Denemek ALTIN - Özgür
வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இருவர்...? தமிழகத்தை மேற்கோள் காட்டி மத்திய அரசு வாதம்
DINACHEITHI - DHARMAPURI
|May 22, 2025
"வக்பு திருத்தச் சட்டத்தின்படி வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் எப்போதும் எண்ணிக்கையில் இருப்பார்கள்" என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில் தெரிவித்தார். அத்துடன், 'தமிழகத்தில் அர்ச்சகர்கள் மாநில அரசால் நியமிக்கப்படுகிறார்கள்' என்று அவர் தனது வாதத்தில் மேற்கோள் காட்டினார்.
-
புதுடெல்லி: மே 22-
வக்பு திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு இடைக்கால தடை விதிப்பது தொடர்பான வாதம் உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக நேற்று (மே 21) நடைபெற்றது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார். அவர் தனது வாதத்தின்போது, "வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. மாறாக, பொது நலனுக்காக தனிநபர்களால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 102 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு சட்டம் குறித்து எங்களுக்கு (அரசுக்கு) கவலை இருந்தது. அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம். கூட்டு நாடாளுமன்றக் குழுவால் விரிவான செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. 25 வக்பு வாரியங்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
இதற்கு முன் இப்படி ஒரு விவாதம் நடந்ததே இல்லை எனும் அளவுக்கு விவாதங்கள் நடத்தப்பட்டு பிறகு நாடாளுமன்றம் மசோதாவை நிறைவேற்றியது. 2013 வரை, ஒரு முஸ்லிம் மட்டுமே வக்பு கொடுக்க முடியும். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு யார் வேண்டுமானாலும் வக்பு உருவாக்கலாம் என்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில் எப்போதுமே ஒரு முஸ்லிம் மட்டுமே வக்பு கொடுக்க முடியும் என்று சட்டங்கள் கூறுகின்றன.
தற்போதைய சட்டம் வக்பு அல் - அவுலாதை அறிமுகப்படுத்துகிறது. இதன்படி, வக்பு நிறுவனரின் குடும்பத்தைச் சேர்ந்த மகள்கள் உட்பட அனைத்து சந்ததியினரும் நிரந்தரமாக சொத்துகளை நிர்வகிக்க முடியும். இது ஒரு நல்ல விஷயம். தனி நபர்களுக்கும் வக்புகளுக்கும் இடையிலான எந்தவொரு தகராறும் தகுதிவாய்ந்த நடுவரால் தீர்ப்பளிக்கப்படும்" என தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "ஒரு குறிப்பிட்ட சொத்து அரசுக்கானதா, வக்புக்கானதா என்பதை முடிவு செய்யக் கூடியவராக உள்ள அதிகாரி ஓர் அரசு ஊழியர் என்பதை மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்" என்ற வாதத்தை முன்வைத்தார். இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "அரசு நிலத்தின் மீது யாருக்கும் உரிமை இல்லை. முழு நாடும் நிலத்தின் உரிமையாளர். பொதுமக்களுக்காக அரசு நிலத்தை அறக்கட்டளையாக வைத்திருக்கிறது.
Bu hikaye DINACHEITHI - DHARMAPURI dergisinin May 22, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - DHARMAPURI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - DHARMAPURI
மக்களுக்காக களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும் - உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்
1 min
November 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
“உறவினர் பெயர் கட்டாயம் அல்ல” என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவிப்பு
\"எஸ்.ஐ.ஆர், படிவத்தில் தெரிந்த விவரங்களை நிரப்பிக்கொடுத்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெறும். உறவினர் பெயர் கட்டாயம் அல்ல\" என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவித்து உள்ளார்.
1 min
November 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
புதுச்சேரியில் 57.66 சதவீத விண்ணப்பங்கள் பதிவேற்றம் தமிழ்நாட்டில் 59 சதவீத வாக்கு படிவங்கள் பதிவானது
தேர்தல் ஆணையம் தகவல்
1 min
November 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவியேற்றார், சூர்யகாந்த்
ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்
1 min
November 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
தென்காசி அருகே நடந்த பேருந்து விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
November 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
பேருந்து விபத்தில் 8 பேர் பலி: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
தென்காசியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
1 min
November 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
“தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்” என வானிலை நிலையம் அறிவிப்பு
தென் கிழக்கு வங்க கடலில் 26-ந் தேதி புயல் உருவாகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும், என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min
November 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜி 20 உறுப்பு நாடுகள் மாநாடு : தலைவர்களை சந்தித்தார், பிரதமர் மோடி
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் என 42 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
1 min
November 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
தென் கிழக்கு வங்க கடலில் 26-ந் தேதி புயல் உருவாகிறது
“தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்” என வானிலை நிலையம் அறிவிப்பு
1 mins
November 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரது இரங்கல் செய்தி வருமாறு :-
1 min
November 23, 2025
Translate
Change font size

