Facebook Pixel புதிய தலைமை மலர்கிறது! | Dinamani Perambalur & Ariyalur - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

புதிய தலைமை மலர்கிறது!

Dinamani Perambalur & Ariyalur

|

October 22, 2025

காந்தியம் தேங்காத நீரோடை; காந்தியர்கள் தேங்குவார்கள்; காந்தியம் தேங்காது. அதற்கான தலைமை இருந்தால் அது பயணித்துக் கொண்டேயிருக்கும். நாம் இன்று களத்தில் புதுமைக் காந்தியர்களை மக்களுடன் செயல்பாட்டில் பார்க்கிறோம். அது நமக்கு புது நம்பிக்கையைத் தருகிறது. இவர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இவர்களின் பணிகள் என்னென்ன? இவர்கள் சாதாரண இளைஞர்கள்தான்; வெளிநாட்டிலிருந்து வரவில்லை.

- கட்டுரையாளர்: பேராசிரியர்.

புதிய தலைமை மலர்கிறது!

தங்கள் சமூகத்தின் மீதும், நாட்டின் மீதும் எல்லையற்ற நம்பிக்கை கொண்டு செயல்படும் மாமனிதர்கள். இவர்கள் மகாத்மா காந்தியை ஆழமாக உள்வாங்கிக் கொண்டு, காந்தியச் செயல்பாடுகளில் வெற்றி பெற்ற மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களின் அனுபவங்களையும் பெற்று, களத்தில் இருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வை நோக்கிச் செயல்பட முனைந்தவர்கள். இவர்கள் தங்களை நிறுவனமாக்கிக் கொள்ளாமல் செயல்களுக்கான இயக்கமாக தங்களை வடிவமைத்துக் கொண்டு செயல்படும் இளைஞர்கள்.

காந்தியச் செயல்பாடுகள் தேக்கமடைவதுபோல் இன்று ஓர் உரையாடல் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நேரத்தில் இவர்களின் வரவு காந்தியச் செயல்பாடுகளுக்கு புது ரத்தம் பாய்ச்சுவதுபோல் இருக்கிறது. இவர்கள் உண்மையான காந்திய தியாக தீபங்களைத் தேடிக் கண்டறிந்து அவர்கள் செய்த பணிகளைப் புதுப்பித்து, செயல்களில் கரைந்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்குப் பின்புலம் என்பது இவர்களின் சமூகச் செயல்பாடுகள் மட்டும்தான்.

இவர்கள் தங்கள் செயல்களின் மூலம் தவிர்க்கப்பட முடியாத மனிதர்களாக, சமூகம் தேடும் மனிதர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இவர்களின் தனிச் சிறப்பு. சென் புத்தமதத் துறவிகளைப்போல் சாதாரண மனிதர்களாகவே தங்களைக் காட்டிக் கொண்டு, மற்றவர்கள் செய்ய இயலாத செயல்களையெல்லாம் எடுத்துச் செயல்பட்டு வெற்றிபெறச் செய்கிறார்கள். அந்நியப்பட்டுப்போன மக்களுக்கு இவர்களின் செயல்களெல்லாம் இறைச் செயலாகவே தோன்றுகின்றன. இவர்களின் தனித்துவம் மக்களுடன் இருப்பது, இணைந்து செயல்படுவது.

இவர்களில் சிலர் காந்திய வேர்களைத் தொடர்ந்து நாடிச் சென்று, அதைத்தேடிக் கண்டறிந்து அதற்கு புத்துயிர் ஊட்டி புது வடிவம் தந்து செயல்படுகின்றனர். இவற்றைப் பார்த்த நமக்கு காந்தியத்தை செயல்களால் உயர்த்தும் உயர்சக்தி இவர்களிடம் இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. இவர்களின் செயலைப் பார்க்கும்போது இவர்களைத்தான் விவேகானந்தர் தேடினாரோ, இவர்கள்தான் மகாத்மா காந்தி தயார் செய்ய எண்ணிய நிர்மாண ஊழியர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

MORE STORIES FROM Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

சந்திர தோஷம் விலக...

சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

காணிக்கையாக சிலைகள்!

அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.

time to read

1 mins

June 12, 2026

Dinamani Perambalur & Ariyalur

திமுக கூட்டணியில் நீடிப்பதா ?: ஜூன் 27-இல் மதிமுக முடிவு

திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்துவரும் 27- ஆம் தேதி நடைபெறும் கட்சியின் பொதுக் குழுவில் முடிவு செய்யப்படும் என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Perambalur & Ariyalur

'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்

இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வென்றது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Perambalur & Ariyalur

தொடர வேண்டும் மாற்றம்

உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Perambalur & Ariyalur

பெண்ணைக் கொன்று தற்கொலை நாடகம்: தாய், சகோதரர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே இன்ஸ்டாகிராமில் இளைஞரை காதலித்த பெண்ணை கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய அவரது தாய் மற்றும் சகோதரரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

பிரதமருக்கு தமிழ் வணக்கம்

உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

time to read

3 mins

June 12, 2026

Dinamani Perambalur & Ariyalur

காவலர்கள் மீது வழக்கு தொடுக்கும் விவகாரம்: தமிழக உள் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் அனைத்து நிலை காவலர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் வழக்கு தொடுக்க அரசின் முன்அனுமதி தேவை என பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக உள் துறைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Perambalur & Ariyalur

இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!

இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Perambalur & Ariyalur

உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்

ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.

time to read

1 min

June 12, 2026

Listen

Translate

Share

-
+

Change font size