Try GOLD - Free
முறைகேடுகளுக்கு வேண்டும் முடிவு!
Dinamani Thanjavur
|May 27, 2025
போட்டித் தேர்வுகள் என்பது மாணவர்களை ஊக்கப்படுத்துவதாக இருக்க வேண்டும். 12 ஆண்டுகள் பள்ளிகளில் பயின்று மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் அதைக் கணக்கில் கொள்ளாமல், சில மணிநேர தேர்வை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வது நியாயமா என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை.
இந்திய அளவில் உயர்நிலைக் கல்வியில் தமிழகமே முதலிடத்தில் உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழகக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை கல்வியை முன்னேற்றப் பயன்படும் என்றாலும், மாணவர்களின் நோக்கம் மருத்துவப் படிப்பிலேயே இருக்கிறது.
வெற்றிபெற வேண்டுமென்ற இலக்கு இருக்குமானால் எந்தத் துறையிலும் சிகரத்தைத் தொடமுடியும். ஆனால், மருத்துவம் கிடைக்காவிட்டால் வாழ்க்கையே இல்லை என்று எண்ணி தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம் என்றுதான் கூறவேண்டும். கல்வியாளர்களின் அறிவுரை மாணவர்களிடம் சென்று சேர்ந்ததாகத் தெரியவில்லை.
மருத்துவக் கனவுக்கு 'நீட்' தேர்வு எழுத வேண்டும் என்பதை மத்திய அரசு விடாப்பிடியான கொள்கையாகக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு இதற்கு 'விலக்கு' அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது. என்றாலும், இதுவரை இதற்கு முடிவும், விடிவும் ஏற்படவில்லை.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான 'நீட்' நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு கடந்த மே 4 அன்று நடைபெற்றது. தேர்வு மைய நுழைவாயிலில் காவல் துறையினரும், தேர்வை நடத்தக்கூடிய தேசிய தேர்வு முகமை சார்பில் நியமிக்கப்பட்ட பணியாளர்களும் தீவிர சோதனைகள் நடத்தினர்.
கடந்த ஆண்டு (2024) வினாத்தாள் கசிவு விவகாரம் இன்னும் முடியவில்லை. வழக்குகள் தொடர்கின்றன. முறைகேடுகளும் குறைபாடுகளும் தொடர்கின்றன.
இளநிலை மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வில் (நீட்) முறைகேட்டில் ஈடுபட்டதாக 2024-25 கல்வியாண்டில் இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) சேர்ந்த 14 மாணவர்களின் சேர்க்கையை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ரத்துசெய்து ஆணையிட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய மேலும் 26 எம்.பி.பி.எஸ். மாணவர்களை உடனடி இடைநீக்கம் செய்யவும் என்எம்சி உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
This story is from the May 27, 2025 edition of Dinamani Thanjavur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thanjavur
Dinamani Thanjavur
ஆட்சியமைக்க தவெகவை அழைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆட்சி அமைப்பதற்கு அழைக்குமாறு தமிழக ஆளுநர் ஆர். வி. ஆர். லேகர் அவர்களுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min
May 09, 2026
Dinamani Thanjavur
தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.
1 mins
May 09, 2026
Dinamani Thanjavur
மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!
தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
2 mins
May 08, 2026
Dinamani Thanjavur
ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு
தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்
1 min
May 08, 2026
Dinamani Thanjavur
முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்
பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.
2 mins
May 08, 2026
Dinamani Thanjavur
பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி
இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை
1 min
May 08, 2026
Dinamani Thanjavur
அரசாணையால் ஆபத்து!
மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.
3 mins
May 08, 2026
Dinamani Thanjavur
ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்
களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
May 08, 2026
Dinamani Thanjavur
மக்கள் முடிவை மனபூர்வமாக ஏற்கிறோம்
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அளித்த முடிவை மனபூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
1 min
May 06, 2026
Dinamani Thanjavur
திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
1 min
May 06, 2026
Translate
Change font size
