Facebook Pixel நெஞ்சொடு கிளத்தல் | Dinamani Namakkal - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

நெஞ்சொடு கிளத்தல்

Dinamani Namakkal

|

December 28, 2025

ஒரு செய்தியை யாரிடமும் கூறமுடியாததாக இருப்பின் என்ன செய்வது?

- முதுமுனைவர் அரங்க. பாரி

நெஞ்சொடு கிளத்தல்

அதைத் தன் நெஞ்சுக்குக் கூறிக்கொள்வதே நெஞ்சொடு கிளத்தலாகும்.யாரிடமாவது சொல்லியே தீரவேண்டுமென்ற நிலையில், யாரிடமாவது சொன்னால், தன்னைக் குறித்தே நிலை இறங்க நினைக்கக்கூடும் என்ற நினைப்பில் ஒருவன் அல்லது ஒருத்தி தன் நெஞ்சிற்கு உரைத்துக் கொள்வது எல்லாரிடத்தும் நிகழ்வதே. இதனை ஒரு சுவையான பாடுபொருளாக்கி விடுகிறான் அகத்திணைப்புலவன்.

ஒரு செய்தியை ஊரெங்கும் பரப்ப வேண்டுமென்றால் இதை உனக்கு மட்டும் சொல்கிறேன். வேறுயாருக்கும் சொல்லி விடாதே' என்று அதை ஒரு பெண்ணிடம் கூறினால் போதும்; அது ஊரெங்கும் பரவி விடும். மனித மனம் தகவல் தொடர்பை இயற்கைக் குணமாகக் கொண்டது. 'கேட்டாயா செய்தியை', 'இது உனக்குத் தெரியுமா', 'காதோடு சொல்கிறேன் கேள்', 'இது நமக்குள்கூட இருக்கட்டும்', 'வெளியில் விட்டு விடாதே' என்பனவெல்லாம் ஒரு செய்தியைக் கமுக்கமாக வைத்துக்கொள்ள உதவுவதில்லை.

ராஜாவுக்கு கழுதை காது என்ற இரகசியத்தை அரண்மனைச் சேவகன் தன்னுள் அடக்கி வைத்துக் கொள்ள முடியாமல், தன் மனைவியிடம் சொல்ல அவள் மற்றவரிடம் கூற ஊர் முழுவதும் அச்செய்தி பரவிவிட்டதைக் கலைவாணர் திரைப்படத்தில் சுவையான நிகழ்ச்சியாக்கிக் காட்டுகிறார்.

நெஞ்சொடு கிளத்தலில் இந்த இடையூறில்லை. பாலுறவு தொடர்பான செய்திகளைச் செய்யுளில் புனைந்து காட்ட நெஞ்சொடுகிளத்தல் பெரிதும் துணையாகும்.

MORE STORIES FROM Dinamani Namakkal

Dinamani Namakkal

ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்

கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Namakkal

சோழர் கால செப்பேடுகளை காட்சிப்படுத்த வேண்டும்

நெதர்லாந்து ஒப்படைத்த ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகளை நாகையில் பாதுகாப்புடன் காட்சிப்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Namakkal

15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்பட 15 மாவட்டங்களுக்கு திங்கள் கிழமை (மே 18) பலத்தமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

May 18, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

தமிழக ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 15,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு 10 நாள்களுக்குப் பதிலாக 30 நாள்கள் வேலை வழங்குவதுடன், அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Namakkal

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு

பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி

time to read

1 mins

May 18, 2026

Dinamani Namakkal

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு

ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

இலங்கையில் சீனக் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுகம் அருகே விமான நிலையம் குத்தகை

இலங்கையில் சீனக் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகில் இருக்கும் மத்தள ராஜபட்ச சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் இலங்கையின் நடவடிக்கையை, இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 mins

May 18, 2026

Listen

Translate

Share

-
+

Change font size