Try GOLD - Free
தரமான கல்வி... வளமான வாழ்வு!
Dinamani Tiruvarur
|April 19, 2025
பள்ளிக் கல்விதான் ஒரு மாணவரின் ஆளுமையை நிர்ணயிக்கும். தற்போதைய நினைவாற்றல் அடிப்படையில் கற்பித்தல் முறையானது, மாணவனது சிந்திக்கும் திறனை வளர்க்காது. சுய சிந்தனையோடு ஒரு பொருண்மையை அலசி ஆராயும் அறிவாற்றல் கொண்டிருப்பது இன்றைய நவீன உலகத்தில் வெற்றி பெற இன்றியமையாததாகும்.
கற்றோருக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பது கல்விக்கு சமுதாயம் கொடுக்கும் அங்கீகாரம். பிள்ளைப் பிராயத்தில் சரியான வகையில் கல்வி புகட்டப்பட வேண்டும். இது பெற்றோரின் கடமை மட்டுமல்ல, சமுதாயத்தின் ஒட்டுமொத்த பொறுப்புமாகும். அரசாங்கம் எல்லாவகையிலும் இளைய சமுதாயத்துக்கு தரமான கல்வி கிடைப்பதற்கு உரிய கட்டமைப்பு, ஆசிரியர் நியமனம், மற்ற நிர்வாக அமைப்புகள் ஆகியவை நிறைவேற உரிய தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சுதந்திர இந்தியாவில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து நமது தேசத் தலைவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 1948-49 இல் அமைத்த கமிஷன் உயர் கல்வியை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து பரிந்துரை அளித்தது. 1952-53 இல் டாக்டர் லக்ஷ்மணசாமி முதலியார் தலைமையில் இடைநிலைக் கல்வி பிரச்னைகள் ஆராயப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
1968-ஆம் ஆண்டு கல்விக்கான திட்டம் முதலில் கொள்கை அளவில் வகுக்கப்பட்டது. அதன்படி, தேசிய வளர்ச்சி, தேசிய ஒருங்கிணைப்பு, ஒற்றுமை முக்கிய இலக்காக வைக்கப்பட்டது. 1990 இல் எல்லாருக்குமான கல்வி என்ற முழக்கம் உலகெங்கிலும் பரவியது. அதன் விளைவாக, 2002 ஆம் ஆண்டு கல்வி அடிப்படை உரிமையாக 86-ஆவது அரசியல் சாசன திருத்தம் மூலம் 21 ஆ பிரிவு சேர்க்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டு 6 வயதிலிருந்து 14 வயது வரை கட்டாய இலவசக் கல்வி உறுதி செய்யப்பட்டது.
ஐ.நா.சபை 2015-ஆம் ஆண்டு நாடுகள் அடைய வேண்டிய வளர்ச்சிக்கான இலக்குகளை அறிவித்தது. தரமான கல்வி அளிப்பது, பாரபட்சமற்ற உயர் கல்வி ஆகியவை அதன் முக்கியமான இலக்குகள். இதன் பின்னணியில்தான் டாக்டர் கஸ்தூரிரங்கன், மேனாள் இஸ்ரோ சேர்மன் தலைமையில் மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையைத் தயாரிக்க ஜூன் 2017 ஆம் ஆண்டு குழு அமைத்தது.
This story is from the April 19, 2025 edition of Dinamani Tiruvarur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
நோய்நாடி நோய்முதல் நாடி...
நாடுதோறும் நீதிமன்றங்கள் நிறைய இருக்கின்றன.
3 mins
April 25, 2026
Dinamani Tiruvarur
ஜனநாயகத்தை மதித்து அமைதிப் புரட்சி!
தமிழக மக்கள் ஜனநாயகத்தை மதித்து, அமைதிப் புரட்சி செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
1 min
April 25, 2026
Dinamani Tiruvarur
வாக்காளர்களுக்கு பாராட்டு
வாக்காளர் ஒவ்வொருவரும் சமூக மாற்றத்துக்கான உன்னதமான பணியைச் செய்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 min
April 25, 2026
Dinamani Tiruvarur
ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கு முடித்துவைப்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
மென் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்த தேசிய மனித உரிமை ஆணைய உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
1 min
April 25, 2026
Dinamani Tiruvarur
கனிவான இதயம்...துணிச்சலான சிந்தனை
வாழ்க்கை பெரும்பாலும் ஒரு விசித்திரமான சவாலையே நம்முன் நிறுத்துகிறது.
2 mins
April 25, 2026
Dinamani Tiruvarur
சட்டப்பேரவைத் தேர்தல்: விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஏராளமானோர் விமானத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
1 min
April 23, 2026
Dinamani Tiruvarur
வங்கதேசத்தை வென்றது இலங்கை
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்
1 min
April 23, 2026
Dinamani Tiruvarur
விஜேடி பல்கலை.- டாடா மோட்டார்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்
விஐடி பல்கலைக்கழகம், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
1 min
April 23, 2026
Dinamani Tiruvarur
வீட்டில் பதுக்கிய 900 சேலைகள் பறிமுதல்
மன்னார் குடி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.
1 min
April 23, 2026
Dinamani Tiruvarur
போதுமலைக்கு முதல்முறையாக சாலை வழியாக கொண்டுசெல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்
ராசிபுரம் அருகே உள்ள மலைக் கிராமமான போதமலைக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதால் முதல்முறையாக சாலை வழியாக வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டுசெல்லப்பட்டன.
1 min
April 23, 2026
Translate
Change font size

