|June 23, 2025
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பல ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் இயந்திர மீன் பிடி படகுகளில் பணியாற்றுவதற்காக ஈரான், குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர்.
-
கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களான தூத்தூர், இனயம், குறும்பனை, குளச்சல், முட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த உவரி, கூட்டப்புளி, இடிந்தகரை, கூத்தன்குழி, மைக்கேல் நகர், ஜார்ஜ் நகரைச் சேர்ந்த மீனவர்கள் இத்தொழிலில் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.
ஈரானில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள், 'ஸ்பான்சர்ஸ்' எனப்படும் வெளிநாட்டு முதலாளிகளுக்கு கீழ் பணியாற்றுகின்றனர். இவர்கள் 7 முதல் 10 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்கின்றனர். ஒவ்வொரு முறையும் ஆழ்கடலில் மீன் பிடித்துவிட்டு திரும்பியவுடன் அவர்களுக்கு உடனே ஊதியம் வழங்கப்படுகிறது. பிற வளைகுடா நாடுகளில் 6 முதல் 8 வாரங்களுக்கு ஒருமுறைதான் ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே அதனை விட சிறந்ததாக ஈரான் இருப்பதால் மீனவர்கள், ஈரானை மீன்பிடி தொழிலுக்கு சிறந்த இடமாக கருதுகின்றனர்.
இருப்பினும், சில மீனவர்கள் மோசமான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். முதலாளிகளால் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவது. பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படுவது, உடல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் ஊதியமின்மை போன்ற பிரச்னைகள் அவ்வப்போது எழுந்து வருகிறது. ஈரானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளான ஜீரோ, கிஷ் தீவு, அசலுயே, லாவா தீவு, கம்கு, ஸ்டாரக் ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்களை மையமாக கொண்டு தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்கின்றனர்.
தற்போது ஈரானில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்ததால், ஈரானில் மீன்பிடி தொழில் செய்யும் குமரி மாவட்ட மீனவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ளன. கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை பாதுகாப்பாக மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உவரியைச் சேர்ந்த 36 மீனவர்கள் ஈரானில் சிக்கியுள்ளதாகவும், அவர்களின் குடும்பங்கள் தமிழக அரசின் உதவியை நாடியுள்ளனர்.
Cette histoire est tirée de l'édition June 23, 2025 de Dinakaran Nagercoil.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லை 2வது நாளாக மூடல்
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகள் மற்றும் வான் வெளியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்து மீறி வருவதாக கூறி ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படைகள் சனியன்று இரவு பாகிஸ்தானின் ராணுவ சோதனை சாவடிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.
1 min
October 14, 2025
Dinakaran Nagercoil
விமல் ஜோடியாக சிருஷ்டி டாங்கே
கடந்த 2023ல் வெளியான கிரைம் திரில்லர் படம், 'இராக்கதன்'. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மருதம் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் செல்வராஜு, ராணி ஹென்றி சாமுவேல் இணைந்து தயாரிக்கும் 'மகாசேனா' என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
நெல்லை அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி தாயும் தற்கொலை
நெல்லை கங்கைகொண்டான் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்தையா (38). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி முத்துலட்சுமி (27). முத்தமிழ் (4), சுசிலா தேவி (3) என இரண்டு மகள்கள் இருந்தனர்.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பரிதாப பலி
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன் (27). இவரது மனைவி சுகன்யா (26). தம்பதிக்கு பிரகாஷ் (4) என்ற மகனும், ஹேமாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் மாரியப்பனின் தாய் அசலா (55) என்பவரும் உடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று மாரியப்பனின் வீட்டின் ஜன்னலுக்குள் துதிக்கையை நுழைத்து உணவு தேடியுள்ளது. அதன் பிறகு ஜன்னல் கம்பிகளை வளைத்ததோடு, கதவினை தந்தத்தால் குத்தி உடைக்க முற்பட்டுள்ளது.
1 min
October 14, 2025
Dinakaran Nagercoil
சட்டத்துறை சார்பில் ரூ.55.68 கோடியில் மதுரை, வேலூர் அரசு சட்டக்கல்லூரிகளில் கட்டிடம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
October 14, 2025
Dinakaran Nagercoil
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 5வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பு
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 5வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நீடித்தது.
1 min
October 14, 2025
Dinakaran Nagercoil
இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து
தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கை பரிந்துரையின் படி இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்டது.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
வருங்கால வைப்பு நிதி பணம் 100% வரை இனி எடுக்கலாம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை 100 % வரை ஊழியர்கள் இனி எடுக்கும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகத்துடன் சென்னை விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்
விஐடி சென்னை மற்றும் ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகம் இணைந்து, சைபர் பாதுகாப்பு பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளன. இதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி துணை தலைவர் ஜி.வி. செல்வம், டீகின் பல்கலைக்கழகத்தின் இணை டீன் பேராசிரியர் பாஸ்கரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
தீபாவளியை முன்னிட்டு நாளை மறுதினம் முதல் தினமும் 1,500 கூடுதல் பேருந்துகள் இயக்கம்
அமைச்சர் சிவசங்கரன் தகவல்
1 min
October 14, 2025
Translate
Change font size