Try GOLD - Free
இளைஞர்களின் வாழ்வு சிறக்க...
Dinamani Namakkal
|June 09, 2025
தற்போதைய படித்த இளைஞர்களிடம் ஏராளமான திறமையும், நேரமும் இருக்கிறது. ஆனால், பணம் இருப்பதில்லை. காரணம், வருமானத்தைக் கொண்டுவரும் வேலை அவர்களுக்கு காலத்தில் கிடைப்பதில்லை. எனவே, நாட்டிலுள்ள வறுமைக்கு அவர்களின் வேலைவாய்ப்பின்மையே ஒரு முக்கியக் காரணமாகத் தெரிகிறது.
பொருளாதாரச் சிக்கல்கள், உள்நாட்டுத் தேவையில் சரிவு, அதீத மக்கள்தொகைப் பெருக்கம், கல்வி வசதிகள் பெருகிய அளவுக்கு வேலைவாய்ப்புகள் நாட்டில் பெருகாதது, நாட்டின் மெதுவான பொருளாதார வளர்ச்சி, பெருகிவரும் தொழில்நுட்ப வளர்ச்சி, மோசமான சந்தைக்கொள்கைகள், குறைந்த முதலீடு, தொழில்முனைவோருக்குக் குறைவான வாய்ப்புகள் போன்றவை இளைஞர்களிடையே காணப்படும் வேலைவாய்ப்பின்மைக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு நலத்திட்டங்களை மக்களுக்கு முறையாகக் கொண்டு சேர்க்கப் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதற்காக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். தலைமைச் செயலர் தொடங்கி, அலுவலக உதவியாளர் வரை உள்ள பல்வேறு துறை ஊழியர்கள் இதில் அடங்குவர். இந்த ஊழியர்கள் 60 வயதை நிறைவு செய்யும் நாளன்று ஓய்வு பெறுவது வழக்கம். தற்போதைய நிலையில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்; சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
This story is from the June 09, 2025 edition of Dinamani Namakkal.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Namakkal
Dinamani Namakkal
ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே முன்னேற்றம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.
1 min
June 24, 2026
Dinamani Namakkal
தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய துரைமுருகன் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
June 24, 2026
Dinamani Namakkal
ஜூன், ஜூலைக்குரிய காவிரி நீரைத் திறக்க தமிழகம் கோரிக்கை
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் திறக்க வேண்டிய உரிய நீரை திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
1 min
June 24, 2026
Dinamani Namakkal
100% தூய்மையான ஆட்சிதான் இலக்கு
'மக்கள் பணத்தை தொடமாட்டோம்; முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்; 100% தூய்மையான ஆட்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.
1 mins
June 24, 2026
Dinamani Namakkal
'திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா'
உண்மையான திரிணமூல் காங்கிரஸ் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜியின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கட்சியின் நிர்வாகிகள் பட்டியலை அவரது அணி செவ்வாய்க்கிழமை அனுப்பியது.
1 mins
June 24, 2026
Dinamani Namakkal
அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), தனது முதல்கட்ட அறிக்கையை மாநில அரசிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.
1 min
June 24, 2026
Dinamani Namakkal
குன்னூர் விநாயகர் கோயில் 'பார்க்கிங்' கட்டும் பணி ரத்து
நீலகிரி மாவட்டம், குன்னூரில் அருள்மிகு விநாயகர் திருக்கோயிலில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அடுக்குநிலை வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
1 min
June 24, 2026
Dinamani Namakkal
மக்களை மையப்படுத்தியே நிர்வாக முடிவுகள்!
இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்
1 mins
June 24, 2026
Dinamani Namakkal
ஐரோப்பாவை வாட்டும் வெப்ப அலை
ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவி வரும் அதிதீவிர வெப்ப அலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
1 min
June 24, 2026
Dinamani Namakkal
ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 11 இந்திய கப்பல்கள்: வெளியுறவு அமைச்சகம்
'ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் கடந்த 17-ஆம் தேதி கையொப்பமான பிறகு, இந்தியா நோக்கி வரும் 11 சரக்கு கப்பல்கள் சர்ச்சைக்குரிய ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்துள்ளன' என்று வெளியுறவு அமைச்சகம் சார்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 mins
June 24, 2026
Translate
Change font size
