Try GOLD - Free
வடக்கிருந்து உயிர் நீத்தல்
Dinamani Namakkal
|June 01, 2025
டக்கே தலைவைத்துப் படுக்காதே என்ற பழங்கூற்றுக்கு அறிவியல் பொருள் கொடுப்பாரும் உண்டு. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று பொருளாதார சமத்துவம் விழைந்தோர் கூறியதுண்டு.
டக்கே தலைவைத்துப் படுக்காதே என்ற பழங்கூற்றுக்கு அறிவியல் பொருள் கொடுப்பாரும் உண்டு. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று பொருளாதார சமத்துவம் விழைந்தோர் கூறியதுண்டு. "வடக்கில் இமயமலை பாப்பா, தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா" என்று இந்திய எல்லைகள் வடக்கும் தெற்கும் இருப்பதைப் பாடினார் பாரதியார். வடக்கே காசியும் தெற்கே இராமேச்சுரமும் புனிதத் தலங்களாகப் பொலிகின்றன.
பண்டையத் தமிழகத்தில் உயிர்விட விரும்புவோர் அமைதியான நெறியில் உண்ணாநோன்பிருந்து வீழ்ந்து உயிர் துறப்பதும், நெருப்பிடை மூழ்குவதும், ஆற்றில் புகுவதும் கடலில் பாய்வதும் என உயிர் போக்கிக் கொள்வது பற்றி கூறப்படுகின்றன. உயிரைப் போக்கிக் கொள்ளப் பல முறைகள் உள்ளன.
நினைந்த அளவில் உள்ளம் நெகிழ்ந்து உயிர் போவதுண்டு. போராடிப் போராடி நெடுநாள் படுக்கையில் கிடந்து உயிர் போவதும் உண்டு.
வாழும் நாளோடு யாண்டு பல உண்மையின் தீர்தல் செல்லாது என் உயிர் (புறம் 159) என்று பெருஞ்சித்திரனார் தம் தாயின் நிலையைப் பாடுவர். "இன்னும் உயிர் போகவில்லையே!" என வருந்துகிறாள் அத்தாய். தானாகப் போகும் காலம் வரை இருந்து உயிரிழத்தல் இயற்கை இறப்பாகும். அதற்கு முன் அதனை மாய்த்துக் கொள்வது சில சூழ்நிலைகளால் நேர்வதாகும்.
"வடக்கிருந்து உயிர்விடுதல்" என்பது தற்கொலையன்று. அது ஒரு நோன்பாகும். சமண தீர்த்தங்கரர்களில் இருபத்து நான்காவது தீர்த்தங்கரர் மகாவீரர் ஆவார். அவர் வடக்கிருந்து உயிர்விட்டார். அவர் உயிர் நீத்த அன்றிரவு, சமண முனிவர்கள் விளக்கேற்றி வைத்து அவரைக் குறித்து நினைவு நெகிழ்ந்து போற்றினர். அந்த நாளின் இரவே தீபாவளியாக உருவெடுத்துப் பிற சமயத்தும் புகுந்தது.
This story is from the June 01, 2025 edition of Dinamani Namakkal.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Namakkal
Dinamani Namakkal
கைலாஷ்-மானசரோவர் யாத்ரீகர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவுறுத்தல்
தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூலம் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், அந்த ஏற்பாட்டாளர்கள் முறையான அங்கீகாரம் பெற்றவர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டுமென வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
1 min
June 29, 2026
Dinamani Namakkal
3 ஆண்டுகள் எல்எல்பி சட்டப் படிப்பு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (டிஎன்டிஏஎல்யு) மற்றும் அதன் இணைவு சட்டக் கல்லூரிகளிலும் மூன்றாண்டுகள் எல்எல்பி சட்டப் பட்டப் படிப்புக்கு இணையம் மூலம் திங்கள்கிழமை முதல் (ஜூன் 29) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 29, 2026
Dinamani Namakkal
பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு
செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
1 mins
June 29, 2026
Dinamani Namakkal
லெபனானில் ஹிஸ்புல்லா மீது சிரியா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்
லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது சிரியா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார்.
1 min
June 29, 2026
Dinamani Namakkal
ஏழு மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10
1 mins
June 29, 2026
Dinamani Namakkal
போதைப் பொருள் இல்லாத இந்தியாவை கட்டமைக்க கூட்டு நடவடிக்கை
போதைப் பொருள் இல்லாத இந்தியாவை கட்டமைக்க கூட்டு நடவடிக்கை தேவை என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
1 min
June 29, 2026
Dinamani Namakkal
பிரான்ஸில் விமான விபத்து: 11 பேர் உயிரிழப்பு
பிரான்ஸில் ஸ்கைடைவிங் சாகச விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் விமானம் தரையில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
1 min
June 29, 2026
Dinamani Namakkal
தென்பெண்ணையாறு நடுவர் மன்றம்: எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள்
கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்குப் பாயும் தென்பெண்ணையாறு விவகாரத்தில் நடுவர் மன்றம் விரைந்து அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
2 mins
June 29, 2026
Dinamani Namakkal
வெனிசுலா சென்றடைந்தது இந்திய நிவாரணப் பொருள்கள்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருள்கள் சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 29, 2026
Dinamani Namakkal
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Translate
Change font size
