Facebook Pixel பூமித் தாயைக் காப்போம் | Dinamani Tiruvallur - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

பூமித் தாயைக் காப்போம்

Dinamani Tiruvallur

|

June 26, 2025

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? - நாங்கள் சாகவோ? என்று மகாகவி பாரதி பாடினார். ஆங்கிலேயர்கள் வந்து நம் நாட்டைக் கொள்ளையடித்தது குறித்து அவர் மனம் வருந்திப் பாடினார். விடுதலை பெற்ற தேசத்தில், நம் நாட்டவர்களே மிகப் பெரிய அளவில் கொள்ளையடிப்பதை யார் பாடுவது?

- உதயை (மு. வீரையன்)

மனித இனத்தை மட்டுமல்ல, உலக உயிர்களைத் தாங்கியிருப்பது பூமியாகும். பூமியிருந்தால்தானே உயிர்கள் உயிர்வாழ முடியும். பூமி உயிர்களால் நிரம்பி வழிகிறது. அந்த பூமியைக் காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வோர் உயிருக்கும் உள்ளது. மனித உயிர்களுக்கு இந்தக் கடமை அதிகமாக உள்ளது.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை என்றார் திருவள்ளுவர். தன்னைத் தோண்டுகிறவர்களையும் தாங்கி நிற்கும் பூமியைப்போல தம்மை இகழ்வாரைப் பொறுத்தலே மிகச் சிறந்த பண்பாகும் என்று அவர் கூறுகிறார்.

பூமி என்பது வெறும் மண்ணும், மக்களும் அல்ல; மலை, கடல், காடுகள், ஆறுகள், ஏரிகள் எல்லாம் சேர்ந்தது தான். இவை எல்லாம் அழிக்கப்படுகின்றன. மலைகளிலும், காடுகளிலும் ஆண்டாண்டு காலமாக வாழும் மக்களையும், கடல்சார் மக்களாகிய மீனவர்களையும் விரட்டியடித்துவிட்டு, அந்த நிலப்பரப்பில் இருக்கும் கனிமவளங்களைக் கொள்ளையடிக்கின்றனர்.

ஒவ்வொரு மனிதனின் தேவையையும் நிறைவேற்ற முடியும். ஆனால், ஒரே ஒரு மனிதனின் பேராசையைக்கூட நிறைவேற்ற முடியாது என்றார் மகாத்மாகாந்தி. பேராசை கொண்ட மனிதனின் கொள்ளையால் இயற்கை வளங்கள் இல்லாமல் போகின்றன. இதற்கு அரசு அதிகாரிகள் துணை போகின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்றமே உறுதிசெய்துள்ளது.

பூமித் தாயின் மார்பை அறுத்து ரத்தத்தைக் குடிப்பவர்களாக குவாரி உரிமையாளர்கள் இருக்கின்றனர் என்று குவாரி விதிமீறல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் புரவிபாளையம் கிராமத்தில் செந்தாமரை என்பவர் பட்டா நிலங்களில் 2009-ஆம் ஆண்டு முதல் குவாரிகளை நடத்திவருகிறார். அவரது குவாரியில் விதிமீறல் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழு 2021 ஆம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் சிறிய அளவில் விதிமீறல் இருப்பதாகக் கூறப்பட்டது. விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிக்கையை ஆய்வு செய்த அதிகாரிகள் குவாரியிலிருந்து சட்ட விரோதமாக கனிமவளங்கள் எடுத்ததாகக் கூறி ரூ.32 கோடியே 29 லட்சத்து 77,792 அபராதம் விதித்து 2022ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.

MÁS HISTORIAS DE Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்

உயர்கல்வித் துறையில் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நிகழாண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்தார்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

இறுதியில் ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

கவிஞர் புவியரசு (94) காலமானார்

கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.

time to read

2 mins

July 01, 2026

Dinamani Tiruvallur

சீர்திருத்தங்கள், தற்சார்பு நடவடிக்கைகள்: மத்திய செயலர்களுடன் பிரதமர் ஆலோசனை

நாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் தொழில் புரிவதை எளிதாக்குவதற்கான சீர்திருத்தங்கள் மற்றும் தற்சார்பு நடவடிக்கைகள் ஊக்குவிப்பு ஆகிய இரு அம்சங்களின்கீழ், மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை உயர்நிலை ஆலோசனை நடத்தினார்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

கோயில்களில் பிரசாதம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய உத்தரவு

கோயில்களில் பிரசாதம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை இந்து சமய அறநிலையத் துறை உறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஸ்வியாடெக், சின்னர் முன்னேற்றம்

புல்தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளர்களான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் யானிக் சின்னர் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruvallur

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயர்வு

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2026, மார்ச் இறுதியில் ரூ.72.08 லட்சம் கோடியாக (762.8 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruvallur

புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்

அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruvallur

தோல்வி அதிர்ச்சியிலிருந்து திமுக மீளவில்லை: துரை வைகோ

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி அதிர்ச்சியிலிருந்து திமுக இன்னும் மீளவில்லை என்றார் மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruvallur

மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு

புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.

time to read

2 mins

June 30, 2026

Translate

Share

-
+

Change font size