Try GOLD - Free
தரமான கல்வி... வளமான வாழ்வு!
Dinamani Vellore
|April 19, 2025
பள்ளிக் கல்விதான் ஒரு மாணவரின் ஆளுமையை நிர்ணயிக்கும். தற்போதைய நினைவாற்றல் அடிப்படையில் கற்பித்தல் முறையானது, மாணவனது சிந்திக்கும் திறனை வளர்க்காது. சுய சிந்தனையோடு ஒரு பொருண்மையை அலசி ஆராயும் அறிவாற்றல் கொண்டிருப்பது இன்றைய நவீன உலகத்தில் வெற்றி பெற இன்றியமையாததாகும்.
கற்றோருக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பது கல்விக்கு சமுதாயம் கொடுக்கும் அங்கீகாரம். பிள்ளைப் பிராயத்தில் சரியான வகையில் கல்வி புகட்டப்பட வேண்டும். இது பெற்றோரின் கடமை மட்டுமல்ல, சமுதாயத்தின் ஒட்டுமொத்த பொறுப்புமாகும். அரசாங்கம் எல்லாவகையிலும் இளைய சமுதாயத்துக்கு தரமான கல்வி கிடைப்பதற்கு உரிய கட்டமைப்பு, ஆசிரியர் நியமனம், மற்ற நிர்வாக அமைப்புகள் ஆகியவை நிறைவேற உரிய தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சுதந்திர இந்தியாவில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து நமது தேசத் தலைவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 1948-49 இல் அமைத்த கமிஷன் உயர் கல்வியை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து பரிந்துரை அளித்தது. 1952-53 இல் டாக்டர் லக்ஷ்மணசாமி முதலியார் தலைமையில் இடைநிலைக் கல்வி பிரச்னைகள் ஆராயப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
1968-ஆம் ஆண்டு கல்விக்கான திட்டம் முதலில் கொள்கை அளவில் வகுக்கப்பட்டது. அதன்படி, தேசிய வளர்ச்சி, தேசிய ஒருங்கிணைப்பு, ஒற்றுமை முக்கிய இலக்காக வைக்கப்பட்டது. 1990 இல் எல்லாருக்குமான கல்வி என்ற முழக்கம் உலகெங்கிலும் பரவியது. அதன் விளைவாக, 2002 ஆம் ஆண்டு கல்வி அடிப்படை உரிமையாக 86-ஆவது அரசியல் சாசன திருத்தம் மூலம் 21 ஆ பிரிவு சேர்க்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டு 6 வயதிலிருந்து 14 வயது வரை கட்டாய இலவசக் கல்வி உறுதி செய்யப்பட்டது.
ஐ.நா.சபை 2015-ஆம் ஆண்டு நாடுகள் அடைய வேண்டிய வளர்ச்சிக்கான இலக்குகளை அறிவித்தது. தரமான கல்வி அளிப்பது, பாரபட்சமற்ற உயர் கல்வி ஆகியவை அதன் முக்கியமான இலக்குகள். இதன் பின்னணியில்தான் டாக்டர் கஸ்தூரிரங்கன், மேனாள் இஸ்ரோ சேர்மன் தலைமையில் மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையைத் தயாரிக்க ஜூன் 2017 ஆம் ஆண்டு குழு அமைத்தது.
This story is from the April 19, 2025 edition of Dinamani Vellore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Vellore
Dinamani Vellore
ஹைதராபாத்தில் அக்டோபரில் வில்வித்தை பிரீமியர் லீக்
வில்வித்தை பிரீமியர் லீக் (ஏபிஎல்) இரண்டாவது சீசன் தொடர் ஹைதராபாதில் வரும் அக். 8 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.
1 min
June 11, 2026
Dinamani Vellore
அவதூறு பேச்சு: யூடியூபர் முக்தார் கைது
சமூக ஊடகத்தில் அவதூறாகப் பேசிய வழக்கில், யூடியூபர் முக்தார் கர்நாடக மாநிலத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
June 11, 2026
Dinamani Vellore
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு: கட்டணமில்லா சேவையை உறுதி செய்ய வேண்டும்
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் கட்டணமில்லா சேவை உறுதி செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 mins
June 11, 2026
Dinamani Vellore
அல்லி நகரத்து மண்வாசனை...
நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
3 mins
June 11, 2026
Dinamani Vellore
அதிமுக முன்னாள் அமைச்சர் பென்ஜமின் திமுகவில் இணைந்தார்
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பா. பென்ஜமின் அந்தக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் புதன்கிழமை இணைந்தார்.
1 min
June 11, 2026
Dinamani Vellore
குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்
ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்
1 min
June 11, 2026
Dinamani Vellore
இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1 min
June 11, 2026
Dinamani Vellore
நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி
பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.
1 mins
June 11, 2026
Dinamani Vellore
வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியைக் கொலை செய்த சம்பவத்தில் கைதான இருவருக்கும் எதிராக போலீஸார் சம்பவம் நடைபெற்ற 21 நாள்களிலேயே 819 பக்க குற்றப்பத்திரிகையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தாக்கல் செய்துள்ளனர்.
1 min
June 11, 2026
Dinamani Vellore
இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு
கடந்த மே மாதத்தில்
1 min
June 11, 2026
Translate
Change font size

