Try GOLD - Free
அறிவின் அமுதூற்று ‘நூலகம்’!
Dinamani Namakkal
|August 12, 2025
மக்களைக் கொன்றால் ஒரு தலைமுறையைத்தான் அழிக்க முடியும்; அதேநேரத்தில், நூலகங்களை அழித்தால் ஒட்டுமொத்தமாக ஓர் இனத்தின் அடையாளத்தையே அழித்துவிட முடியும். அதைத்தான் சாம்ராஜ்யங்களைக் கைப்பற்றியவர்கள் செய்தார்கள்.
இந்திய நூலக அறிவியலின் தந்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலகருமான முனைவர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் பிறந்த நாளைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தேசிய நூலக தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக, ஒரு நாட்டின் நூலக வளர்ச்சியைக் கொண்டே அந்த நாட்டின் அறிவுச் செழுமை அளவிடப்படுகிறது. இந்தியாவில் தற்போது எங்கெங்கும் தேர்வுப் பயிற்சிக் களங்களும், உயர் பதவி தேர்வுக்கூடங்களும் பரவியிருக்கின்றன. அந்த மாணவர்களுக்கு விருந்தோம்புகைகளாக நூலகங்கள்தான் மிளிர் கின்றன. எங்கள் நூலகத்தை எந்த நேரமும் நாங்கள் மூடுவதில்லை என்று அறிவிக்கும் நூலகங்கள் வளர்ந்து வருகின்றன.
நடமாடும் நூலகங்கள் வீதி முனைகளில் நிற்பதெல்லாம் நமக்குப் பெருமையாக இருக்கிறது. நூலக விழாக்கள், நூலக இதழ்கள் பெருகி வருகின்றன. புத்தகங்கள் படிப்பது மூளைக்கு நலமளிக்கக்கூடிய ஒன்று. புதிய சிந்தனைகள் தோன்றுவதற்கும், அறிவாற்றலைப் பெருக்கிக்கொள்ளவும், சவால்களை எதிர்கொள்வதற்கும், எழுத்தாளராக உருவாகவும், வெளிப்படையான அறிவார்ந்த உரையாடல்கள் நடத்தவும் புத்தகங்கள் படிப்பது அவசியமாகிறது.
கி.மு. 300-ஆம் ஆண்டில் எகிப்து நாட்டின் அருமை-பெருமைகளைக் கேட்டு வியந்த மாவீரன் அலெக்சாண்டர், எகிப்தின் எழிலில் மயங்கி ‘அலெக்சாண்டிரியா’ என்ற நகரை உருவாக்கினார். அங்குதான் மிகப் பெரிய நூலகத்தை எழுப்பினார். உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களை எல்லாம் திரட்டி 10 லட்சம் புத்தகங்களை அந்த நூலகத்தில் வைத்தார்.
அந்தப் புத்தகங்களைப் படிப்பதற்காகவே உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் அறிஞர்கள் அலெக்சாண்டிரியாவுக்கு வந்தனர். அங்கிருந்துதான் உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் தத்துவங்கள், விஞ்ஞானம், அளவையியல், புவியியல், சமய தத்துவார்த்தங்கள் பரவத் தொடங்கின.
எகிப்தியர்கள் பாப்பிரஸ் (தருப்பை) புல்லில் தயாரிக்கப்பட்ட ஏடுகளில் எழுதி அலெக்சாண்டிரியாவில் இருந்த நூலகத்தில் சேமித்து வைத்திருந்தனர். ரோமானியர்களில் புகழ்வாய்ந்த ஜூலியஸ் சீசர், ரோம் நாட்டில் வாழ்ந்த வசதியானவர்களிடம் நன்கொடை வாங்கி பொது நூலகங்களை அமைத்தார். கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் இப்படி 28 பொது நூலகங்கள் நிறுவப்பட்டிருந்தன.
This story is from the August 12, 2025 edition of Dinamani Namakkal.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Namakkal
Dinamani Namakkal
'சின்ன விஷயமா இது!'
தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.
3 mins
June 30, 2026
Dinamani Namakkal
செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
1 min
June 30, 2026
Dinamani Namakkal
புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் எம்.எம். லகேரா காலமானார்
புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் லெப்டினென்ட் ஜெனரல் எம்.எம். லகேரா (89) வயது முதிர்வு காரணமாக டேராடூனில் உள்ள தனது இல்லத்தில் திங்கள்கிழமை (ஜூன் 29) காலமானார்.
1 min
June 30, 2026
Dinamani Namakkal
ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் தொடர்ந்து விசாரிக்கப்படும்
ராஜிநாமா செய்த அதிமுக எம்எல்ஏ-க்கள் நான்கு பேர் மீதான தகுதி நீக்க மனுக்கள் பேரவைத் தலைவரால் தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப்பேரவைச் செயலர் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.
1 mins
June 30, 2026
Dinamani Namakkal
முதலீட்டு வங்கிச் சேவையில் ஜெரோதா
பிரபல இணையவழி பங்குத் தரகு நிறுவனமான 'ஜெரோதா', தனது நிதிச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மெர்சன்ட் பேங்கிங் (முதலீட்டு வங்கிச் சேவை) உரிமம் கோரி இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Namakkal
கோவில் திருவிழாக்களில் சமூக ஏற்றத் தாழ்வுகளை அங்கீகரிக்கக் கூடாது
கோயில் திருவிழாக்களில் சமூக ஏற்றத் தாழ்வுகளை அங்கீகரிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தெரிவித்தது.
1 min
June 30, 2026
Dinamani Namakkal
கார்கே உள்பட 8 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்பு
மாநிலங்களவைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்பட 8 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக திங்கள்கிழமை பதவியேற்றனர்.
1 min
June 30, 2026
Dinamani Namakkal
மே மாத தொழில் உற்பத்தி வளர்ச்சி 5.1%
நாட்டின் தொழில் துறை உற்பத்தி (ஐஐபி) வளர்ச்சி, கடந்த மே மாதத்தில் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Namakkal
2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
June 30, 2026
Dinamani Namakkal
பெட்ரோல், டீசல் மீதான கட்டுப்பாடுகள்: ஜூலை 1 முதல் நீக்கும் மத்திய அரசு
மேற்காசிய போரால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, வணிக மற்றும் தொழில்நிறுவன நுகர்வோருக்கு பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை புதன்கிழமை (ஜூலை 1) முதல் மத்திய அரசு நீக்க உள்ளது.
1 min
June 30, 2026
Translate
Change font size
