Try GOLD - Free
பூமித் தாயைக் காப்போம்
Dinamani Tiruvallur
|June 26, 2025
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? - நாங்கள் சாகவோ? என்று மகாகவி பாரதி பாடினார். ஆங்கிலேயர்கள் வந்து நம் நாட்டைக் கொள்ளையடித்தது குறித்து அவர் மனம் வருந்திப் பாடினார். விடுதலை பெற்ற தேசத்தில், நம் நாட்டவர்களே மிகப் பெரிய அளவில் கொள்ளையடிப்பதை யார் பாடுவது?
மனித இனத்தை மட்டுமல்ல, உலக உயிர்களைத் தாங்கியிருப்பது பூமியாகும். பூமியிருந்தால்தானே உயிர்கள் உயிர்வாழ முடியும். பூமி உயிர்களால் நிரம்பி வழிகிறது. அந்த பூமியைக் காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வோர் உயிருக்கும் உள்ளது. மனித உயிர்களுக்கு இந்தக் கடமை அதிகமாக உள்ளது.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை என்றார் திருவள்ளுவர். தன்னைத் தோண்டுகிறவர்களையும் தாங்கி நிற்கும் பூமியைப்போல தம்மை இகழ்வாரைப் பொறுத்தலே மிகச் சிறந்த பண்பாகும் என்று அவர் கூறுகிறார்.
பூமி என்பது வெறும் மண்ணும், மக்களும் அல்ல; மலை, கடல், காடுகள், ஆறுகள், ஏரிகள் எல்லாம் சேர்ந்தது தான். இவை எல்லாம் அழிக்கப்படுகின்றன. மலைகளிலும், காடுகளிலும் ஆண்டாண்டு காலமாக வாழும் மக்களையும், கடல்சார் மக்களாகிய மீனவர்களையும் விரட்டியடித்துவிட்டு, அந்த நிலப்பரப்பில் இருக்கும் கனிமவளங்களைக் கொள்ளையடிக்கின்றனர்.
ஒவ்வொரு மனிதனின் தேவையையும் நிறைவேற்ற முடியும். ஆனால், ஒரே ஒரு மனிதனின் பேராசையைக்கூட நிறைவேற்ற முடியாது என்றார் மகாத்மாகாந்தி. பேராசை கொண்ட மனிதனின் கொள்ளையால் இயற்கை வளங்கள் இல்லாமல் போகின்றன. இதற்கு அரசு அதிகாரிகள் துணை போகின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்றமே உறுதிசெய்துள்ளது.
பூமித் தாயின் மார்பை அறுத்து ரத்தத்தைக் குடிப்பவர்களாக குவாரி உரிமையாளர்கள் இருக்கின்றனர் என்று குவாரி விதிமீறல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் புரவிபாளையம் கிராமத்தில் செந்தாமரை என்பவர் பட்டா நிலங்களில் 2009-ஆம் ஆண்டு முதல் குவாரிகளை நடத்திவருகிறார். அவரது குவாரியில் விதிமீறல் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழு 2021 ஆம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் சிறிய அளவில் விதிமீறல் இருப்பதாகக் கூறப்பட்டது. விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிக்கையை ஆய்வு செய்த அதிகாரிகள் குவாரியிலிருந்து சட்ட விரோதமாக கனிமவளங்கள் எடுத்ததாகக் கூறி ரூ.32 கோடியே 29 லட்சத்து 77,792 அபராதம் விதித்து 2022ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
This story is from the June 26, 2025 edition of Dinamani Tiruvallur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Tiruvallur
இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Tiruvallur
4-ஆம் காலாண்டு: தனியார் வங்கிகளை முந்தும் பொதுத் துறை வங்கிகள்!
நிதிநிலை முடிவுகள் | லாபம் மற்றும் கடன் வளர்ச்சியில் அதிரடி
1 min
May 14, 2026
Dinamani Tiruvallur
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Tiruvallur
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Tiruvallur
ஆண்டர்ஸை வெறியேற்றினார் கெளகஃப்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவாவை புதன்கிழமை வீழ்த்தினார்.
1 min
May 14, 2026
Dinamani Tiruvallur
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Dinamani Tiruvallur
5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்
இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்
2 mins
May 14, 2026
Dinamani Tiruvallur
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Dinamani Tiruvallur
ஷான்டோ, நஹித் ராணா அசத்தல்: மிர்பூர் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
1 min
May 13, 2026
Translate
Change font size
