Try GOLD - Free
உரிமையாளர் அடைய முடியாத உரிமை
Dinamani Namakkal
|December 08, 2025
"'உங்கள் பணம், உங்கள் அதிகாரம்' -என்பது மத்திய நிதியமைச்சர் கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின் தலைப்பு.
இதன் மூலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மூன்று மாத காலத்துக்கு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதி, பங்கு முதலீடு, பங்குகளுக்கான ஈவுத் தொகை என உரிமை கோரப்படாமல் உள்ள ரூ. 1.84 லட்சம் கோடியை அதற்கு உரிமையுள்ள நபர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.ஆனால், உண்மையில் மக்கள் கைகளில் கொண்டு சேர்க்க வேண்டிய கோரப்பட்டாத நிதி இதைவிட அதி மானது. 9.22 கோடி கணக்குகளில் உள்ள ரூ.3.5 லட்சம் கோடி உரிமை கோரப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது. இவை அனைத்தையும் உண்மையான உரிமையாளர்களிடம் சேர்க்க முயற்சித்திருந்தால் நிதியமைச்சருக்கு மேலும் பாராட்டு கள் கிடைத்திருக்கும். ஆனால், நாம் எதிர் பார்க்கும் நடவடிக்கை இப்போதைக்கு எடுக்கப்படாது என்றே தெரிகிறது.
உரிமைகோராத நிதியை திரும்ப ஒப்படைக்க இப்போது எடுக்கப்படும் நடவடிக்கையைப் பார்த்தால், மகாத்மா காந்திக்கு மிகவும் விருப்பமான பிரார்த்தனைப் பாடலான 'வைஷ்ணவ ஜனதோ' பாடலில் வரும் 'ஒருவர் அடுத்தவரின் செல்வத்தைக் கண்டிப்பாகத் தொடக்கூடாது' என்ற கருத்தையோ, 'திருடாமை' என்ற தர்மத்தையோ முழுமையாக கடைப் பிடிக்க முடியாது என்றே தோன்றுகிறது.
வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் பல ஆண்டுகளாக கேட்பாரற்றுக் கிடக்கும் இந்தப் பெரும் தொகையை அரசு பல ஆண்டுகளாக பராமரித்து வருகின்றன. அதை உரியவர்களுக்கு திருப்பிக் கொடுப்பதற்குப் பதிலாக, தாம் விரும்பும் பொதுநலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமே அதிகமாக இருந்தது. அந்தப் பணத்தை பொதுநலனுக்காக செலவிடலாம் என்பது அரசின் நோக்கமாக இருந்தாலும், அது அரசின் வருவாய் அல்ல, பலர் கடினமாக உழைத்து சம்பாதித்த பணம் என்பதே உண்மை. எனவே, அரசு இந்தப் பணத்தை தனது எண்ணப்படி செலவிட முடியாது.
கடந்த 2014-ஆம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டெபாசிட் தாரர்கள் விழிப்புணர்வு நிதியத்தை உருவாக்கியது. இதன் மூலம் வங்கிகள் தங்களிடம் உள்ள உரிமைகோரப்படாத நிதியை இந்த நிதியத்துக்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டது. 10 ஆண்டுகளாக எவ்வித பரிமாற்றமும் இல்லாத வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இந்த நிதியத்துக்கு மாற்ற அனுமதிக்கப்பட்டது. இதன் மூலம் வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும் பணத்தில் கைவைக்கும் அரசின் நோக்கமும் வெளிப்பட்டது.
This story is from the December 08, 2025 edition of Dinamani Namakkal.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Namakkal
Dinamani Namakkal
4-ஆம் காலாண்டு: தனியார் வங்கிகளை முந்தும் பொதுத் துறை வங்கிகள்!
நிதிநிலை முடிவுகள் | லாபம் மற்றும் கடன் வளர்ச்சியில் அதிரடி
1 min
May 14, 2026
Dinamani Namakkal
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் குறைவு
1 min
May 14, 2026
Dinamani Namakkal
மேற்கு வங்க சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு
மேற்கு வங்க சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் புதன்கிழமை பதவியேற்றனர்.
1 min
May 14, 2026
Dinamani Namakkal
எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் கட்சிப் பதவிகள் பறிப்பு
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 mins
May 14, 2026
Dinamani Namakkal
ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?
தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
May 14, 2026
Dinamani Namakkal
பிலிப்பின்ஸ் செனட் சபையில் துப்பாக்கிச் சூடு
பிலிப்பின்ஸ் நாட்டின் நாடாளுமன்ற மேலவையான செனட் சபை கட்டடத்தில் புதன்கிழமை துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min
May 14, 2026
Dinamani Namakkal
பாதுகாப்பு வாகனங்களைக் குறைத்தார் பிரதமர் மோடி
எரிபொருள் சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தனது பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
1 min
May 14, 2026
Dinamani Namakkal
மாற்று அரசியலைக் கொண்டுவருவதில் தவெக உறுதி
உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதில்
1 mins
May 14, 2026
Dinamani Namakkal
5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்
இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்
2 mins
May 14, 2026
Dinamani Namakkal
திமுகவுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை
திமுகவுடன் ஒரு போதும் பேச்சுவார்த்தை நடத்த வில்லை என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Listen
Translate
Change font size
