Facebook Pixel அரசமைப்புச் சட்டம் தோற்றுவிட்டது! | Dinamani Tiruppur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

அரசமைப்புச் சட்டம் தோற்றுவிட்டது!

Dinamani Tiruppur

|

May 09, 2025

அடிமை நிலையிலும், சுதந்திர நிலையிலும் இவ்வளவு அகன்ற மாணப் பெரிய நாட்டில், நேர்மை, வாய்மை, அறிவுக் கூர்மை ஆகியவை பொதுவாழ்வில் கோலோச்சியதற்கு எம்மான் காந்தியின் தலைமையே காரணம். அவன் நடந்தான்; அவன் தடம் பார்த்து நாடு நடந்தது.

- பழ. கருப்பையா

அண்மைக் காலமாக நாடு இதுவரை சந்தித்திராத சட்டச் சிக்கல்களைச் சந்திக்க நேரிட்டது. நம்முடைய அரசியல் சாசனம் மிகவும் விரிவானது. ஆட்சியினர், அதிகார வர்க்கம், நீதித்துறை எனத் தனித்தனி அதிகாரங்களோடு மூன்று பிரிவுகளாக வரையறுக்கப்பட்டு, நாடு இயங்குகிறது. ஒன்றோடு ஒன்று உராய்வதும் உண்டு. எழுதி வைக்கப்பட்டுள்ள சாசனத்தின்படி அந்த உராய்வுகளுக்குத் தீர்வு காணப்படுவதுமுண்டு. உச்சநீதிமன்றத்தைக் 'குடியாட்சியின் காவல் நாய்' என்று கூறுவர். அரசியல் சாசனமே உயர்ந்தது என்று அதற்குத் தனிப்பு கழ் பாடுவோரும் உண்டு. எந்த அரசியல் சாசனமும் மனிதர்களால் ஆக்கப்படுவதுதான். அதை ஆக்கும் மனிதர்களின் அறிவுத் திறம், நேர்மைத் தரத்தை ஒட்டி அந்தச் சாசனம் சிறப்புறுகிறது. இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட காலம் அறம் பிறழாச் சான்றோர்கள் நாட்டின் தலைமைகளில் இருந்த காலம். நேரு, வல்லபபாய் படேல், அம்பேத் கர், கிருபளானி, செயப்பிரகாசு நாராயணன், இராசாசி என நிகரற்ற அறிஞர்களும் மழை பெய்யென்று இவர்கள் கட்டளையிட்டால் பெய்யும் என்று சொல்லத்தக்க அளவு நேரியர்களும் சேர்ந்து விவாதித்து விவாதித்து உருவாக்கிய அரசியல் சாசனம் நம்முடையது. இந்தியத் தலைமையமைச்சராய் இருந்த மொராச்சி தேசாய் ஒருமுறை சொன்னார்: குற்றவியல் சட்டத்தைக் கிழித்தெறிந்து விட்டாலும், என்னால் எந்தத் தப்பும் செய்ய முடியாது. இப்படி அடிமை நிலையிலும், சுதந்திர நிலையிலும் இவ்வளவு அகன்ற மாணப் பெரிய நாட்டில், நேர்மை, வாய்மை, அறிவுக் கூர்மை ஆகியவை பொதுவாழ்வில் கோலோச்சியதற்கு எம்மான் காந்தியின் தலைமையே காரணம். அவன் நடந்தான்; அவன் தடம் பார்த்து நாடு நடந்தது. பேரரசன் அசோகனுக்குப் பிறகு அறம் கோலோச்சிய காலம் அது தான். நியாயமே எல்லாவற்றிலும் பெரியது. தனிமனித வாழ்வாயினும், ஆட்சி அதிகாரமாயினும் நியாயத்தை மையமாகக் கொண்டே சிந்தித்தும் வாழ்ந்தும் பழக்கப்பட்ட தலைமுறையினர் வடித்த அரசியல் சாசனம் என்பதால் அவர்கள் இன்னொரு பக்கத்தைப் பார்க்கத் தவறிவிட்டனர். அந்த இன்னொரு பக்கம்தான் இன்றைய குளறுபடிகளுக்கெல்லாம் காரணம். ஒரு மந்திரி போக்குவரத்துத் துறையில் இருந்தார். ஓட்டுநர், நடத்துநர் வேலைகளுக்கு ஆளெடுத்தபோது, அவர்களுக்கு அந்த வேலைகளைத் தருவதற்காக இலஞ்சம் வாங்கினார் என்பது குற்றச்சாட்டு. பாதிக்கப்பட்டவர்கள் தொடுத்த வழக்கு கொஞ்ச

MORE STORIES FROM Dinamani Tiruppur

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்

களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 08, 2026

Dinamani Tiruppur

ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு

தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்

time to read

1 min

May 08, 2026

Dinamani Tiruppur

பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி

இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை

time to read

1 min

May 08, 2026

Dinamani Tiruppur

அரசாணையால் ஆபத்து!

மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.

time to read

3 mins

May 08, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்

பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.

time to read

2 mins

May 08, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!

ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.

time to read

3 mins

May 06, 2026

Dinamani Tiruppur

இத்தாலியன் ஓபன் 2-ஆவது சுற்றில் ஜெங், ஆண்ட்ரீஸ்கு

இத்தாலியில் நடைபெறும் 1,000 புள்ளிகள் கொண்ட இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், சீனாவின் கின்வென் ஜெங், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Tiruppur

101 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்த அதிமுக

சட்டப் பேரவைத் தேர்தலில் 101 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Tiruppur

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜிநாமா?

தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர், திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

time to read

1 min

May 06, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

கிராம நத்தம் நிலங்களை உரிமை கோர முடியாது: உயர்நீதிமன்றம்

கிராம நத்தம் நிலங்களை யாரும் ஆக்கிரமிக்கவோ, உரிமை கோரவோ முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

May 06, 2026

Translate

Share

-
+

Change font size