Try GOLD - Free
இளமை கழிந்ததற்கு ஒரு இரங்கற்பா!
Dinamani Tiruppur
|July 06, 2025
கையறுநிலை என்பது புறப்பொருள் துறைகளுள் ஒன்று. அரசன் இறப்பு அவனைச் சேர்ந்தோர் அவ்விறந்து பாட்டைச் சொல்லி ஒழுக்கம் தளர்தல் எனப் புறப்பொருள் வெண்பா மாலை (267) இதற்கு இலக்கணம் கூறுகிறது.
முனைவர் ம.பெ.சீனிவாசன்
இந்த வகையில் பாரியின் மறைவுக்காக கபிலரும், பாரி மகளிரும், அதியமானஞ்சிக்காக ஒளவையும் பாடிய புறநானூற்றுப் பாடல்கள் புகழ்மிக்கவை; இன்றும் நம் கண்களில் நீர் சுரக்க வைப்பவை.
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின் எந்தையு முடையேம்; எம் குன்றும் பிறர்கொளார், இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின் வென்றெறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! (112)
பாரி மகளிர் தந்தையையும் தமக்குரிய மலையையும் இழந்து செயலற்று ஏங்கிப் பாடுதலின் இது கையறு நிலையாயிற்று. இந்த அவலத்துக்கு இடையிலும் வஞ்சனையால் வென்ற மூவேந்தரை, 'வென்று எறி முரசின் வேந்தர்' என்றது இகழ்ச்சிக் குறிப்பு.
ஏனையோர்க்கெல்லாம், 'இனியன்' ஆகிய பாரி மூவேந்தர்க்கு மட்டும் 'இன்னான்' (வேண்டாதவன்) ஆனது எப்படியோ? என்னும் கபிலரின் கூற்றிலும் இவ்வெள்ளல் குறிப்பே எதிரொலிக்கின்றது.
அண்ணல் யானை வேந்தர்க்கு இன்னான் ஆகிய இனியோன் குன்றே (115:5-6) என்பன அவரின் பாடலடிகள்.
இவ்வாறே அதியமானஞ்சியின் மறைவுச் செய்தி கேட்டதும், இல்லாகியரோ காலை மாலை! அல்லாகியர் யான் வாழும் நாளே! (232) என்னும் ஒளவையின் பாடலில் ஒலிக்கும் அவலத்தையும் அளவிட்டுச் சொல்லவியலாது.
மேலும், 'சிறியகட்பெரினே' (233) எனத் தொடங்கும் பாடலில், இனிப் பாடுநரும் இல்லை; பாடுநர்க்கொன்று ஈகுநரும் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லி முடிப்பது அதியமான் நெடுமான் அஞ்சியின் வள்ளன்மை மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையின் அடையாளமாகவே உள்ளது.
This story is from the July 06, 2025 edition of Dinamani Tiruppur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruppur
Dinamani Tiruppur
சீருடைகளைச் சீராக்குவோம்!
பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்னணிகளிலிருந்து வரும் பள்ளி மாணவர்களிடையே சமத்துவம், ஒழுக்கம் ஆகிய உணர்வுகளை வளர்க்கும் நோக்கத்துடன், ஆங்கிலேயர் ஆட்சியின் போது பள்ளிச் சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
2 mins
May 05, 2026
Dinamani Tiruppur
அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி தோல்வி
மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் பி. மூர்த்தியும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.
1 min
May 05, 2026
Dinamani Tiruppur
வரலாறு படைத்தது தவெக
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
1 mins
May 05, 2026
Dinamani Tiruppur
தவெக, திமுகவிடம் கோட்டையை இழந்த அதிமுக
கோவையில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி
1 mins
May 05, 2026
Dinamani Tiruppur
ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Tiruppur
98,110 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றி
எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரைவிட 98,110 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Tiruppur
கேரளம்: 21 அமைச்சர்களில் 13 பேர் தோல்வி
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் உள்பட 21 மாநில அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்தனர்.
1 min
May 05, 2026
Dinamani Tiruppur
பெரம்பூரில் விஜய் சாதனை வெற்றி!
பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
1 min
May 05, 2026
Dinamani Tiruppur
20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி
அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.
1 mins
May 05, 2026
Dinamani Tiruppur
வெற்றியுடன் மீண்டது மும்பை
ரயான் ரிக்கெல்டன், ரோஹித் சர்மா விளாசல்
1 min
May 05, 2026
Translate
Change font size
