Facebook Pixel மாசில்லாத காற்று... நோயில்லாத வாழ்வு! | Dinamani Tirunelveli - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

மாசில்லாத காற்று... நோயில்லாத வாழ்வு!

Dinamani Tirunelveli

|

March 21, 2025

உணவில், தண்ணீரில் கெடுதல் இருந்தால், உடனே ஏதாவது நோய் ஏற்படும். எதனால் பிரச்னை என்பது உடனே தெரியும். ஆனால் நாம் சுவாசிக்கும் காற்றில் மாசு இருந்தால், அது உடலில் பரவி நிதானமாக அழித்தொழிப்பைத் தொடங்கும்.

- ஆர்.நடராஜ்

ம்பை பாந்த்ரா நகர்ப்புறத்தில் ஒரு பொது உரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த காணொலி நிகழ்வில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் நிபுணர் பிரையான் ஜான்சன் பங்கேற்றார். நிகழ்ச்சியின் நடுவில் அவர், 'சுற்றுப்புறக் காற்றில் அதிக மாசு படிந்துள்ளது; தொண்டையை எரியச் செய்கிறது; கண்களில் நீர் கசிகிறது; தோல் வறண்டு வருவதுபோல் இருக்கிறது' என்று கூறி அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது; மாசுக் கட்டுப்பாடு பிரச்னையை முன் வைத்தது. மனிதனின் உயிர் பாதுகாப்புக்கும் சுகமான வாழ்க்கைக்கும் முக்கியமானவை ஆரோக்கிய உணவு, மாசில்லாத காற்று, சுத்தமான குடிநீர்.

போகி பண்டிகையின்போது பழைய பொருள்களைக் கழித்து வீட்டைச் சுத்தம் செய்து பொங்கல் தின நாளை வரவேற்கத் தயாராக வேண்டும் என்பது ஐதீகம். ஆனால், அந்த நாளில் பழைய பொருள்களுடன் பிளாஸ்டிக், வாகன டயர் எல்லாவற்றையும் கலவையாக வீட்டு வாசலில் கொளுத்தும் கொடிய பழக்கம், சீர் செய்ய முடியாத மாசைப் படரச் செய்கிறது.

சமீபத்தில் கட்டட வேலையின்போது எழும் தூசு, கழிவுகள் சுற்றுச்சூழலைப் பாழாக்கக் கூடாது என்ற வகையில் சென்னை மாநகராட்சி அதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கட்டுமானப் பகுதியைச் சுற்றி துணியால் மூடப்பட வேண்டும்; கழிவுகளோ துகள்களோ வெளியில் விழக்கூடாது என்ற விதி உள்ளது. அதை மீறுபவர்களுக்கு ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது சென்னையில் பல இடங்களில் புதிய கட்டடங்கள் கட்டப்படுவதும் பழைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதுவும் இரவு -பகலாக. இதனால், அக்கம்பக்கத்தினர் படும்பாடு சொல்லி மாளாது. விதிகள் ஏட்டளவில் மட்டும் இல்லாது, கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

MORE STORIES FROM Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

திருப்பூரில் 47 வாக்குகள் கூடுதலாக பதிவான விவகாரம்: பார் கவுன்சில் பதிலளிக்க உத்தரவு

பார் கவுன்சில் தேர்தலில் திருப்பூர் வாக்குச் சாவடியில் கூடுதலாக 47 வாக்குகள் பதிவானது குறித்து சிபிசிஐடி விசாரணை கோரிய வழக்கில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உண்மை நிலை!

சிந்து நதி அமைப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பாயும் முக்கிய நதிகளான சிந்து, செனாப், ஜீலம், ராவி, பியாஸ், சட்லஜ் ஆகியவற்றை உள்ளடக்கியது.

time to read

3 mins

May 15, 2026

Dinamani Tirunelveli

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Tirunelveli

ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக்கொடி பொருத்திய வணிககப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

கேரளத்தின் புதிய முதல்வர் வி.டி.சதீசன்

நீண்ட இழுபறிக்குப் பின் காங்கிரஸ் அறிவிப்பு

time to read

1 mins

May 15, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வழிகளை 'பிரிக்ஸ்' கண்டறிய வேண்டும்

இந்தியா வலியுறுத்தல்

time to read

2 mins

May 15, 2026

Dinamani Tirunelveli

வெற்றி அவசியம்: லக்னௌவை இன்று சந்திக்கிறது சென்னை

ஐபிஎல் போட்டியின் 59-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னெௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 15) மோதுகின்றன.

time to read

1 min

May 15, 2026

Dinamani Tirunelveli

காலிறுதியில் சிந்து, லக்ஷியா சென்

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து, லக்ஷியா சென் உள்ளிட்டோர் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Tirunelveli

தமிழகத்தில் அமேசான் பஜார் ஆர்டர்கள் 5 மடங்கு அதிகரிப்பு

பிரபல இணையவழி வர்த்தக தளமான அமேசானின் மலிவுவிலை பொருள்களை விற்பனைப்படுத்தும் அமேசான் பஜார் பிரிவு, தமிழகத்தில் ஆர்டர்களின் எண்ணிக்கையில் கடந்த ஓராண்டில் மட்டும் 5 மடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Tirunelveli

மோசடி குற்றச்சாட்டு: கொல்கத்தா காவல் துறை துணை ஆணையர் கைது

மோசடி மற்றும் மிரட்டிப் பணம் பெற்ற குற்றச்சாட்டில் கொல்கத்தா காவல் துறை துணை ஆணையர் சாந்தனு சின்ஹா விஸ்வாஸை அமலாக்கத் துறை வியாழக்கிழமை கைது செய்தது.

time to read

1 min

May 15, 2026

Translate

Share

-
+

Change font size