Try GOLD - Free
உயர் கல்வியில் கவனம் தேவை
Dinamani Villupuram
|April 16, 2025
மிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மூன்றே ஆண்டுகளில் சுமார் 30 சதவீதம் அதிகரித்திருப்பதாக தமிழக பள்ளிக் கல்வித் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
-
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2021-22 ஆம் கல்வியாண்டில் 45 சதவீதமாக இருந்தது. 2023-24 ஆம் கல்வியாண்டில் இந்த எண்ணிக்கை 74 சதவீதமாக அதிகரித்தது. அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக தமிழக அரசு செயல்படுத்தும் சிறப்புத் திட்டங்களால் இது சாத்தியமாகியுள்ளது.
உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவர்கள் குறித்து கடந்த 2021-22ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தமிழ்நாடு 47 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்தது. இதர பெரிய மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு இந்தச் சாதனையைப் படைத்தது. தற்போதைய புதிய தரவுகளின்படி கணக்கிட்டால் இந்த சதவீதம் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழகத்தில் தற்போது 24,338 தொடக்க, 6,992 நடுநிலை, 6,223 உயர்நிலை, மேல்நிலை என மொத்தம் 37,553 அரசுப் பள்ளிகள் உள்ளன. அரசுப் பள்ளிகளில் 6-12 ஆம் வகுப்பு வரை படித்து இளநிலை பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, ஐ.டி.ஐ. உள்ளிட்ட கல்வி நிலையங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச்சில் அறிவிக்கப்பட்டது. இந்த உதவித் தொகை திட்டத்தால் உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.
This story is from the April 16, 2025 edition of Dinamani Villupuram.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Villupuram
Dinamani Villupuram
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா
பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
1 min
June 12, 2026
Dinamani Villupuram
'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்
இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வென்றது.
1 min
June 12, 2026
Dinamani Villupuram
இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!
இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Villupuram
விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Villupuram
காணிக்கையாக சிலைகள்!
அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.
1 mins
June 12, 2026
Dinamani Villupuram
தொடர வேண்டும் மாற்றம்
உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.
2 mins
June 12, 2026
Dinamani Villupuram
பிரதமருக்கு தமிழ் வணக்கம்
உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
3 mins
June 12, 2026
Dinamani Villupuram
உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்
ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.
1 min
June 12, 2026
Dinamani Villupuram
சந்திர தோஷம் விலக...
சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.
2 mins
June 12, 2026
Dinamani Villupuram
நீலகிரி மாவட்ட சுகாதார, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு எஸ்பிஐ ரூ.1.59 கோடி நிதி
தமிழகத்தின் முக்கிய மலைப் பிரதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நிலையான திடக் கழிவு மேலாண்மைத் திட்டங்களை ஊக்குவிக்கவும் எஸ்பிஐ ரூ.1.59 கோடி 'சிஎஸ்ஆர்' நிதியை வழங்கியுள்ளது.
1 min
June 11, 2026
Translate
Change font size

