Try GOLD - Free
விரிவுபடுத்த வேண்டும்!
Dinamani Tiruchy
|March 13, 2025
விவசாயிகள் என்று சொன்னால் நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் பயிரிடும் விவசாயிகள்தான் அரசின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
-
அதிகமான விளைச்சல் பரப்பில் பயிரிடுபவர்கள் என்பதால் அவர்கள் அதிக கவனம் பெறுவதில் வியப்பொன்றுமில்லை. அதே நேரத்தில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை பயிரிடும் விவசாயிகளின் நலன் பேணப்படாமல் இருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
தக்காளி உள்ளிட்ட காய்கறிகள், பால் போன்றவை போதிய விலை பெறாமல் போகும்போது, விவசாயிகள் மனக்கொதிப்பில் அவற்றை சாலைகளில் கொட்டிப் போராடுவது என்பது அவ்வப்போது நடக்கும் நிகழ்வாக நாடு தழுவிய அளவில் தொடர்கிறது. அதேபோல, மல்லிகை, ரோஜா, சாமந்தி உள்ளிட்ட மலர் விவசாயத்தில் ஈடுபடும் வேளாண் பெருமக்களும் தங்களது விளைபொருள்களுக்கு போதிய விலை கிடைக்காமல் அவற்றை வீணாக்குவதும் அவ்வப்போது நிகழ்கிறது.
பணப்பயிர்களைப் போல பெரும் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுபவை அல்ல, காய்கறிகளும், மலர் வகைகளும். வாழை, மா, எலுமிச்சை, கறிவேப்பிலை, முருங்கை, கேரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு போன்றவை விதிவிலக்குகள். அவற்றிலுமேகூட, அதிக விளைச்சல் ஏற்படும் போது, போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் இழப்பை எதிர்கொள்கிறார்கள்.
விளைந்த தக்காளி பழத்தை சாலைகளில் கொட்டியும், விளைந்த வயல்களிலேயே அழித்தும் வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. இடுபொருள்களுக்கான விலைகூட கிடைக்காததால் அவற்றை அழிக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், அதே பொருள்கள் நுகர்வோருக்கு கிலோ ரூ. 25 முதல் ரூ. 30 வரையில் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
This story is from the March 13, 2025 edition of Dinamani Tiruchy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruchy
Dinamani Tiruchy
அரசாணையால் ஆபத்து!
மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.
3 mins
May 08, 2026
Dinamani Tiruchy
முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்
பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.
2 mins
May 08, 2026
Dinamani Tiruchy
பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி
இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை
1 min
May 08, 2026
Dinamani Tiruchy
ஆட்சி அமைக்க விஜய்யை அழைக்காதது ஏன்?
ஆளுநர் ஆர்லேகர் விளக்கம்
2 mins
May 08, 2026
Dinamani Tiruchy
ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு
தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்
1 min
May 08, 2026
Dinamani Tiruchy
ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்
களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
May 08, 2026
Dinamani Tiruchy
திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
1 min
May 06, 2026
Dinamani Tiruchy
வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!
ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.
3 mins
May 06, 2026
Dinamani Tiruchy
மக்கள் முடிவை மனபூர்வமாக ஏற்கிறோம்
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அளித்த முடிவை மனபூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
1 min
May 06, 2026
Dinamani Tiruchy
விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.
1 mins
May 05, 2026
Translate
Change font size
