Facebook Pixel இதழியலின் அஞ்சா நெஞ்சர்! | Dinamani Tenkasi - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

இதழியலின் அஞ்சா நெஞ்சர்!

Dinamani Tenkasi

|

April 18, 2025

இந்திய ஜனநாயக வரலாற்றில் கரும்புள்ளியாகக் கருதப்படுவது அவசரநிலை காலம் (1975-1977). பத்திரிகைச் சுதந்திரம் இருளில் மூழ்கிய நாள்கள் அவை.

உண்மைச் செய்திகளால் நிரம்பியிருக்க வேண்டிய பத்திரிகைகளின் பக்கங்கள், அரசின் அடக்குமுறையால் வெறுமையாக வெளிவந்தன.

அழுத்தங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், உண்மையை ஒலிக்க யாருக்கும் அஞ்சாத சிலரின் குரல்களை அடக்க முடியாது. அந்த மிடுக்கான மனிதர்களில் முக்கியமானவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை குழுமத்தின் நிறுவனர்-தலைவரான ராம்நாத் கோயங்கா.

ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராக தனது அனைத்துப் பத்திரிகைகளையும் காலவரையின்றி மூடி சுதந்திரப் போரில் பங்கெடுத்த ராம்நாத் கோயங்கா, அவசரநிலையின்போது அதிகார மையம் கட்டவிழ்த்த சவால்களை மீறி தன்னுடைய பத்திரிகைகளைத் தொடர்ந்து நடத்தி கருத்துரிமையை நிலைநிறுத்தி பத்திரிகைச் சுதந்திரத்தின் காவலராகத் திகழ்ந்தார்.

அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள மாகாணம், தற்போதைய பிகார் மாநிலத்தின் வட பகுதியான தர்பங்காவில் 1904-இல் பிறந்த ராம்நாத் கோயங்கா, வணிகம் செய்வதற்காக சென்னைக்கு வந்தார். ராம்நாத் கோயங்காவுக்கு சென்னை வெறும் வியாபார இடமாக மட்டுமல்லாமல் சமுதாயம், அரசியல் புரிதலுக்கான ஒரு வளமான மேடையாகவும் மாறியது.

நகரின் மேல்தட்டு மக்களிலிருந்து எளியோர் வரை அனைவரிடமும் கலந்து பழகி, சமுதாயத்தின் கட்டமைப்பையும் அதன் பிரச்னைகளையும் மக்களின் தேவைகளையும் நன்கு தெரிந்துகொண்டார்.

22 வயது இளைஞராக ராம்நாத் கோயங்காவின் சமுதாயநல ஆவலை உற்றுநோக்கிய சென்னை நிர்வாகம், 1926-இல் தமிழ்நாடு சட்டமேலவை உறுப்பினராக அவரை நியமித்தது. அரசின் நியமனப் பதவியாக இருந்தாலும், மக்களின் நலனுக்காக அதை முழுமையாகப் பயன்படுத்தி, அரசின் தவறுகளையும் குறைகளையும் உரைக்கத் தயங்காத அவரது நேர்மை பலரை வெகுவாகக் கவர்ந்தது.

சுதந்திர வேட்கை வேரூன்றியிருந்த அவர், தேசபற்றுக் கொண்ட பத்திரிகைகள் வளம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்வராஜ்யா, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிகைகளுக்கு நிதி ரீதியாக ஆதரவளித்தார். அந்த வகையில்தான், 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்', 'தினமணி' ஆகிய நாளேடுகளின் பெரும்பான்மைப் பங்குதாரராகவும் உரிமையாளராகவும் ஆனார் ராம்நாத் கோயங்கா.

MORE STORIES FROM Dinamani Tenkasi

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

சிந்து முன்னேற்றம்; தன்வி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

June 13, 2026

Dinamani Tenkasi

உலகின் முதல் டிரில்லியனரானார் எலான் மஸ்க்!

'ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம், அந்நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுத்துள்ளார்.

time to read

1 mins

June 13, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

ஒருநாள் ஆட்டம்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல்முறையாக மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Tenkasi

குறுவை நெல் சாகுபடிக்கு ரூ.135 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம்

முதல்வர் விஜய் அறிவிப்பு

time to read

1 mins

June 13, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

ஓய்வு பெற்றார் கேன் வில்லியம்சன்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக, நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் (35) வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

June 13, 2026

Dinamani Tenkasi

வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்பு

நாட்டின் வங்கிக் கடன் வழங்கல் கடந்த மே மாதத்தில், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 17.44 சதவீதம் அதிகரித்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Tenkasi

சில்லறை பணவீக்கம் 3.93%

உணவு மற்றும் எரிபொருள்களின் விலை அதிகரிப்பால், கடந்த மே மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.93 சதவீதமாக அதிகரித்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Tenkasi

தொடங்கியது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்

ஐசிசி-யின் 10-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Tenkasi

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 12) தண்ணீர் திறக்கப்படவில்லை.

time to read

1 min

June 13, 2026

Dinamani Tenkasi

அமெரிக்கா-ஈரான் போர்: நாளை அமைதி ஒப்பந்தம்?

'அமெரிக்கா- ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) கையொப்பமாகலாம்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

time to read

1 min

June 13, 2026

Translate

Share

-
+

Change font size