Try GOLD - Free
கவனம் பெற வேண்டும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி!
Dinamani Thanjavur
|August 02, 2025
பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய ஒரே இடம் பூமி. அதைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 22-ஆம் தேதி பூமி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 'எங்கள் சக்தி, எங்கள் கிரகம்' என்ற கருப்பொருளுடன் பூமி தினம் கொண்டாடப்பட்டது. அதாவது, பூமியில் வற்றாது கிடைக்கும் ஆற்றல்களைக் கொண்டு பூமியைப் பாதுகாக்க வேண்டும் என்பது இதன் உட்கருத்தாகும்.
நம் ஆற்றல் தேவைக்கு நிலக்கரி, பெட்ரோலியப் பொருள்கள் உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள்களைப் பயன்படுத்துகிறோம். இவை வெளியேற்றும் பசுமை இல்ல வாயுக்கள், புவி வெப்பமடைதலுக்கு நேரடியாகப் பங்களிக்கின்றன. சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்துகின்றன.
சூரியன், காற்று, நீர், புவிவெப்பம், உயிரிஆற்றல் மற்றும் கடல் அலைகள் போன்றவை புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அளிக்கின்றன. இவை தீர்ந்துபோகாதவை மற்றும் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடியவை. உலகின் மொத்த எரிசக்தி நுகர்வில், இந்தியா 5-ஆவது இடத்தில் உள்ளது. எரிசக்தித் தேவைகள் ஆண்டுக்கு 3 சதவீதம் அதிகரித்து வருகிறது. நாட்டின் மின்சார உற்பத்தியில் நிலக்கரியின் பங்கு 74 சதவீதமாகும். இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல; நாம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தொழில்நுட்பங்களை நோக்கிச் செல்ல வேண்டியது அவசியம். 2070-க்குள் இந்தியா பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்கிற நிலையை அடைந்துவிடும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருக்கிறார்.
சூரியசக்தி, காற்றாலை, உயிரி எரிசக்தி, புவிவெப்ப ஆற்றல், பெருங்கடல் ஆற்றல், அலை ஆற்றல், ஓடிஇசி (இது கடலின் சூடான மேற்பரப்பு நீர் மற்றும் குளிர்ந்த ஆழமான நீர் ஆகியவற்றுக்கு இடையேயான வெப்பநிலை வேறுபாட்டிலிருந்து பெறப்படும் ஆற்றல்) போன்றவை மூலம் இந்தியா, புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
This story is from the August 02, 2025 edition of Dinamani Thanjavur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thanjavur
Dinamani Thanjavur
தேசிய பங்குச் சந்தையின் ரூ.30,000 கோடி ஐபிஓ
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) சுமார் ரூ.30,000 கோடி மதிப்பிலான தனது பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) முதல் கட்ட வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Thanjavur
பேரவை நேரலை தொடரும்: அமைச்சர் ராஜ் மோகன்
தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவது தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ராஜ்மோகன் தெரிவித்தார்.
1 min
June 19, 2026
Dinamani Thanjavur
ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போர்ச்சுகல் போராட்டம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆர் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.
1 min
June 19, 2026
Dinamani Thanjavur
எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு 60% பங்கு ஒதுக்க ஆர்பிஎல் வங்கி வாரியம் ஒப்புதல்
துபையைச் சேர்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு, இந்தியாவின் தனியார் துறையைச் சேர்ந்த ஆர்பிஎல் வங்கியின் 60 சதவீத பங்குகளை ஒதுக்க அதன் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Thanjavur
உலகக் கோப்பை குத்துச்சண்டை: மீனாட்சி காலிறுதிக்குத் தகுதி
உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ் 2) போட்டியில் இந்தியாவின் மீனாட்சி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
1 min
June 19, 2026
Dinamani Thanjavur
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: இடைக்கால நிவாரணம் அறிவிப்பு
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (டேப்ஸ்) இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும் வரை கடந்த ஜன.1-ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டும் அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 இதில் எது அதிகமோ அந்தத் தொகை இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Thanjavur
திமுகவை இயக்குவது பாஜகதான்
உதயநிதிக்கு அமைச்சர் பதில்
1 min
June 19, 2026
Dinamani Thanjavur
உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் உலக சாம்பியன் ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா.
1 min
June 19, 2026
Dinamani Thanjavur
27 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை
நீலகிரி, கோவை, ஈரோடு உள்பட 27 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Thanjavur
சமரசத்தின் விலை உயிர்களா?
தில்லியில் அண்மையில் நிகழ்ந்த கட்டட விபத்து மற்றும் ஹௌஸ் ரானி தங்கும் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தைத் தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
2 mins
June 19, 2026
Translate
Change font size

