Facebook Pixel அறிவிப்பும் அதிருப்தியும்... | Dinamani Tiruvarur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

அறிவிப்பும் அதிருப்தியும்...

Dinamani Tiruvarur

|

May 02, 2025

மிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை சமாதானப்படுத்தும் வகையில் அண்மையில் நிறைவடைந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் சில அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும், பண்டிகைக்கால முன்பணம் 10,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாகவும், திருமண முன்பணம் ரூ. 5 லட்சமாகவும், பொங்கல் பரிசுத்தொகை ரூ. 500-லிருந்து ரூ. 1,000-ஆகவும், ஓய்வூதியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ. 4,000-லிருந்து ரூ. 6,000-ஆகவும், குழந்தைகளின் உயர் கல்விக்கான முன்பணம் தொழில் படிப்புகளுக்கு ரூ. ஒரு லட்சமாகவும், கலை, அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ. 50,000-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருக்கிறார்.

மேலும், நிறுத்திவைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பை சரண்செய்து பணப் பலன் பெறும் நடைமுறை வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய மாநில அரசால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை வருகிற செப்டம்பர் 30-க்குள் அளிக்க அறிவுறுத்தப்படும் என்றும், பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலம் அவர்களது பதவி உயர்வுக்கான தகுதியைப் பாதிக்காத வகையில் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

முதல்வரின் இந்த அறிவிப்புகளில் சிலவற்றை அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன. அதேநேரத்தில், அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாக்கிக்கொள்வது தவிர, ஏனைய அறிவிப்புகள் அரசிடமிருந்து கடன் பெற்று அதைத் திரும்பச் செலுத்துவதாகும் என இந்தச் சங்கங்களின் நிர்வாகிகள் விமர்சிக்கின்றனர்.

MORE STORIES FROM Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

'பெரும்பான்மையான திரிணமூல் எம்எல்ஏக்கள் மம்தாவுடன் உள்ளனர்'

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியுடன் தான் உள்ளனர்; கட்சியில் பிளவு ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்படுவது வதந்தி என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சோபன்தேவ் சட்டோபாத்யாய தெரிவித்தார்.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

இளையராஜா பிறந்த நாள்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

இசையமைப்பாளர் இளையராஜாவின் 83-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு முதல்வர் ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruvarur

வேதாந்தா குழும அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை

ஃபெமா வழக்கு

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruvarur

டெஸ்ட்டில் வெளிச்சம் குறைந்தால் பிங்க் பந்து

வானிலை காரணமாக வெளிச்சம் பாதிக்கப்படும் டெஸ்ட் ஆட்டங்களில் பரிசோதனை முறையில் பிங்க் பந்தை பயன்படுத்த அனுமதிப்பது உள்பட, சில முக்கியமான முடிவுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மேற்கொண்டுள்ளது.

time to read

1 mins

June 03, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஜூன் 8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா வெற்றி

நார்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, டி.குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நீடிக்கிறது.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஜல் ஜீவன் மிஷன் 2.0: மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruvarur

பிரிட்டனின் முன்னோடி முடிவு !

நவீன யுகத்தில் சமூக வலைதளங்கள் அவசர, அவசிய தேவையாகிவிட்டா லும், வளரிளம் பருவத்தினர் தங்களது உயி ஏனைய நேரத்தை வீணாக சமூக வலை தளங்களில் கழிக்கின்றனர்.

time to read

4 mins

June 03, 2026

Dinamani Tiruvarur

சென்னை துறைமுக ரசாயன கிடங்கில் தீ

நச்சுப்புகை பரவியதால் மக்கள் அவதி

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruvarur

ஆளுநரின் செயலர் உட்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு ஆளுநரின் செயலர் உட்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வித் துறைக்கு சிறப்புச் செயலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 mins

June 03, 2026

Translate

Share

-
+

Change font size