Try GOLD - Free
தேவை... சூழலுக்கேற்ற சீர்திருத்தம்!
Dinamani Tiruvallur
|April 01, 2025
காவல் துறையில் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடு சட்டம் ஒழுங்கைப் பேணிக் காக்க தொடர்ந்து உழைக்கிறார்கள். அவர்களுக்கு சரியான கால இடைவெளிகளில் பதவி உயர்வு மற்றும் ஏனைய பணி சார்ந்த பயன்கள் மற்றும் அங்கீகாரம் உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.
சமூகத்தில் குற்றச் செயல்கள் புரிபவர்களை உரிய வகையில் அறிவுறுத்தியும் கண்டித்தும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தும் பொது அமைதியைப் பேண பெரிதும் துணை நிற்பவர்கள் காவல் துறையினர். துணிச்சலும், நேர்மையும், கருணையும் கொண்ட பலர் தமிழ்நாடு காவல் துறையில் இருக்கவே செய்கின்றனர். பேரிடர் நேரங்களிலும் பெருந்தொற்றுக் காலங்களிலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடமையாற்றியவர்கள் நம் காவல் துறையினர். இப்படியாகப் பல பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட தமிழ்நாடு காவல் துறைக்கு இது ஒரு நெருக்கடியான காலம்.
பள்ளி, கல்லூரிகளில் அதிகரித்து வரும் போதைப் பொருள்களின் நடமாட்டம், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி நிகழும் பொருளாதார மோசடிகள் உள்ளிட்ட கண்காணிப்புகளைக் கடந்த குற்றச்செயல்கள் பெருகிவருகின்றன. காவல் துறை மீதான நம்பகத்தன்மையை சீர்குலைக்கின்ற இத்தகைய நிகழ்வுகள் வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்தெறியப்பட வேண்டும்.
சமீபத்தில் கோயம்புத்தூரில் காவல் துறையின் தலைவர் ஒருவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இன்னும் ஒரு மாதத்துக்குள் பள்ளிகளில் போதைப்பொருள் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்பதுதான் அந்த அறிக்கை. இது பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி. சமூக அக்கறை கொண்டவர்களுக்கு இது மனதை உலுக்கும் செய்தி. கிராமப்புறங்களில் தொடங்கி பெருநகரங்கள் வரை போதைப் பொருள்கள் விற்பனை கொடிகட்டிப் பறக்கின்றது.
தமிழ்நாட்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் ஏறத்தாழ 45 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 66 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கமான ஹெராயின், எல்எஸ்டி ஸ்டாம்ப், மெத்தம்பெட்டமின், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றோடு தற்போது அதிகம் தீங்கிழைக்கும் சிந்தட்டிக் என்ற வேதிப் போதைப் பொருள் புழக்கமும் அதிகரித்துவிட்டது. இதன் பரிமாற்றத்துக்கு சமூக ஊடகங்களும், கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்களும் சமூக விரோதச் செயலில் ஈடுபடுபவர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் தற்போது தமிழ்நாடு அரசும் காவல் துறைத் தலைவரும் கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள செய்திகளைக் காண்கிறோம்.
This story is from the April 01, 2025 edition of Dinamani Tiruvallur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!
'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.
1 mins
June 21, 2026
Dinamani Tiruvallur
மறந்துபோன அடையாளங்கள் மீள் உருவாக்கம்
நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன.
2 mins
June 21, 2026
Dinamani Tiruvallur
அழகான குதிரைகள் 5
வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில் குதிரைவண்டிகளின் பயன்பாடு அதிகமிருந்தது.
1 mins
June 21, 2026
Dinamani Tiruvallur
தியாகத்தின் உருவம் !
உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை.
2 mins
June 20, 2026
Dinamani Tiruvallur
மேக்கேதாட்டு அணை கூடாது
மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
2 mins
June 20, 2026
Dinamani Tiruvallur
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஜூன் 25 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் ஜூன் 25 வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
June 20, 2026
Dinamani Tiruvallur
தங்கம் பவுனுக்கு ரூ.3,040 குறைவு
ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560-க்கு விற்பனையானது.
1 min
June 20, 2026
Dinamani Tiruvallur
விபி-ஜி ராம் ஜி திட்ட அமலாக்கம்: நாடு முழுவதும் 100 அதிகாரிகள்
விபி-ஜிராம் ஜி எனப்படும் வளர்ந்த பாரதம் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் (125 நாள் வேலைத் திட்டம்) ஜூலை 1- ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்பட உள்ளது.
1 min
June 20, 2026
Dinamani Tiruvallur
புத்தகங்கள் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கும்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன்
1 mins
June 20, 2026
Dinamani Tiruvallur
மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2-ஆவது வெற்றி
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.
1 min
June 20, 2026
Translate
Change font size

