Try GOLD - Free
மாநிலத்தில் சுயாட்சி : ஒரு பார்வை
Dinamani Villupuram
|April 21, 2025
மக்களின் தேவைகள், உரிமைகள், கல்வி, பொருளாதாரம், வரலாறு, கலாசாரம், மொழி உள்ளிட்டவற்றில் மக்களுக்கு நெருக்கமாக இருந்து அறிந்து வைத்திருப்பது மாநில அரசுகள்தான். ஆனால், திட்டங்கள் வகுப்பது, சட்டங்கள் இயற்றுவதில் மத்திய அரசு அதிகாரம் செலுத்துவதே மாநில உரிமைகளுக்கான குரலாக வெளிப்படுகிறது.
இந்தியாவில் மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற உரிய நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும், மத்திய மாநில அரசுகள் இடையிலான உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்கவும் மூன்று பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை தாக்கலைத் தொடர்ந்து, துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெறும் இந்த வேளையில், 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில், மாநில அரசின் நியாயமான உரிமைகளை மத்திய அரசு பறித்து வருவதாகவும், மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிந்து வருவதையும் குறிப்பிட்டார். மாநில சுயாட்சி, மாநிலங்கள் அதிகாரம் குறித்துப் பட்டியலிட்டார்.
மத்தியில் 18 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்து அதிகாரத்தைச் சுவைத்தது திமுக என்பது கடந்தகால வரலாறு. அப்போதெல்லாம் இந்தப் பிரச்னைகளை எழுப்பாது, தேர்தல் நெருங்கிவிட்ட வேளையில் உரிமைகளைப் பேசுவதும், மாநில அதிகாரங்கள் குறித்துப் பகிர்வதும் திமுகவின் வாக்குவங்கி அரசியலை நோக்கியதான நகர்வாகவே பார்க்கப்படுகிறது.
மறைந்த பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையிலும், அதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையிலும், மிக முக்கியமான துறைகள் எங்களுக்கு வேண்டும் என்று கேட்டுப் பெற முடிந்த திமுகவால், கச்சத்தீவை மீட்பதற்கோ, ஈழத் தமிழர் நலன் குறித்தோ, இரு மொழிக் கொள்கை குறித்தான அரசியல் சட்டத்தில் நிலையான இடத்தைத் தருவதற்கோ, நதிநீர் உரிமைகள் குறித்தோ அப்போது எதுவும் பேசாமல், 'தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற' கதையாக திடீரென்று ஞானோதயம் வந்துவிட்டதைப் போல மாநில உரிமைகளைப் பற்றி இப்போது பேசுகிறது திமுக. அதிகாரத்தில் இருந்தபோது இந்தப் பிரச்னையை எழுப்பவில்லை என்பதற்கு இதுபோன்ற பிரச்னைகள் அப்போது எழவில்லை என்று மிக லாகவமாகத் தப்பிக்க முயல்கிறார்கள்.
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், அந்தத் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது இப்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி பரப்புரை மேற்கொண்டார். ஆனால், அதன் ரகசியத்தை இன்றுவரை அவர் சொல்லவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வதற்கான மேல் நடவடிக்கை எடுக்கவில்லை.
This story is from the April 21, 2025 edition of Dinamani Villupuram.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Villupuram
Dinamani Villupuram
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Dinamani Villupuram
இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...
“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.
3 mins
June 14, 2026
Dinamani Villupuram
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
2 mins
June 14, 2026
Dinamani Villupuram
அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.
1 min
June 14, 2026
Dinamani Villupuram
நீத்தார் - பெரியார் - நல்லோர்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
1 min
June 14, 2026
Dinamani Villupuram
ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
1 min
June 14, 2026
Dinamani Villupuram
அணிலாடும் முன்றில்
கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.
1 mins
June 14, 2026
Dinamani Villupuram
அசத்திய மாணவர்கள்!
\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.
1 min
June 14, 2026
Dinamani Villupuram
சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!
எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.
1 min
June 14, 2026
Dinamani Villupuram
இன்று டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
1 min
June 14, 2026
Translate
Change font size

