Try GOLD - Free
வழக்குரைஞர் உள்பட பலரை மிரட்டி பணம் பறித்த போலி நிருபர்கள் 2 பேர் கைது
Dinamani Tiruchy
|March 28, 2025
கரூர் மாவட்டம், குளித்தலையில் வழக்குரைஞர், அரசு அலுவலர் உள்ளிட்டோரை மிரட்டி பணம் பறித்த போலி நிருபர் 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
-
கரூர், மார்ச் 27: இது தொடர்பான வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
குளித்தலை அண்ணா நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். வழக்குரைஞரான இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இவரிடம், குளித்தலையை அடுத்த அய்யர்மலையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர், தான் மாத இதழ் ஒன்றில் சிறப்பு நிருபராக பணியாற்றி வருவதாகவும், செந்தில்குமார் (42) என்பவர், அந்த இதழின் சிறப்பு ஆசிரியராகவும், குப்புரெட்டிப்பட்டியைச் சேர்ந்த என். சந்திரன் (40) என்பவர் நாளிதழ் ஒன்றில் மாவட்டச் செய்தியாளராக பணியாற்றி வருவதாகவும் கூறி, நீங்கள் வாடகைக்கு விட்டுள்ள வணிகக் கட்டடம் உரிய விதிமுறைகளின்படி கட்டப்படவில்லை. எனவே, எங்களுக்கு பணம் தராவிட்டால், வணிக வளாகக் கட்டடத்தை இடிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் எனக் கூறி கடந்த 10 நாள்களுக்கு முன் பகிரங்கமாக மிரட்டி உள்ளனர்.
This story is from the March 28, 2025 edition of Dinamani Tiruchy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruchy
Dinamani Tiruchy
உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!
உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2 mins
June 07, 2026
Dinamani Tiruchy
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
2 mins
June 07, 2026
Dinamani Tiruchy
உலக கோப்பை குத்துச்சண்டை: பலமான இந்திய அணி அறிவிப்பு
உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ்-2) போட்டிக்கு பலமான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1 min
June 07, 2026
Dinamani Tiruchy
தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக திரண்டனர்
1 mins
June 07, 2026
Dinamani Tiruchy
அரிமா பசித்தாலும் புல்லைத் தின்னாது
பாமரப் பண்டிதர்களின் பட்டறிவுப் பண்ணையில் பழுத்த கனிப்பிழிவே பழமொழியாகும். அது, மனிதர்கள் தங்களுக்குரிய உயர்ந்த குணங்களிலிருந்து வழுக்குகின்றபோது இடைநிறுத்திக் காக்கும் தன்மையது. தடம்மாறித் தடுமாறும்போது வழுக்கல் பாதையில் கிடைத்த ஊன்றுகோல்போல் காக்கும் வன்மையது. சில பழமொழிகள் குறளினும் குட்டையானவை.
1 mins
June 07, 2026
Dinamani Tiruchy
டபிள்யுடிஆர் செஸ்: வைஷாலி சாம்பியன்
நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், சிறிது நேரத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற டபிள்யுடிஆர் மகளிர் செஸ்டூர் போட்டியில் அவரது சகோதரி வைஷாலி பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 min
June 07, 2026
Dinamani Tiruchy
ஆட்சியையும் பிடிக்கலாம்
ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.
2 mins
June 07, 2026
Dinamani Tiruchy
முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.
1 mins
June 07, 2026
Dinamani Tiruchy
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
June 07, 2026
Dinamani Tiruchy
வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.
1 min
June 07, 2026
Translate
Change font size
