Facebook Pixel இருதரப்பு உறவின் புதிய அத்தியாயம் | Dinamani Ramanathapuram & Sivagangai - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

இருதரப்பு உறவின் புதிய அத்தியாயம்

Dinamani Ramanathapuram & Sivagangai

|

April 19, 2026

குடியரசு துணைத் தலைவரின் முதல் இலங்கைப் பயணம்

- நமது சிறப்பு நிருபர்

இருதரப்பு உறவின் புதிய அத்தியாயம்

இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஏப்ரல் 19, 20 ஆகிய தேதிகளில் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அதிலும், குடியரசு துணைத் தலைவரான பிறகு சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் என்பதாலும், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதாலும் இந்தப் பயணம் இரு நாடுகளிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு, 2000-ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியாவின் அப்போதைய குடியரசு துணைத் தலைவர் (கிருஷண் காந்த்) இலங்கை முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் இறுதிச் சடங்குக்காக இலங்கைக்குச் சென்றார்.

இரண்டு தெற்காசிய அண்டை நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவில் இந்திய குடியரசு துணைத் தலைவரின் இலங்கைக்கான அரசுமுறைப் பயணம் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடும் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அந்த வகையில் சி.பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைப் பயணம், வெறும் சம்பிரதாய நிகழ்வாக மட்டுமன்றி இந்தியாவிலும் இலங்கையிலும் அரசியல் சூழல்கள் மாறிவரும் காலகட்டத்தில், மிகச் சிறந்த ராஜீய ரீதியிலான ஒருங்கிணைப்பாகவும் கருதப்படுகிறது.

இலங்கையில் தங்கியிருக்கும் இரண்டு நாள்களிலும், குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது முதல் நாள் அலுவலிலேயே (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

இதைத் தொடர்ந்து, இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் குடியரசு துணைத் தலைவர் சந்திக்கவுள்ளார். இத்தகைய உயர்நிலை சந்திப்புகள் நீங்கலாக, தனது பயணத்தின்போது 'தமிழன்' பத்திரிகை ஆசிரியர் சிவராஜ், அகில இலங்கை கம்பன் கழக நிறுவனர் இலங்கை ஜெயராஜ் மற்றும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ்ச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களையும் குடியரசு துணைத் தலைவர் சந்திக்க உள்ளார்.

MORE STORIES FROM Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லாபம் 28% வளர்ச்சி

தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் துறையைச் சேர்ந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.

time to read

1 min

April 30, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தேரோட்டம்

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

time to read

1 mins

April 30, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

இந்தியாவை வென்றது சீனா

தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

April 30, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு

time to read

1 min

April 30, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்

அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இது வரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

time to read

2 mins

April 30, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

சிட்டி யூனியன் வங்கிக்கு புதிய நிர்வாக இயக்குநர்

கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக விஜய் ஆனந்த் வரும் மே 1-ஆம் தேதி முதல் பொறுப்பேற்கவுள்ளார்.

time to read

1 min

April 30, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

இந்தியன் வங்கி லாபம் ரூ.3,103 கோடி

பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.

time to read

1 min

April 30, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை: 3 நாள்கள் கூடுதல் அவகாசம்

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்

time to read

1 min

April 30, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை: தவெக

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நாளான மே 4-இல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

April 30, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

ரைபகினா, கௌஃப் அதிர்ச்சித் தோல்வி; பொடாபோவா, சின்னர் வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான எலனா ரைபகினா, கோகோ கௌஃப் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து செவ்வாய்க்கிழமை வெளியேறினர்.

time to read

1 min

April 29, 2026

Listen

Translate

Share

-
+

Change font size